சென்னை: கடந்த 3 நாட்களாக தங்கம் விலை குறைந்து கொண்டே வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடந்துள்ளனர்.
அக்டாபர் மாதம் தொடக்கத்தில் குறைந்திருந்த தங்கம் அக்டோபர் முடிவில் ஏற்றம் கண்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாகவே தங்கம் விலை குறைந்துள்ளது. இந்த விலை குறைவால் மிகுந்த மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 208 குறைந்துள்ளது.
கடந்த 3 நாட்களில் தங்கம் சவரனுக்கு ரூ. 656 குறைந்துள்ளது. தீபாவளி, முகூர்த்த நாட்கள் வருவதையொட்டி நகை விலை குறைந்துள்ளதால், வாடிக்கையாளர்கள் கூட்டம் நகைக்கடைகளில் அதிகரித்து வருகிறது. நகை விலை குறைந்திருப்பது ஒரு புரம் மகிழ்ச்சி என்றால், வாடிக்கையாளர்கள் வாங்கும் நகைகளுக்கு கடைக்காரர்கள் விழா காலம் என்பதால் பரிசுகளையும் அள்ளித் தருகின்றனர். இதனால் நகை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இது நல்ல காலம் என்றே செல்லலாம்.
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5686 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 29 ரூபாய் குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 45488 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6203 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 32 ரூபாய் குறைவாகும். 8 கிராம் 24 கேரட்டின் விலை ரூ.49624 ஆக உள்ளது.
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை கிராம் ஒன்றிற்கு 1.20 காசுகள் குறைந்து ரூபாய் 74.10 காசாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 592.80 காசாக உள்ளது. சர்வதேச பங்குச்சந்தைகளில் மந்தமான போக்கு நிலவி வருவதால் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}