சென்னை: கரூர் துயர சம்பவத்தில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.
தவெக தலைவரண கடந்த 27ம் தேதி கரூரில் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால், இடிபாடுகளில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 7 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் அனைத்தையும் நீதிபதிகள் இன்று ஒன்றன் பின் ஒன்றாக விசாரித்தனர்.

கரூர் சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை கோரி மனுவை விசாரித்த நீதிபதிகள், கரூர் சம்பவத்தை யாராவது நினைத்து பார்த்திருப்பார்களா? தற்போது விசாரணை ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. விசாரணையில் திருப்தி இல்லை என்றால் வேண்டுமானால் சிபிஐ.,க்கு மாற்றலாம். அதோடு சிபிஐ விசாரணை கேட்பவர் பாதிக்கப்பட்டவரா? பாதிக்கப்பட்டவர் அல்லாமல் மற்றவர்கள் சிபிஐ விசாரணை கேட்பது ஏற்புடையது அல்ல என கூறி சிபிஐ விசாரணை கோரிய மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.
இந்த நிலையில், கரூர் கூட்டநெரிசல் சம்பவம் குறித்து விசாரிக்க, வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுனை அமைத்தது சென்னை உயர்நீதிமன்றம். மேலும் வழக்கு தொடர்பான ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்க கரூர் போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
9 மாவட்டங்களுக்கு இன்று கனமழையும்.. நெல்லைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் : வானிலை மையம் தகவல்!
திமுக ஆட்சியில் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!
சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?: நயினார் நாகேந்திரன்
நெல் கொள்முதல் ஈரப்பத விகிதத்தை உயர்த்துக.. பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டம்.. குழந்தைகளை கெடுக்க நினைத்த திமுக அரசு: அன்புமணி ராமதாஸ்!
கோவை வரும் பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி!
சார் படிவத்தை நிரப்புவதில் குழப்பமா.. கவலைப்படாதீங்க.. சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு
வாட்ஸ் ஆப்புக்கு வந்துருச்சு ஆப்பு.. எலான் மஸ்கின் X-சாட் தான் டாப்பாமே.. மக்கா!
SIR பணிகளைப் புறக்கணித்து.. போராட்டத்தில் குதித்த வருவாய்த்துறை ஊழியர்கள்
{{comments.comment}}