- கலைவாணி கோபால்
சென்னை: ராத்திரியானால் போதும், பல வீடுகளிலும் ரஷ்யா - உக்ரைன் போர் போல ஒரே சத்தமாக இருக்கும்.. அதுதாங்க குறட்டை ஒலி. ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் கூட சகஜமாக இருக்கக் கூடிய ஒரு பிரச்சினை இந்த குறட்டை.
குறட்டைதானேன்னு சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அதிலும் கவனம் தேவை.
குறட்டை எவ்வாறு உருவாகிறது என்றால்,... சுவாச பாதையில் இருக்கும் மென் திசுக்கள், வீக்கம் அடையும் போது நாம் சுவாசிக்கின்ற காற்று வீக்கத்தின் ஊடே செல்லும்போது ஏற்படும் அதிர்வால் குறட்டை உண்டாகிறது. இது இயற்கையானது. என்றாலும்,..... ஒரு மனிதனின் குறட்டை மற்றவருக்கு பிரச்சினையாகவே உள்ளது. பெரும்பாலும் இது குடும்பத்தில் ஒருவரின் குறட்டை அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஏனென்றால் , அனைவரும் உழைத்து விட்டு களைப்பாறுவது இரவில் மட்டுமே. அதற்கும் ஏதோ ஒரு வகையில் ஒரு சத்தம் தூக்கத்தை கலைப்பதால் அவர்களுக்கு அது மன உளைச்சலை ஏற்படுத்தும். ஒரு நாள் என்றால் பரவாயில்லை தினமும் ஏதோ ஒரு வகையில் தூக்கம் பாதிக்கப்படுவது என்பது பெரும் பிரச்சனையாகவே இருக்கும். அதை தீர்க்க இயற்கையை ஒரு வழி வகுத்துள்ளது.. நமக்கு
இதை எவ்வாறு இயற்கை முறையில் தடுத்து நிறுத்தலாம்
முதலில் ஒரு டம்ளர் தண்ணீர் நன்றாக கொதிக்க விட்டு, பின்பு அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் ஒரு ஏலக்காய் தட்டி போட்டு, 100 கிராம் அளவுக்கு தண்ணீர் 50 மில்லிகிராம் அளவு வந்தவுடன் அதை வடிகட்டி அதில் தேன் சேர்த்து தினமும் அருந்த திசுக்களின் வீக்கம் குறைந்த நாளடைவில் குறட்டை சத்தம் ஏற்படாமல் குறையும். மேலும் இந்த தண்ணீரை தினமும் அருந்தி வருவதால் உடலில் ஏற்படும் சளி பிரச்சனையும் தீர்வு.... ஏற்பட்டு நல்ல பலனை தரும்.
செஞ்சு பாருங்க.. கூடவே உரிய மருத்துவ ஆலோசனைகளையும் தவறாமல் பெற்று அதையும் பின்பற்றுங்கள்.
(கலைவாணி கோபால், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
தினசரி 2 முறை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும்.. செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்
"வீட்டிலிருந்தபடியே ஓபி சீட்": அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு
TET ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளுக்கு இடைக்காலத் தடை: ஐகோர்ட் அதிரடி!
ஆரோக்கியா பால் மற்றும் தயிர் விலை திடீர் உயர்வு - நாளை முதல் அமல்!
அனைத்து தகுதியான பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் : முதல்வர் விஜய் உத்தரவு
கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை...அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!
Wayanad: வயநாடு நிலச்சரிவிற்கு இது தான் காரணம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
கிரீடம் அணிந்த மொட்டுகள்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
இமயமலையில் அவதரித்த.. தனித்துவ மலர்.. பிரம்ம கமலம்!
{{comments.comment}}