சென்னை: வானில் பறக்கும் உன் அரசியல் கொடி. உன் வெற்றிக்கு இதுவே முதல் படி. ஏற்கனவே நான் CM (celebrity mother) இப்போ நான் PM (proud mother) என்று விஜய்யின் அம்மா ஷோபா நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
தவெக கட்சியின் தலைவர் விஜய் கடந்த பிப்ரவரியில் தனது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியினை தொடங்கினார். 2026ம் ஆண்டு வரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாகை சூட வேண்டும் என்பதற்காக அடுத்தடுத்த கட்சி பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார். கட்சியின் அடுத்த படியாக இன்று விஜய் தனது தவெக கட்சியின் கொடியினை அறிமுகம் செய்தார். இந்த கொடி அறிமுகத்திற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் முன்னோட்டமாக மஞ்சள் நிறத்தில் விஜய் முகம் பொறித்த கொடி பறக்க விடப்பட்டது.
இன்று கொடி அறிமுகம் செய்யப்படும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னரே தெரிவித்திருந்தார் தவெக தலைவர். அதன்படி இன்று கொடி அறிமுக நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் விஜய்யின் தாய், தந்தை மற்றும் ஏராளமான கட்சி தொண்டர் என பலர் கலந்து கொண்டனர். விஜய் அறிமுகம் செய்து வைத்த கட்சி கொடிக்கு ஆதரவாக பலர் இணையதள பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சிலர் எதிர் மறையான பதிவுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் பேசுகையில்,இப்போது போல எப்போதும் உண்மையா இரு விஜய். நீ நாட்டுக்கே ராஜா ஆனாலும் எனக்கு பிள்ளை. தமிழ் மொழியின் பாரம்பரியம் போற்று. பெண்ணியம் காப்பாற்று. புரட்சிகர திட்டங்கள் தீட்டு. வானில் பறக்கும் உன் அரசியல் கொடி. உன் வெற்றிக்கு இதுவே முதல் படி. ஏற்கனவே நான் CM (celebrity mother) இப்போ நான் PM (proud mother) என்று பேசியுள்ளார் ஷோபா சந்திரசேகர்.
இன்று நடந்த கொடி அறிமுக விழாவில் ஷோபா சந்திரசேகர் மிகுந்த பெருமையுடன், முகம் நிறைய பெருமிதத்துடன் பூரிப்புடன் மகனின் அரசியல் பிரவேசத்தைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்தார். மேலும் கட்சியின் பாடல் சூப்பராக இருப்பதாகவும் அவர் புஸ்ஸி ஆனந்த்தைப் பார்த்து தம்ப்ஸ் அப் காட்டி மகிழ்ந்தார் என்பது நினைவிருக்கலாம்.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}