- சிவ.ஆ. மலர்விழி ராஜா
பாரத தாயின் மலரடி
பணிந்திடுவோம்
பாரத மண்ணின்
மகிமையை போற்றிடுவோம்
மக்களை உயர்த்தும்
அரசினை வணங்கிடுவோம்....
மாசில்லா தேசம் இந்தியா என்றே
பெருமையை புகழ்ந்திடுவோம்.....

வீசும் தென்றலிலும்
வீணையின் நாதம்
கேட்டிடுவோம்.....
நாட்டின் பண்பினை
உலகுக்கு
உணர்த்திடுவோம்......
வீரம் செழித்திடும்
இமயத்தில்
பாரத கொடியை
பார்புகழ நாட்டிடுவோம்......
வெள்ளி பனி மலையில்
வீரம் மிக்க நமது
வீரமகன்களின் பாதம்
பணிந்திடுவோம்.......
இந்திய தேசம் நமதே
என்று மகிழ்ந்திடுவோம்......
குடியரசு தலைவரையும்
வாழ்த்தி வணங்கிடுவோம்
முழங்கிடுவோம்.......
வாழ்க பாரதம் வளர்க
இந்திய தேசம் .....
ஜெய் ஹிந்த்.....!
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
கரப்பான் பூச்சி ஜனதாக் கட்சி போராட்டம் எதிரொலி.. பதவி விலகினார் தர்மேந்திர பிரதான்
என் மகன் சாதித்து விட்டார்.. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித்தின் தாயார் பெருமிதம்
நான் யாருக்கு என்னை நிரூபிக்க வேண்டும்.. என்னைக் குறை கூறுவது நியாயமா.. சோனம் வாங்சுக்
இன்று முதல் நான் அரசியல் துறவறம் பூணுகிறேன்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு
அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.. நடிகை ஜோதிகா பரபரப்பு பதிவு
அனாதைகள் யாருடைய குழந்தைகள்???
நன்றொன்று உண்டென்று
சிறிதாய் இருந்தது பெரிதாகி விட்டது.. வீடு காலி!
பணத்தை வென்ற பாசம்!
{{comments.comment}}