சென்னை: சென்னையில் மனைவியின் 25ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வீடு முழுவதும் சீரியல் பல்புகளால் அலங்கரிக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி மனைவியின் கண்முன்னே கணவர் துடிதுடித்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ள பிருந்தாவனம் தெருவில் வசித்து வருபவர் அகஸ்டின் பால். இவருக்கு வயது 29. சொந்தமாக பார்சல் சர்வீஸ் தொழிலை நடத்தி வருபவர். இவருடைய மனைவியின் பெயர் கீர்த்தி. இவருக்கு வயது 25. இந்த தம்பதியர் இருவருக்கும் திருமணமாகி 8 மாதங்கள் ஆகின்றன.

அகஸ்டின் பாலின் மனைவி கீர்த்திக்கு 25வது பிறந்த நாள் வந்துள்ளது. மனைவி மீது ரொம்பப் பாசமாக இருந்தவரான பால் இதை சிறப்பாக கொண்டாட வீடு முழுவதும் சீரியல் பல்புகளால் அலங்காரம் செய்துள்ளார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சிறிது நேரத்திலேயே துடி துடித்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தனது பிறந்த நாளில், தனது கண் முன்பாகவே கணவர் துடிதுடித்து உயிரிழந்தது கீர்த்தியை அதிர வைத்து விட்டது. கதறித் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆறுதல் கூறினர். அந்தப் பகுதியே இந்த சம்பவத்தால் சோகத்தில் மூழ்கியது.
எப்படி இந்த சம்பவம் நடந்தது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மனை பிறந்த நாளன்று கணவர் இப்படி இறந்தது அனைவரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம், தனி நபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை!
சென்னை டூ பெங்களூரு, ஹைதராபாத் இடையே அதிக வேக ரயில் வழித் தடம் - பட்ஜெட்டில் அறிவிப்பு
பட்ஜெட் 20226-27ல் இடம் பெற்ற முக்கிய அறிவிப்புகள் - பழவேற்காட்டில் பறவைகள் சுற்றுலாத் திட்டம்
மத்திய பட்ஜெட் 2026: ஞாயிற்றுக்கிழமையில் ஏற்றம் காணும் பங்குச் சந்தைகள்
மத்திய பட்ஜெட்: ஏன் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது?
ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் - இது முதல் முறையா? பட்ஜெட் பாரம்பரியம் என்ன?
புடவையில் அடையாளம் சொல்லும் நிர்மலா சீதாராமன்...இந்த முறை தமிழ்நாடு காஞ்சிபுரம் பட்டு
தில்லை புராணம் கூறும் தைப்பூசத் திருநாள் சிறப்புகள்.. இத்தனையும் ஒரே நாளில் நடந்தவையா?
சட்டசபை தேர்தலை குறிவைத்த மத்திய பட்ஜெட் 2026 : தமிழ்நாட்டுக்கு பல புதுத் திட்டங்கள் அறிவிப்பு
{{comments.comment}}