தென்மேற்கு பருவமழை தொடங்கும் முன்பே கேரளாவில் கனமழை.. இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

May 24, 2025,10:26 AM IST

கொச்சி: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில், முன்னதாகவே கனமழை பெய்து வருகிறது.


தொடங்குகிறது. இதன் தாக்கம் தமிழ்நாடு முழுவதும் பரவ உள்ளதால், அநேக இடங்களில் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்க இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில், திருவனந்தபுரம், கொச்சி, கண்ணூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக திருச்சூரில் கனமழை பெய்த போது அதிக அளவு காற்றும் வீசியதால், கட்டடத்தின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரை ஒன்று பெயர்ந்து சாலையில் விழுந்தது.


இந்த மழை காரணமாக சாலையில் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தால், நல்வாய்ப்பாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.




அதே சமயத்தில் கேரளாவை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு இல்லாத போதிலும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.



இதற்கிடையே அரபிக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன் காரணமாக கேரளாவில் இன்று ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அப்போது 12 முதல் 20 சென்டிமீட்டர் வரையில் மழை பெய்ய கூடும் என்பதால் அப்பகுதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2021 சட்டசபைத் தேர்தலில் யார் யார் எத்தனை இடங்களில் போட்டி.. இப்போது என்ன நிலைமை?

news

கோவை வடக்கு அண்ணாமலையா.. கோவை தெற்கிலிருந்து திருப்பூருக்கு மாறுகிறாரா வானதி?

news

அதிமுக 169 இடங்களில் போட்டி...கூட்டணி கட்சிகள் போட்டியிடும் 65 தொகுதிகள் விபரம்

news

தளி முதல் ராசிபுரம் தனி வரை.. பாஜக போட்டியிடப் போகும் தொகுதிகள் இவைதான்.. Full list

news

பேளூர் தான் தோன்றீஸ்வரர் கோவில் திருக்குடமுழக்கு விழா

news

நீங்க ஏன் எப்போதும் தனியா இருக்கிறீங்க?.. (மனிதம் மலர்கையில் - 7)

news

UPI PIN மறந்து போச்சா? கவலை வேண்டாம்...ஈஸியா பணம் அனுப்ப வழி இருக்கு

news

ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி...கேன்சல் டிக்கெட்டிற்கு இனி ரீஃபண்ட் கிடையாதாம்

news

ரூ.50,000-க்கு மேல் பணம் கொண்டு செல்வோருக்கு முக்கிய அறிவுறுத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்