சென்னை: 2025 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று காலை 9:30 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கும் என அறிவித்திருந்த நிலையில் கூட்டம் தொடங்கியதுமே அதிமுகவினர் அமளியில் இறங்கினர். இந்த நிலையில் ஆளுநர் ஆர். என். ரவியும், ஆளுநர் உரையை வாசிக்காமலேயே வெளியேறிச் சென்றார்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தமிழக ஆளுநர் உரையுடன் தான் தொடங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதற்காக சட்டசபைக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தலைமை செயலகத்தில் காவல்துறை மரியாதை வழங்கப்பட்டது அதன் பிறகு அவருக்குப் பொன்னாடை அளித்து வரவேற்ற சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவை வளாகத்திற்குள் அழைத்துச் சென்றார்.

அதன் பின்னர் கூட்டத் தொடர் தொடங்கியது. சட்டசபை மரபுப்படி, முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. இதையடுத்து ஆளுநர் உரையை வாசிக்காமலேயே ஆளுநர் ஆர். என். வெளியேறினார். மறுபக்கம் அதிமுகவினர் பெரும் அமளியில் இறங்கினர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக அதிமுகவினர் முழக்கமிட்டனர். பதாகைகளை ஏந்தியபடி அவர்கள் கோஷமிட்டதால் சபையில் பெரும் அமளியாக இருந்தது.
இதையடுத்து அவர்களை வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். அதன் பின்னர் அதிமுகவினர் வெளியேறினர். இதைத் தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
இதன்பிறகு சட்டப்பேரவை கூட்டத்தொடரானது ஒத்திவைக்கப்படும். அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்று எத்தனை நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்பது தீர்மானிக்கப்படும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சேப்பாக்கம் இனியும் சிஎஸ்கே கோட்டை இல்லை.. அபார வெற்றியைத் தட்டிய பஞ்சாப் கிங்ஸ்!
Sarfaraz Khan: சர்பராஸ் கான் அதிரடி கேமியோ.. ஜஸ்ட் 12 பந்துகளில் பட்டையைக் கிளப்பிய 32 ரன்கள்!
Ayush Mhatre.. ஐபிஎல் வரலாற்றிலேயே.. 19 வயசுக்கு முன்னாடியே.. புதிய வரலாறு படைத்த ஆயுஷ் மாத்ரே!
Ayush Mhatre: கட்டையைப் போட்ட சென்னை சூப்பர் கிங்ஸை.. தூக்கி செங்குத்தாக நிறுத்திய ஆயுஷ் மாத்ரே!
பாஜக வேட்பாளர்கள்: மயிலாப்பூரில் தமிழிசை, கோவை வடக்கில் வானதி.. அண்ணாமலை போட்டியிடவில்லை!
ஸ்ரீபெரும்புதூரில் செல்வப் பெருந்தகை.. பென்னாகரத்தில் தமிழ்க்குமரன்.. காங். வேட்பாளர் பட்டியல்
மனிதனை தாண்டும் நுண்ணறிவு.. Super Intelligence மற்றும் மனிதன்–AI இணைவு (9)
இது என் கதை.. உங்களது அனுபவத்தையும் பகிருங்கள் தோழியரே!
அது யாருக்கு சொந்தம்..? (ஒரு பக்க சிறுகதை)
{{comments.comment}}