சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் உருவாக்கியுள்ள குட் பேட் அட்லி திரைப்படம் பொங்கல் பண்டிகை அன்று வெளியிட இருப்பதாக அப்படத்தின் தயாரிப்பாளர் சூசகமாக கூறியுள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்துள்ள திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சோசியல் மீடியா முழுவதும் வைரலானது. ஏனெனில் இந்த போஸ்டரில் அஜித் குமார் மூன்று தோற்றத்தில் காட்சியளிக்கும் புகைப்படம் வைரலாகி இப்படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது.

மைத்ரி மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் அஜித்துடன், நடிகை திரிஷா, நடிகர் பிரசன்னா,அர்ஜுன் தாஸ், யோகி பாபு என முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணி ஒன்றிணைந்துள்ளது. தற்போது இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற புஷ்பா 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மைத்ரி மூவி மேக்கர் தயாரிப்பாளர் கலந்து கொண்டுள்ளார். அப்போது குட் பேட் அக்லி திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது. படம் முழுமை அடைய இன்னும் ஏழு நாட்களே உள்ளன. இப்படத்தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளோம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவோம் என கூறியுள்ளார். இதனால் அடுத்த பொங்கல் தல பொங்கல் என்று ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நேபாள வெள்ளப்பெருக்கு: கைலாஷ் யாத்திரை சென்ற 22 தமிழர்கள் பத்திரமாக மீட்பு
Mettur Dam: மேட்டூர் அணை திறப்பு...சேலம் செல்கிறாரா முதல்வர் விஜய்? அதிகாரிகள் திடீர் ஆய்வு
பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து...நிலங்கள் திருப்பிக் கொடுக்கப்படுமா? அமைச்சர் ராஜ்மோகன் பதில்
தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் பரவல் அதிகரிப்பு.. இந்த அறிகுறிகள் இருந்தால்.. காதாரத்துறை எச்சரிக்கை
குழந்தை பெற்றால் ரூ.55 லட்சம் நிதியுதவி...பிறப்பு விகிதத்தை உயர்த்த சிங்கப்பூர் அரசு அதிரடி
சென்னை மழை முன்னெச்சரிக்கை பணிகள்: 15 மண்டலங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்
திருஞானசம்பந்தருக்கு முத்துப் பல்லாக்கு கொடுக்கச் சொன்ன சிவபெருமான்!
வள்ளிமயிலும்.. கேஸ் கம்பெனியின் eKYC யும்!
சிந்தனைச் சிதறல்... மதிப்பு என்பது நாம் வகிக்கும் பதவியைப் பொறுத்து வருவதில்லை!
{{comments.comment}}