ஹரியானா கலவரம் : சில்லறை விலைக்கு பெட்ரோல், டீசல் விற்க தடை

Aug 02, 2023,10:29 AM IST
குர்கிராம் : ஹரியானாவில் கலவரம் உச்சகட்டத்தை எட்டி உள்ளதால் குர்கிராம் பகுதியில் சில்லறை விலையில் பெட்ரோல், டீசல் ஆகியவை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹரியானாவில் இரு மதத்தினரிடையே ஏற்பட்ட மோதல் பெரிய அளவில் கலவரமாக மாறி, மாநிலமே பற்றி எரிந்து வருகிறது. இந்த கலவரத்தில் இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர். 30 க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் இரண்டு பேர் போலீஸ்காரர்கள் ஆவர். இவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.57 லட்சம் நிவாரணம் அளிப்பதாக அரியானா போலீஸ் அறிவித்துள்ளது. 



விஷ்ணு இந்து பரிஷித் அமைப்பின் ஊர்வலத்தை நுஹ் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்த முயன்ற போது இந்த மோதல் வெடித்துள்ளது. கலவரம் படிப்படியாக மற்ற மாவட்டங்களுக்கும் பரவி வருகிறது. பல இடங்களில் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. 

இதனால் கலவரத்தை ஒடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக குர்கிராமில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விலையில் விற்க மாவட்ட மாஜிஸ்டிரெட் தடை விதித்துள்ளார். பட்ஷாபூர் சந்தையும் மூடப்பட்டுள்ளது. இளைஞர்கள் சிலர் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் மார்க்கெட் பகுதியில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கப்பட்டு வருவதால் மார்கெட், கடைகள் ஆகியன மூடப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்