ஆத்தாடி..  தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!

Oct 28, 2023,12:46 PM IST

சென்னை: தங்கம் விலை இன்றும் ஓயவில்லை.  உயர்ந்தே காணப்பட்டது. இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.400 உயர்ந்துள்ளது.


தீபாவளி மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு தங்கம் விலை தாறுமாறாக ஏறுகின்றது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 400 அதிகரித்துள்ளது. இந்த விலை ஏற்றம் வாடிக்கையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


தங்கம் விலை ஏறுது என்ன செய்யலாம். வாங்குவோமா ?வேணாமா? என்று யோசித்து தங்கத்தை வங்கும் நிலைக்கு வாடிக்கையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். சரி அதை விடுங்க.. இன்னக்கி விலை என்ன தெரியுமா..!

1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5755 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 50 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது.

 



8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 46040 ரூபாயாக உள்ளது.  1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6278 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 53 ரூபாய் அதிகமாகும். 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.50224 ஆக உள்ளது.


தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலை நேற்றைய விலையிலேயே இன்றும் தொடர்கிறது. இன்று 1 கிராம் வெள்ளி விலை ரூபாய்.74.60 காசாக உள்ளது.  8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 596.80 காசாக உள்ளது. 


தங்கத்தின் விலை எவ்வளவு கூடினாலும் அதன் தேவை குறைய போறது கிடையாது. என்ன தான் செய்யன்னு புலம்பிக்கிட்டே தான் நடுத்தர மக்கள் வாங்கிட்டு இருக்காங்க... தங்கம் விலை ஏற்றம் கண்டு வருவதினால் முதலீட்டாளர்களும் தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் தங்கம் விலை இந்த மாதம் முழுவதும் ஏற்றத்தில் தான் இருக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

RIP Bharathiraja: பாசத்திற்குரிய பாரதிராஜா.. காலமானார் இயக்குநர் இமயம்.. கண்ணீரில் தமிழ் சினிமா

news

RIP Bharathiraja: இயக்குனர் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு.. நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

news

தவெக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அவசரக் கூட்டம்.. நாளை கூடுகிறது

news

இந்தியாவின் மிக நீண்ட கால பிரதமர்.. நரேந்திர மோடி சாதனை.. உலகத் தலைவர்கள் வாழ்த்து!

news

இயக்குனர் இமயம் பாரதிராஜா.. அந்த முட்டத்து கடல் அலைகள் கடற்கரை மணல்கள் கண்ணீர் விடுகிறது!

news

பாஜகவிலிருந்து விலகினார் அமர் பிரசாத் ரெட்டி...தலைமை மீது பகீர் குற்றச்சாட்டு

news

சிந்தனைச் சிதறல்.. நின்ற இடத்திலேயே வெல்வது எப்படி?

news

பரம ஏகாதசி.. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஏகாதசி.. பாவங்கள் நீங்கும்

news

Kalaiyarasi Muthuvel Poem: அமிலம் கொட்டினாலும் ஆழ்துளையிட்டாலும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்