மீண்டும் பதட்டத்தில் ஹரியானா.. "நு" நகரில் ஊர்வலம் நடத்த இந்து அமைப்பு அழைப்பு

Aug 28, 2023,09:53 AM IST
சண்டிகர்: ஹரியானா மாநிலம் நு நகரில் சமீபத்தில்தான் பெரும் கலவரம் வெடித்து தற்போது ஓய்ந்துள்ள நிலையில் அங்கு மீண்டும் பேரணி நடத்த சர்வ் ஜாதிய இந்து மகாபஞ்சாயத் என்ற இந்து அமைப்பு அழைப்பு விடுத்திருப்பது பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பதட்ட நிலை காரணமாக அங்கு பள்ளிகள், வங்கிகள் மூடப்பட்டு விட்டன.

முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் நு நகரில் ஜூலை 31ம் தேதி விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் ஆகியவை பேரணி நடத்தின. அது பின்னர் பெரும் கலவரமாகவும், வன்முறையாகவும் மாறியது. முஸ்லீம்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டனர். ஒரு மசூதி தீவைத்து எரிக்கப்பட்டது. பலர் உயிரிழந்தனர். பல சொத்துக்கள் சூறையாடப்பட்டன.  இந்தக் கலவரம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது. டெல்லி அருகே வரை கலவரம் பரவி நாட்டையே பரபரப்பில் ஆழ்த்தியது. 

இதைத் தொடர்ந்து அங்கு பேரணிகள் நடத்த அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் ஷோபா யாத்திரா என்ற பெயரில் ஒரு பேரணியை நடத்த இந்த அமைப்பு  அழைப்பு விடுத்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் பேரணிக்கு காவல்துறை அனுமதி தரவில்லை. ஆனால் அனுமதியை மீறி பேரணி நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

இதையடுத்து அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில் நு நகரம் முழுவதும் போலீஸார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். கிட்டத்தட்ட 2000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 24 கம்பெனி பாராமிலிட்டரி படைகளும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

நு முழுவதும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. வங்கிகள் அடைக்கப்பட்டுள்ளன. கடைகளும் மூடப்பட்டுள்ளன. பல்க் எஸ்எம்எஸ் அனுப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. மொபைல் இன்டர்நெட்டும் தடை செய்யப்பட்டுள்ளது.  நான்கு அல்லது அதற்கு மேற்பட்டோர் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எல்லைப் பகுதிகளில் வாகன தணிக்கையிலும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்