கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்பு அருகே உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 முதியவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
கொழும்புக்கு அருகிலுள்ள அங்குருவாதோட்ட பகுதியில் செயல்பட்டு வந்த முதியோர் இல்லத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. தீ பரவியதும் மீட்புப் பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு, அங்கு இருந்த பலரை பாதுகாப்பாக வெளியேற்றினர்.
அதிகாரிகளின் தகவலின்படி, 51 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

விபத்து தொடர்பான ஆரம்பகட்ட விசாரணையில், அந்த முதியோர் இல்லம் முறையான அனுமதிகள் இன்றி செயல்பட்டு வந்ததாக தெரியவந்துள்ளது. மேலும், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அரசின் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாததாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அந்த இல்லத்தின் பொறுப்பாளரான இசுரு அனுஷ்கா கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்திற்கான காரணம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
இலங்கையில் அண்மைக் காலங்களில் பதிவான மிகக் கோரமான தீ விபத்துகளில் ஒன்றாக இந்த சம்பவம் கருதப்படுகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பல தரப்பிலிருந்தும் இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!
சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!
யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!
Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே
பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!
Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!
அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!
கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!
{{comments.comment}}