சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் உருவாக்கியுள்ள குட் பேட் அட்லி திரைப்படம் பொங்கல் பண்டிகை அன்று வெளியிட இருப்பதாக அப்படத்தின் தயாரிப்பாளர் சூசகமாக கூறியுள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்துள்ள திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சோசியல் மீடியா முழுவதும் வைரலானது. ஏனெனில் இந்த போஸ்டரில் அஜித் குமார் மூன்று தோற்றத்தில் காட்சியளிக்கும் புகைப்படம் வைரலாகி இப்படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது.

மைத்ரி மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் அஜித்துடன், நடிகை திரிஷா, நடிகர் பிரசன்னா,அர்ஜுன் தாஸ், யோகி பாபு என முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணி ஒன்றிணைந்துள்ளது. தற்போது இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற புஷ்பா 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மைத்ரி மூவி மேக்கர் தயாரிப்பாளர் கலந்து கொண்டுள்ளார். அப்போது குட் பேட் அக்லி திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது. படம் முழுமை அடைய இன்னும் ஏழு நாட்களே உள்ளன. இப்படத்தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளோம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவோம் என கூறியுள்ளார். இதனால் அடுத்த பொங்கல் தல பொங்கல் என்று ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சிறகுகள் இல்லாவிட்டாலும்.. சிந்தனை வானில் தடை இல்லை!
ஈரான் போர் எப்பதான் முடியும்.. ஏன் இந்த சண்டை.. அடுத்து என்னதான் நடக்கும்?
வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு
ஓம்பிர்லாவை சபாநாயகர் பதவியிலிருந்து நீக்க தீர்மானம்: மார்ச் 9 அன்று லோக்சபாவில் முக்கிய நகர்வு
மங்கையர் தினமெல்லாம் இருக்கட்டும்.. முதல்ல இதைப் பற்றி யோசிக்கலாம் வாங்க!
மாமல்லபுரத்திலிருந்து.. பெண்களுக்கு விஜய் தரப் போகும் மெசேஜ் என்னாவா இருக்கும்?
Women's Day: மகளிருக்கு வாக்குறுதிகள்.. நாளை மாமல்லபுரத்தில் அறிவிக்கிறார் விஜய்.. தவெக தகவல்
வாக்கு சதவீதத்தை காட்டி அழுத்தம் தர மாட்டோம்: நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்
கூட்டணி வெற்றிக்காக தியாகம் செய்ய காங்கிரஸ் தயார்: மாணிக்கம் தாகூர் பல்டி
{{comments.comment}}