சென்னை: சென்னையில் மனைவியின் 25ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வீடு முழுவதும் சீரியல் பல்புகளால் அலங்கரிக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி மனைவியின் கண்முன்னே கணவர் துடிதுடித்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ள பிருந்தாவனம் தெருவில் வசித்து வருபவர் அகஸ்டின் பால். இவருக்கு வயது 29. சொந்தமாக பார்சல் சர்வீஸ் தொழிலை நடத்தி வருபவர். இவருடைய மனைவியின் பெயர் கீர்த்தி. இவருக்கு வயது 25. இந்த தம்பதியர் இருவருக்கும் திருமணமாகி 8 மாதங்கள் ஆகின்றன.
அகஸ்டின் பாலின் மனைவி கீர்த்திக்கு 25வது பிறந்த நாள் வந்துள்ளது. மனைவி மீது ரொம்பப் பாசமாக இருந்தவரான பால் இதை சிறப்பாக கொண்டாட வீடு முழுவதும் சீரியல் பல்புகளால் அலங்காரம் செய்துள்ளார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சிறிது நேரத்திலேயே துடி துடித்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தனது பிறந்த நாளில், தனது கண் முன்பாகவே கணவர் துடிதுடித்து உயிரிழந்தது கீர்த்தியை அதிர வைத்து விட்டது. கதறித் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆறுதல் கூறினர். அந்தப் பகுதியே இந்த சம்பவத்தால் சோகத்தில் மூழ்கியது.
எப்படி இந்த சம்பவம் நடந்தது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மனை பிறந்த நாளன்று கணவர் இப்படி இறந்தது அனைவரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
1967,1977 தேர்தலைப் போல 2026 தேர்தலும் முக்கியமானதாக அமையும்: தவெக தலைவர் விஜய்!
Honeymoon in Shillong: மேகாலயா தேனிலவு கொலை சம்பவம் சினிமா ஆகிறது!
மை டிவிகே... உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகம் செய்தார்... தவெக தலைவர் விஜய்!
ஹீலியம் கேஸை நுகர்ந்து.. சிஏ மாணவர் எடுத்த விபரீத முடிவு.. டெல்லியை உலுக்கிய சம்பவம்
நீதி தவறிய செயலுக்காக முதல்வர் தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... சவரனுக்கு ரூ.480 உயர்வு
ரஷ்யாவில் கடும் நிலநடுக்கம்.. ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் சுனாமி அலை தாக்குதல்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 30, 2025... இன்று பிறரிடம் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
பஹல்காம் தாக்குதல்: பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க ராகுல்காந்தி முடிவு!
{{comments.comment}}