சென்னை : கோவை, நெல்லை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை கொட்டி தீர்க்கும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் கோவை, நெல்லை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை கொட்டி தீர்க்கும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் பகல் பொழுதில் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது. சில பகுதிகளில் பகல் பொழுதிலேயே மழை பெய்து வந்தது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து காணப்படுகிறது.
இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெப்பம் தணியும் என்பது ஒரு புறம் மகிழ்ச்சி என்றாலும், தொடர் விடுமுறை நாட்களில் கனமழை பெய்து வருவதால் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தீஞ்ச சக்தியிலிருந்து ஆட்களை இழுக்கும் நீங்க என்ன.. காஞ்சு போன சக்தியா? .. மு.க. ஸ்டாலின் தாக்கு
KG முதல் PG வரை இலவச கல்வி.. ஒடிசா அதிரடியை எல்லோரும் கடைப்பிடிக்கலாமே?
தவெக.,வை நோக்கி படையெடுக்கும் மாற்று கட்சியினர்... பலமா? பலவீனமா?
டீசல் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு: மத்திய அரசு அதிரடி உத்தரவு!
Vijay Birthday: முதல்வராக முதல் முறையாக.. 52வது பிறந்த நாளைக் கொண்டாடத் தயாராகும் விஜய்
அதிமுக தேர்தல் தோல்வி எதிரொலி: மாவட்ட வாரியாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
பாஜவிலிருந்து விலகி தவெகவில் இணைகிறார் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி
லியோனல் மெஸ்ஸியின் உலகக் கோப்பை வேட்டை எப்போது தொடங்குகிறது?
Seven Days, Twenty Kilometres.. மற்றும் மறக்க முடியாத சில நினைவுகள்!
{{comments.comment}}