சென்னை: தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறியபடியே உள்ளது. இன்றும் அதே நிலைதான்.
செப்டம்பர் மாதம் இறங்கிக் கொண்டிருந்த தங்கம் விலை அக்டாபர் மாதம் உயரத்தொடங்கியது. அக்டோபர் மாத தொடக்கத்தில் உயர்ந்திருந்த தங்கம் கடந்த 2 நாள்களுக்கு முன்னர் மீண்டும் இறங்கியது. இந்த விலை இறக்கம் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சிக்கு ஆப்பு வைக்கும் விதமாக மீண்டும் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் அதிகளவில் இருப்பதினால் தங்கம் வாங்கும் வாடிக்கையாளர்கள் தற்பொழுது கடுப்பாகி உள்ளனர். என்னடா இது என்று தலையில் கைவைத்து புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எது எப்படியோ இன்றைய தங்கம் விலையை நாம் பார்ப்போம்.

தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்னவென்றால், 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5705 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 5 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 45640 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6225 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 5 ரூபாய் அதிகமாகும். 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூபாய் 49800 ஆக உள்ளது.
தங்கம் விலையால் கடுப்பாக வாடிக்கையாளர்களுக்கு வெள்ளி விலை சற்று ஆறுதலை தந்துள்ளது. வெள்ளியின் இன்றை விலை குறைவு. 1 கிராம் வெள்ளி விலை ரூபாய்.74.60 காசாக உள்ளது. இது நேற்றைய விலையை விட 0.50 காசுகள் குறைந்துள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 596.80 காசாக உள்ளது.
நாட்டில் பணவீக்கம் அதிகரித்தல், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, உலகளவில் உள்ள பொருளாதாரத்தில் ஏற்ற இறக்க நிலை, இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு போன்ற காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது.
RIP Bharathiraja: பாசத்திற்குரிய பாரதிராஜா.. காலமானார் இயக்குநர் இமயம்.. கண்ணீரில் தமிழ் சினிமா
RIP Bharathiraja: இயக்குனர் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு.. நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!
தவெக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அவசரக் கூட்டம்.. நாளை கூடுகிறது
இந்தியாவின் மிக நீண்ட கால பிரதமர்.. நரேந்திர மோடி சாதனை.. உலகத் தலைவர்கள் வாழ்த்து!
இயக்குனர் இமயம் பாரதிராஜா.. அந்த முட்டத்து கடல் அலைகள் கடற்கரை மணல்கள் கண்ணீர் விடுகிறது!
பாஜகவிலிருந்து விலகினார் அமர் பிரசாத் ரெட்டி...தலைமை மீது பகீர் குற்றச்சாட்டு
சிந்தனைச் சிதறல்.. நின்ற இடத்திலேயே வெல்வது எப்படி?
பரம ஏகாதசி.. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஏகாதசி.. பாவங்கள் நீங்கும்
Kalaiyarasi Muthuvel Poem: அமிலம் கொட்டினாலும் ஆழ்துளையிட்டாலும்!
{{comments.comment}}