துபாய்: துபாய் என்றதும் வழுக்கிக் கொண்டு போகும் சாலைகளைத்தான் நாம் பார்த்து ரசித்திருக்கிறோம்.. ஆனால் அந்த துபாயின் சாலைகள் முழுக்க தண்ணீரில் மூழ்கி வெள்ளக்காடாக காட்சி தரும் வீடியோக்களைப் பார்த்து பலரும் அதிர்ச்சியாகியுள்ளனர். வெள்ளிக்கிழமை அங்கு பெய்த பேய் மழையில் ஊரே வெள்ளக்காடாகி விட்டது.
துபாய் என்றதுமே.. எல்லோருக்கும் உடனே நினைவுக்கு வருவது "ஹலோ துபாயா" என்ற வடிவேலுவின் காமெடிக் காட்சிதான். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒரு முறையாவது துபாய்க்குப் போய் விட வேண்டும் என்று ஆசை இருக்கும். அந்த அளவுக்கு மக்களின் மனம் கவர்ந்த சர்வதேச நகரங்களில் துபாயும் ஒன்று.
அட்டகாசமான துபாய் நுகரம் இன்று பெரும் மழையில் சிக்கி மிதக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. பேய் மழையும், கூடவே இடி மின்னலும் சேர்ந்து துபாய் மக்களை மிரட்டி விட்டது. ரஸ் அல் கைமா முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்து விட்டது. பெரும்பாலான சாலைகள் வெள்ள நீரில் மிதந்தன.

வாகனப் போக்குவரத்து இதனால் கடும் பாதிப்பை சந்தித்தது. மக்கள் கவனமாக இருக்குமாறும், வாகனங்களுடன் வெளியில் வருவதைத் தவிர்க்குமாறும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் மழை நீரில் வாகனங்களை செலுத்தும்போது மிகவும் கவனமாக இருக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அபு ஹெய்ல் என்ற இடத்தில் பலத்த காற்றுடன் வீசிய கன மழை தொடர்பான வீடியோ பார்க்கவே அச்சுறுத்தலாக உள்ளது. அந்த அளவுக்கு பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கன மழை அது. அடுக்குமாடிக் குடியிருப்புகள் எல்லாம் நீரில் மிதப்பது போலவே இருக்கிறது.

மழை தொடரும் என்றும் துபாய்க்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற எச்சரிக்கையை வானிலை மையம் அறிவித்துள்ளது. மக்கள் வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
May 1: காலத்தின் நெற்றியில் நீ இடும் கையெழுத்து.. காய்ந்த உன் கரங்களின் வியர்வை முத்து!
ரவிவர்மன் எழுதாத கலையோ.. மறக்க முடியாத ஓவிய வித்தகர்.. ராஜா ரவிவர்மா!
சித்தார்த்தனின் புத்த பூர்ணிமா!
அனுபவம் அறிவோம்.. செலவு குறைந்த புதுவிதமான சிறந்த திருமணம்!
அழகு மாறும்.. ஆன்மா அப்படியே இருக்கும்!
நல்ல பாட்டு கேட்டா.. ஆஹா.. அடடா.. Good songs are good healers!
A Silk Wrapped in Love
S Sharmila Poem: உனக்குள் ஒருவன்!
நதியும் நீயும் ஒன்றோ!
{{comments.comment}}