ஹரியானா கலவரம் : சில்லறை விலைக்கு பெட்ரோல், டீசல் விற்க தடை

Aug 02, 2023,10:29 AM IST
குர்கிராம் : ஹரியானாவில் கலவரம் உச்சகட்டத்தை எட்டி உள்ளதால் குர்கிராம் பகுதியில் சில்லறை விலையில் பெட்ரோல், டீசல் ஆகியவை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹரியானாவில் இரு மதத்தினரிடையே ஏற்பட்ட மோதல் பெரிய அளவில் கலவரமாக மாறி, மாநிலமே பற்றி எரிந்து வருகிறது. இந்த கலவரத்தில் இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர். 30 க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் இரண்டு பேர் போலீஸ்காரர்கள் ஆவர். இவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.57 லட்சம் நிவாரணம் அளிப்பதாக அரியானா போலீஸ் அறிவித்துள்ளது. 



விஷ்ணு இந்து பரிஷித் அமைப்பின் ஊர்வலத்தை நுஹ் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்த முயன்ற போது இந்த மோதல் வெடித்துள்ளது. கலவரம் படிப்படியாக மற்ற மாவட்டங்களுக்கும் பரவி வருகிறது. பல இடங்களில் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. 

இதனால் கலவரத்தை ஒடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக குர்கிராமில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விலையில் விற்க மாவட்ட மாஜிஸ்டிரெட் தடை விதித்துள்ளார். பட்ஷாபூர் சந்தையும் மூடப்பட்டுள்ளது. இளைஞர்கள் சிலர் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் மார்க்கெட் பகுதியில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கப்பட்டு வருவதால் மார்கெட், கடைகள் ஆகியன மூடப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்