மக்களே உஷார்... 7 மாவட்டங்களில் மழை வெளுக்க போகுது

Oct 01, 2023,04:33 PM IST

சென்னை : கோவை, நெல்லை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை கொட்டி தீர்க்கும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. 


தமிழகத்தில் கோவை, நெல்லை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை கொட்டி தீர்க்கும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 




தமிழகத்தின் பல மாவட்டங்களில் பகல் பொழுதில் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது. சில பகுதிகளில் பகல் பொழுதிலேயே மழை பெய்து வந்தது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து காணப்படுகிறது. 


இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெப்பம் தணியும் என்பது ஒரு புறம் மகிழ்ச்சி என்றாலும், தொடர் விடுமுறை நாட்களில் கனமழை பெய்து வருவதால் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


சமீபத்திய செய்திகள்

news

தொழுதேத்தும் பத்மநாபன்.. யாதவ குல திலகன்.. மதுசூதனன் மாயன்!

news

தமிழன் என்றாலே வீரம்.. அந்த வீரத் திமிருக்கு சொந்தக்காரன்.. முறுக்கு மீசைக்காரன் பாரதியார்!

news

பச்சை பயிறு ஈரல் கிரேவி.. சத்தியமா நம்புங்க.. இது சைவ மெனுதான்.. என்னங்க சொல்றீங்க!

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்