சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தை மாதம் ஒன்றாம் தேதி கொண்டாடப்படுவது வழக்கம். புத்தாண்டு பிறந்ததும் முதல் பண்டிகையாக கொண்டாடப்படுவது பொங்கல் பண்டிகை தான். பொங்கல் பண்டிகை மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையாகும்.
முதல் நாள் போகிப் பண்டிகை, வேண்டாதவற்றை வெளியேற்றி, நல்லவைகளை வரவேற்பதாகவும், 2ம் நாளில் சூரிய பகவானுக்கும், இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தைப் பொங்கலும், 3ம் நாளில் உழவுத் தொழிலுக்கு ஆதாரமாக விளங்கும் மாடுகள், நிலம் ஆகியவற்றிற்கு நன்றி தெரிவித்து மரியாதை செலுத்தும் விதமாக மாட்டுப் பொங்கலும், 4ம் நாளில் நாளில் உறவுகளுடன் அன்பை புதுப்பிக்கும் தினமாக காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது.
சூரிய பகவான் தன்னுடைய பயணத்தை தெற்கு நோக்கி துவக்கும் காலத்தின் துவக்க நாளே பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. சூரிய பகவான் தனுசு ராசியில் இருந்து, மகர ராசியில் பயணிக்க துவங்கும் இந்த நாளை தென் மாநிலங்களில் மகர சங்கராந்தி என்ற பெயரிலும், வட மாநிலங்களில் லோஹ்ரி என்ற பெயரிலும் கொண்டாடுகிறார்கள். குஜராத் போன்ற மாநிலங்களில் இந்த நாளை அறுவடை திருநாளாக மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள். இந்த நாளில் பட்டம் விடும் திருவிழாக்களும் நடத்தப்படும். அதே சமயம் தமிழகத்தில் தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட வீர விளையாட்டுக்கள் நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதி செவ்வாய்கிழமை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காலை 07.30 முதல் 08.30 வரையும், காலை 10.30 முதல் 11.30 வரையும் பொங்கல் வைப்பதற்கான நல்ல நேரமாக கணிக்கப்பட்டுள்ளது. வீட்டில் பொங்கல் வைத்து முதலில் சூரிய பகவானுக்கு படைத்த பிறகு, வீட்டில் படையல் இட்டு பொங்கல், பல விதமான பழங்கள் படைத்து குலதெய்வம் மற்றும் மற்ற தெய்வங்களுக்கும் படைத்து வழிபட வேண்டும்.
அதே போல் ஜனவரி 15ம் தேதி மாட்டுப் பொங்கல் அன்று காலை 09.30 முதல் 10.30 வரையிலான நேரமும், மாலை 04.30 முதல் 05.30 வரையிலான நேரமும் பொங்கல் வைத்து வழிபடுவதற்கான நேரமாகும். இந்த நாளில் மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்து, கோலமிட்டு, மாடுகளுக்கு அழகாக அலங்கரித்து, சாம்பிராணி போட்டு வழிபட வேண்டும். மாட்டு தொழுவத்தில் பொங்கல் வைப்பது வீட்டில் லட்சுமி கடாட்சத்தை உண்டாக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கட்சி நிர்வாகிகள் மாற்றம்.. இது களையெடுப்பல்ல.. கட்டுமானச் சீரமைப்பு.. முதல்வர் மு.க. ஸ்டாலின்
சென்னையில்.. நாளையும் பனிமூட்டம் இருக்கும்.. மற்ற பகுதிகளில் ஒரு வாரத்திற்கு.. வறண்ட வானிலை!
சரயு நதிக்கரையில்.. ஜல சமாதி செய்யப்பட்ட.. ராமர் கோவில்.. தலைமை அர்ச்சகர் ஆச்சார்யாவின் உடல்
மார்ச் 22ஆ இல்லாட்டி 23ஆம் தேதியா.. ஐபிஎல் தொடங்குவது எப்போ?.. தொடக்க விழாவுடன் முதல் போட்டி!
ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க நகைகள், 11,344 பட்டுச் சேலைகள்.. இன்று தமிழக அரசிடம் ஒப்படைப்பு
கலையின் கவிதைகள்.. வேண்டும் காதல்..!
இன்னும் எத்தனை உயிர்களை பறிகொடுக்க வேண்டும்?.. பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி!
மீன் குழம்பு வச்சு.. அதுல கொஞ்சம் விஷம் கலந்து.. கள்ளக்காதலனுக்காக கணவனை கொன்ற மனைவி!
Valentine's day: காதலில் உயிர்த்து இருப்பவன் நான்.. நிறைந்து நிற்பவள் நீ.. இணைந்து நிற்பது நாம்!
{{comments.comment}}