சென்னை: சென்னையில் மனைவியின் 25ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வீடு முழுவதும் சீரியல் பல்புகளால் அலங்கரிக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி மனைவியின் கண்முன்னே கணவர் துடிதுடித்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ள பிருந்தாவனம் தெருவில் வசித்து வருபவர் அகஸ்டின் பால். இவருக்கு வயது 29. சொந்தமாக பார்சல் சர்வீஸ் தொழிலை நடத்தி வருபவர். இவருடைய மனைவியின் பெயர் கீர்த்தி. இவருக்கு வயது 25. இந்த தம்பதியர் இருவருக்கும் திருமணமாகி 8 மாதங்கள் ஆகின்றன.

அகஸ்டின் பாலின் மனைவி கீர்த்திக்கு 25வது பிறந்த நாள் வந்துள்ளது. மனைவி மீது ரொம்பப் பாசமாக இருந்தவரான பால் இதை சிறப்பாக கொண்டாட வீடு முழுவதும் சீரியல் பல்புகளால் அலங்காரம் செய்துள்ளார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சிறிது நேரத்திலேயே துடி துடித்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தனது பிறந்த நாளில், தனது கண் முன்பாகவே கணவர் துடிதுடித்து உயிரிழந்தது கீர்த்தியை அதிர வைத்து விட்டது. கதறித் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆறுதல் கூறினர். அந்தப் பகுதியே இந்த சம்பவத்தால் சோகத்தில் மூழ்கியது.
எப்படி இந்த சம்பவம் நடந்தது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மனை பிறந்த நாளன்று கணவர் இப்படி இறந்தது அனைவரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}