கனாக் கண்டேனடி தோழி!

May 21, 2026,04:01 PM IST

- பாவலர் மாயோன்மங்கை, பொள்ளாச்சி


என்னவளே ஏந்திழையே

எல்லோராக்

குகையழகே


கயலொத்த

கண்ணுனதே

வயற்சேற்றில்

துள்ளுதுவே


செவ்விதழில்

தேன்சிந்த

செண்பக

மணமடிக்க


தென்னைமரக்

கீற்றசைந்து

முவ்தானை

எனையுரச





மனமெங்கும்

மத்தாப்பு

வனமெல்லாம்

மரிக்கொழுந்து


என்னை

உவந்தேன்

விண்ணில்

மிதந்தேன்


எட்டித்தான்

கைப்பிடித்தேன்

எட்டவில்லை

பட்டுப்பூச்சி


விடுவேனா

வியப்பவளை

விட்டியாய்ப்

பின்தொடர


படுகுழியில்

பாதம் விழ

நடுநிசியில்

கூச்சலிட


படுக்கையிலே

மனைவியவள்

பார்வையிலே

வியர்த்தேனே

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்