சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும், அப்போது இரண்டு முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஐயோ, கடவுளே பகல் நேரத்தில் தான் வெயில் வெளுத்தெடுக்குது நைட்டாவது நிம்மதியா தூங்குவோம் என்று நினைத்தால் நைட் எல்லாம் வேர்த்து வேர்த்து தூக்கமே போச்சு.. காலைல தூங்கணும்னு நினைச்சா கூட நேரம் ஆயிடுச்சு எந்திரி எந்திரி என்று சொல்கிறார்கள். இந்த வெயில்னால தூக்கம் போச்சு.. நிம்மதி போச்சு ..எல்லாம் போச்சு.. தலை வலிக்குது.. எப்ப தான் இந்த வெயில் காலம் முடியுமோ என மக்கள் புலம்பித் தவித்து வருகின்றனர். அந்த அளவுக்கு வெளுத்தெடுக்குது சார் இந்த வெயில்!

நம்ம ஊரைத் தூக்கிட்டுப் போய் சூரியனுக்கு பக்கத்துல மாத்தி வச்சுட்டாங்களோன்னு சந்தேகம் கூட வருதுங்க.. அப்படி ஒரு வெப்பம்.
ஏற்கனவே இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என அறிவித்த நிலையில் இந்த வெயிலையே மக்களால் சமாளிக்க முடியவில்லை. இதனால் தலைவலி, அஜீரணம், வயிற்றுக் கோளாறு, உள்ளிட்ட பல பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இனி வரும் தினங்களில் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. இதனை எவ்வாறு எதிர் கொள்ள போகிறோமோ என மக்கள் செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர்.
24.4.2024 மற்றும் 25.4.2024:
அதிகபட்சமாக வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இயல்பை விட வெப்பநிலை மூன்று முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் 35- 42 டிகிரி செல்சியஸும், இதர மாவட்டங்களின் சமவெளி பகுதிகள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35- 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.
குறிப்பாக இன்றும், நாளையும் வட தமிழகம், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
26.4.2024 முதல் 28.4.2024 வரை:
அதிகபட்சமாக வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இயல்பை விட 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். தமிழக உள் மாவட்டங்களில் சமவெளிப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் 38- 41 டிகிரி செல்சியஸும், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35 -38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.
இது தவிர காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் பிற்பகலில் 30 முதல் 50 சதவீதமாகவும், மற்ற நேரங்களில் 40 முதல் 75 சதவீதமாகவும், மற்றும் கடலோரப் பகுதிகளில் 50 முதல் 85 சதவீதமாகவும் இருக்கக்கூடும்.
26.4.2024 முதல் 30.4.2024 வரை:
தமிழகம், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலே நிலவக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 -38 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 - 27 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் இருக்கக்கூடும்.
ஓபிஎஸ்.,க்கு இடமில்லை...ஸ்டாலினுக்கு அனுபவமில்லை...விஜய் தலைவரே அல்ல...வெளுத்து வாங்கிய இபிஎஸ்
நான் ரெடி.. அருமை அண்ணன் இபிஎஸ்ஸுடன் பேச டிடிவி தினகரன் தயாரா.. ஓ.பி.எஸ். அதிரடி சவால்!
பிப்ரவரி 3ம் தேதி கூட்டணியை அறிவிக்கும் தேமுதிக.. யாருடன் இணைகிறது?
தமிழக வாக்காளர் பட்டியல் 2026...பெயர் சேர்க்க 10 நாட்கள் கால அவகாசம் நீட்டிப்பு
மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்... பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
முருக பக்தர்களுக்கு குட் நியூஸ்...தைப்பூசத்திற்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்
அக்கறையற்ற அமைச்சரின் பேச்சு... வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும்: எடப்பாடி பழனிச்சாமி
நெல்லை தொகுதியையும், என்னையும் பிரித்து பார்க்க முடியாது: நயினார் நாகேந்திரன்
டி20 உலகக் கோப்பை: இந்தியாவைப் புறக்கணிக்கும் முடிவில் பாகிஸ்தான் தீவிரம்?
{{comments.comment}}