அலர்ட்டா இருங்க மக்களே... இன்று 18 மாவட்டங்களில் வெப்ப அலை வீசுமாம்: வானிலை மையம் தகவல்

Apr 25, 2024,11:06 AM IST

சென்னை: தமிழ்நாட்டில்  இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு 8 மாவட்டங்களில் வெப்ப  அலை வீசும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு வெயில் தனது உக்கிரத்தை காண்பித்து வருகிறது. காலை நேரங்களில் அடிக்கும் வெயிலின் தாக்கத்தையே தாங்க முடியாத அளவிற்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் வெளியில் செல்வதற்கு கூட தயக்கம் காண்பித்து வருகின்றனர். பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடல் பகுதிகளின் மேற்பரப்பில் நிலவும்  வெப்பம்  காரணமாகவும், காலநிலை மாற்றத்தின் விளைவாகவும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.




இதனால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடந்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் நேற்று அதிகபட்சமாக ஈரோட்டில் 107.6 டிகிரி ஃபரான்ஹீட்டும்,வேலூரில் 106.88 டிகிரியும், சேலத்தில் 105.98 டிகிரியும்  வெயில் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தின் 18 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று   வானிலை மையம் தெரிவித்துள்ளது.


மேலும், வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று முதல் வரும் 28ஆம் தேதி வரை தமிழகத்தில் வெப்ப அலை வீசக்கடும் எனவும், இயல்பை விட சில இடங்களில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும். இன்று திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 18 வடக்கு உள் மாவட்டங்களில் இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்.


அதனைத் தொடர்ந்து நாளை முதல் 28ஆம் தேதி வரை திருப்பத்தூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி ஆகிய 24 வட மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும். மற்ற இடங்களில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வரை அதாவது 100.4 டிகிரி வரை வெயில் பதிவாகும் எனினும் தென் மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் இன்று லேசான மலைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று  தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு!

news

வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்: தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேற்றம்

news

முட்டாள்கள்...ராகுல் காந்தியின் பேச்சால் கொந்தளித்த பாஜக எம்.பி.,க்கள்

news

பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி

news

2031ல் தமிழகத்தில் பாமக ஆட்சி : பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு

news

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு பிடிவாரண்ட்: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!

news

டாஸ்மாக் குடோன்கள் மற்றும் மதுபான ஆலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

பாமக தலைவராக மீண்டும் டாக்டர் அன்புமணி தேர்வு.. வடிவேல் ராவணன், திலகபாமாவுக்கும் மீண்டும் பதவி

news

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உட்பட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு!

அதிகம் பார்க்கும் செய்திகள்