சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் உருவாக்கியுள்ள குட் பேட் அட்லி திரைப்படம் பொங்கல் பண்டிகை அன்று வெளியிட இருப்பதாக அப்படத்தின் தயாரிப்பாளர் சூசகமாக கூறியுள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்துள்ள திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சோசியல் மீடியா முழுவதும் வைரலானது. ஏனெனில் இந்த போஸ்டரில் அஜித் குமார் மூன்று தோற்றத்தில் காட்சியளிக்கும் புகைப்படம் வைரலாகி இப்படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது.

மைத்ரி மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் அஜித்துடன், நடிகை திரிஷா, நடிகர் பிரசன்னா,அர்ஜுன் தாஸ், யோகி பாபு என முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணி ஒன்றிணைந்துள்ளது. தற்போது இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற புஷ்பா 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மைத்ரி மூவி மேக்கர் தயாரிப்பாளர் கலந்து கொண்டுள்ளார். அப்போது குட் பேட் அக்லி திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது. படம் முழுமை அடைய இன்னும் ஏழு நாட்களே உள்ளன. இப்படத்தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளோம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவோம் என கூறியுள்ளார். இதனால் அடுத்த பொங்கல் தல பொங்கல் என்று ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திமுக.,வின் அடுத்த தலைவர் உதயநிதியா?...முதல்வர் பேசியதற்கு என்ன அர்த்தம்?
செங்கோட்டையன் செல்லாத நோட்டு... விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார்: செல்லூர் ராஜூ பேட்டி
விஜய் பேசினால் எதிர்க்கட்சிகளின் கதை முடிந்துவிடும்...செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு
வெற்று வாக்குறுதியளித்து ஊராட்சி செயலாளர்களை வஞ்சிக்கும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் தாக்கு!
சென்னையில் காலை நேரப் பனிமூட்டம் நீடிக்கும்...சென்னை வானிலை மையம் தகவல்
ஓட்டல் ஊழியர்களை தாக்கிய விவகாரம்: தலைமை காவலர் மோகன் குமார் சஸ்பெண்ட்!
பாமக யாருக்கு? அன்புமணி தரப்பிற்கு அங்கீகாரம் வழங்கி வழக்கு முடித்து வைப்பு
மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எதிராக திமுக எம்.பி., திருச்சி சிவா உரிமை மீறல் நோட்டீஸ்
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மருத்துவமனையில் அனுமதி
{{comments.comment}}