சென்னை : கோவை, நெல்லை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை கொட்டி தீர்க்கும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் கோவை, நெல்லை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை கொட்டி தீர்க்கும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் பகல் பொழுதில் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது. சில பகுதிகளில் பகல் பொழுதிலேயே மழை பெய்து வந்தது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து காணப்படுகிறது.
இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெப்பம் தணியும் என்பது ஒரு புறம் மகிழ்ச்சி என்றாலும், தொடர் விடுமுறை நாட்களில் கனமழை பெய்து வருவதால் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஓபிஎஸ்.,க்கு இடமில்லை...ஸ்டாலினுக்கு அனுபவமில்லை...விஜய் தலைவரே அல்ல...வெளுத்து வாங்கிய இபிஎஸ்
நான் ரெடி.. அருமை அண்ணன் இபிஎஸ்ஸுடன் பேச டிடிவி தினகரன் தயாரா.. ஓ.பி.எஸ். அதிரடி சவால்!
பிப்ரவரி 3ம் தேதி கூட்டணியை அறிவிக்கும் தேமுதிக.. யாருடன் இணைகிறது?
தமிழக வாக்காளர் பட்டியல் 2026...பெயர் சேர்க்க 10 நாட்கள் கால அவகாசம் நீட்டிப்பு
மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்... பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
முருக பக்தர்களுக்கு குட் நியூஸ்...தைப்பூசத்திற்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்
அக்கறையற்ற அமைச்சரின் பேச்சு... வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும்: எடப்பாடி பழனிச்சாமி
நெல்லை தொகுதியையும், என்னையும் பிரித்து பார்க்க முடியாது: நயினார் நாகேந்திரன்
டி20 உலகக் கோப்பை: இந்தியாவைப் புறக்கணிக்கும் முடிவில் பாகிஸ்தான் தீவிரம்?
{{comments.comment}}