சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் உருவாக்கியுள்ள குட் பேட் அட்லி திரைப்படம் பொங்கல் பண்டிகை அன்று வெளியிட இருப்பதாக அப்படத்தின் தயாரிப்பாளர் சூசகமாக கூறியுள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்துள்ள திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சோசியல் மீடியா முழுவதும் வைரலானது. ஏனெனில் இந்த போஸ்டரில் அஜித் குமார் மூன்று தோற்றத்தில் காட்சியளிக்கும் புகைப்படம் வைரலாகி இப்படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது.

மைத்ரி மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் அஜித்துடன், நடிகை திரிஷா, நடிகர் பிரசன்னா,அர்ஜுன் தாஸ், யோகி பாபு என முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணி ஒன்றிணைந்துள்ளது. தற்போது இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற புஷ்பா 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மைத்ரி மூவி மேக்கர் தயாரிப்பாளர் கலந்து கொண்டுள்ளார். அப்போது குட் பேட் அக்லி திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது. படம் முழுமை அடைய இன்னும் ஏழு நாட்களே உள்ளன. இப்படத்தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளோம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவோம் என கூறியுள்ளார். இதனால் அடுத்த பொங்கல் தல பொங்கல் என்று ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சாதாரண வேலையில், அசாதாரண சேவை.. மர மனிதன் யோகநாதன்!
நீரின்றி உயிரில்லை.. நீரை சேமிக்கப் பழகுவோம்.. World Water Day
தண்ணீரை சேகரித்து.. அடுத்த தலைமுறைக்கு சேமித்துத் தர வேண்டும்.. மாணவர்களுக்கு அறிவுரை
நிலத்தடி நீரை உயர்த்துவோம்.. அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ வழி செய்வோம்!
கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு: சாமானிய மக்களைக் காக்க இந்தியாவின் அதிரடி நடவடிக்கை
புதுச்சேரி சட்டசபைத் தேர்தல்.. 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக!
சென்னையில் ஒரு தொகுதி வேண்டும்...திமுக-விற்கு சிபிஎம் நிபந்தனை?
டில்லி வந்தது இதுக்கு தான்... ஒரே போடாக போட்ட டிடிவி தினகரன்
பியூஷ் கோயல் வருகைக்குப் பின் தொகுதிப் பங்கீடு முடிவாகும் - நயினார் நாகேந்திரன் தகவல்
{{comments.comment}}