பஞ்சாபில் மீண்டும் வெள்ளம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.. உதவி செய்ய பிரதமர் மோடி உறுதி

Sep 02, 2025,01:57 PM IST

சண்டிகர்: பஞ்சாபில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். 


திங்கட்கிழமை பெய்த கனமழையால் பஞ்சாபின் பல மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 23 மாவட்டங்களில் 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் பகவந்த் மான் உடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.


பதான்கோட், குர்தாஸ்பூர், பாசில்கா, கபுர்தலா, தர்ன் தரன், பெரோஸ்பூர், ஹோஷியார்பூர் மற்றும் அமிர்தசரஸ் ஆகிய மாவட்டங்கள் மழையினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. ஹிமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீரிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சட்லஜ், பியாஸ் மற்றும் ராவி ஆகிய ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் பஞ்சாபில் வெள்ளம் மேலும் அதிகரித்துள்ளது.




பகவாரா மற்றும் கபுர்தலாவில் ஒரே இரவில் அதிக மழை பெய்தது. கடைகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் மக்களின் இயக்கம் தடைபட்டது. சுல்தான்பூர் லோடியில் பியாஸ் ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து கரைகளை அச்சுறுத்தியுள்ளது. மேலும் 50,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.


லூதியானாவில் மழை காரணமாக மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர். சங்கோவால் கிராமத்தில் தேஜ்வந்த் சிங் (19) மற்றும் மன்ஜோத் சிங் ஆகிய இரண்டு சகோதரர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். அவர்கள் மின்சார வயர் மீது தெரியாமல் மிதித்ததால் இந்த விபத்து ஏற்பட்டது. நியூ புனீத் நகரில் 10 வயது சிறுவன் விகாஸ் ஜா வீடு இடிந்து விழுந்ததில் உயிரிழந்தான்.


பஞ்சாப் பள்ளிகளுக்கு செப்டம்பர் 3 வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து திங்கட்கிழமை திரும்பிய பிறகு, பிரதமர் மோடி முதல்வர் மான் உடன் பேசினார். பஞ்சாபில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை குறித்து கேட்டறிந்தார். கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பஞ்சாபின் நிலைமை குறித்து கேட்டறிந்தார். மேலும், மாநிலத்திற்கு அனைத்து உதவிகளையும் ஆதரவையும் வழங்குவதாக உறுதியளித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பஞ்சாபின் வெள்ளக் கட்டுப்பாட்டு உள்கட்டமைப்பு பலவீனமாக உள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர்,  ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படை, பஞ்சாப் காவல்துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இவர்கள் பிரிந்து விட மாட்டார்களா என ஏங்கிய எதிரிகளின் கனவு தூளானது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

திமுக ஆட்சியில் மக்களின் நிம்மதியே முடிந்து விட்டது: எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

news

நிதீஷ் குமார் நிலை இபிஎஸ்-க்கு வந்து விடக் கூடாது... மாணிக்கம் தாகூர் அக்கறை

news

Nitish Kumar: பாஜக.,வேலையே இது தான்...நான் அப்பவே சொன்னேன்...தேஜஸ்வி ஆதங்கம்

news

சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் திருமணம் கோலாகலம்: பிரபலங்கள் பங்கேற்பு!

news

தமிழகத்திலும் பீகார் பார்முலா... பாஜக மீது விசிக வன்னி அரசு விமர்சனம்

news

தவெக.விற்கு வரலாம்.. டி. ஜெயகுமாருக்கு கே.ஏ.செங்கோட்டையன் அழைப்பு

news

சீட்டுகளும் நோட்டுகளும் சிக்கல்கள் போக்கும் கொள்கையும் கோட்பாடும் என்னவென்று கேட்கும்!

news

முடிவான திமுக-காங்கிரஸ் கூட்டணி...ஏமாற்றத்தில் தவெக...அடுத்து என்ன செய்ய போகிறார் விஜய்?

அதிகம் பார்க்கும் செய்திகள்