கொச்சி: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில், முன்னதாகவே கனமழை பெய்து வருகிறது.
தொடங்குகிறது. இதன் தாக்கம் தமிழ்நாடு முழுவதும் பரவ உள்ளதால், அநேக இடங்களில் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்க இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில், திருவனந்தபுரம், கொச்சி, கண்ணூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக திருச்சூரில் கனமழை பெய்த போது அதிக அளவு காற்றும் வீசியதால், கட்டடத்தின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரை ஒன்று பெயர்ந்து சாலையில் விழுந்தது.
இந்த மழை காரணமாக சாலையில் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தால், நல்வாய்ப்பாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
அதே சமயத்தில் கேரளாவை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு இல்லாத போதிலும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அரபிக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன் காரணமாக கேரளாவில் இன்று ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அப்போது 12 முதல் 20 சென்டிமீட்டர் வரையில் மழை பெய்ய கூடும் என்பதால் அப்பகுதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
மத்திய வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% வேண்டும்: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மத்திய மாநில அரசுகள் ஓரணியாக செயல்பட்டால் எந்த குறிக்கோளையும் எட்டலாம்: பிரதமர் மோடி!
ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு இடமில்லை.. சுப்மன்கில் கேப்டன்.. இங்கிலாந்து டூருக்கான அணி அறிவிப்பு!
காஷ்மீரில் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து எம்.பி. ராகுல்காந்தி ஆறுதல்!
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது
இன்று மாலை தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா – படக்குழு அறிவிப்பு!
நிதி ஆயோக் கூட்டம்: இந்த மாநில முதல்வர்கள் எல்லாம் புறக்கணிச்சிருக்காங்க.. யார் யார் தெரியுமா?
நாம் ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயல்பட்டால் திரையுலகம் இன்னும் உயரும்.. நடிகர் சூரி வேண்டுகோள்!
வார இறுதி நாளில் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.440 உயர்ந்த தங்கம்!
{{comments.comment}}