சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு 8 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு வெயில் தனது உக்கிரத்தை காண்பித்து வருகிறது. காலை நேரங்களில் அடிக்கும் வெயிலின் தாக்கத்தையே தாங்க முடியாத அளவிற்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் வெளியில் செல்வதற்கு கூட தயக்கம் காண்பித்து வருகின்றனர். பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடல் பகுதிகளின் மேற்பரப்பில் நிலவும் வெப்பம் காரணமாகவும், காலநிலை மாற்றத்தின் விளைவாகவும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடந்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் நேற்று அதிகபட்சமாக ஈரோட்டில் 107.6 டிகிரி ஃபரான்ஹீட்டும்,வேலூரில் 106.88 டிகிரியும், சேலத்தில் 105.98 டிகிரியும் வெயில் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தின் 18 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று முதல் வரும் 28ஆம் தேதி வரை தமிழகத்தில் வெப்ப அலை வீசக்கடும் எனவும், இயல்பை விட சில இடங்களில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும். இன்று திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 18 வடக்கு உள் மாவட்டங்களில் இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்.
அதனைத் தொடர்ந்து நாளை முதல் 28ஆம் தேதி வரை திருப்பத்தூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி ஆகிய 24 வட மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும். மற்ற இடங்களில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வரை அதாவது 100.4 டிகிரி வரை வெயில் பதிவாகும் எனினும் தென் மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் இன்று லேசான மலைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}