வீரம் செழித்திடும் இமயத்தில்.. பாரத கொடியை பார்புகழ நாட்டிடுவோம்!

Jan 26, 2026,03:40 PM IST

- சிவ.ஆ. மலர்விழி ராஜா


பாரத தாயின்  மலரடி

பணிந்திடுவோம்


பாரத மண்ணின்

மகிமையை போற்றிடுவோம்


மக்களை உயர்த்தும்

அரசினை வணங்கிடுவோம்....


மாசில்லா தேசம் இந்தியா என்றே


பெருமையை புகழ்ந்திடுவோம்.....




வீசும்  தென்றலிலும்

வீணையின் நாதம் 

கேட்டிடுவோம்.....


நாட்டின் பண்பினை

உலகுக்கு 

உணர்த்திடுவோம்......


வீரம் செழித்திடும்

இமயத்தில் 


பாரத கொடியை

பார்புகழ நாட்டிடுவோம்......


வெள்ளி பனி மலையில்

வீரம் மிக்க  நமது


வீரமகன்களின் பாதம் 

பணிந்திடுவோம்.......


இந்திய தேசம் நமதே

என்று மகிழ்ந்திடுவோம்......


குடியரசு தலைவரையும்

வாழ்த்தி வணங்கிடுவோம்


பாரத மாதாக்கு ஜெய் 

என்றே சங்கினை

முழங்கிடுவோம்.......


வாழ்க பாரதம்  வளர்க

இந்திய தேசம் .....


ஜெய் ஹிந்த்.....!


(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகச் சட்டசபை தேர்தல் 2026: மே 4 வாக்கு எண்ணிக்கை - வழிமுறைகளை வெளியிட்ட தேர்தல் கமிஷன்

news

புதுச்சேரியில் இருந்து இனி 90 மி.லி., மது கொண்டு வந்தாலும் கைது

news

தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயில்: சுகாதாரத்துறை சிறப்பு ஏற்பாடு

news

புதுச்சேரி பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழி நீக்கம்: திமுக சார்பில் போராட்டம் அறிவிப்பு

news

இதயம் என்னும் கவிதை...!

news

குடவோலை முறை.. உலகத்துக்கே வழிகாட்டிய உத்திரமேரூர் தேர்தல் நடைமுறை!

news

Sri Priya Story: தன்னம்பிக்கை கதை.. உடைந்த சிறகும் உயரப் பறந்த பறவையும்

news

இன்றைய உலகுக்கேற்ற.. நவீன ஆத்திச்சூடி!

news

பராமரிப்பு பணி...21 நாட்களுக்கு சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

அதிகம் பார்க்கும் செய்திகள்