கனாக் கண்டேனடி தோழி!

May 21, 2026,04:01 PM IST

- பாவலர் மாயோன்மங்கை, பொள்ளாச்சி


என்னவளே ஏந்திழையே

எல்லோராக்

குகையழகே


கயலொத்த

கண்ணுனதே

வயற்சேற்றில்

துள்ளுதுவே


செவ்விதழில்

தேன்சிந்த

செண்பக

மணமடிக்க


தென்னைமரக்

கீற்றசைந்து

முவ்தானை

எனையுரச





மனமெங்கும்

மத்தாப்பு

வனமெல்லாம்

மரிக்கொழுந்து


என்னை

உவந்தேன்

விண்ணில்

மிதந்தேன்


எட்டித்தான்

கைப்பிடித்தேன்

எட்டவில்லை

பட்டுப்பூச்சி


விடுவேனா

வியப்பவளை

விட்டியாய்ப்

பின்தொடர


படுகுழியில்

பாதம் விழ

நடுநிசியில்

கூச்சலிட


படுக்கையிலே

மனைவியவள்

பார்வையிலே

வியர்த்தேனே

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு: சென்னை உயர் நீதிமன்றத்தில் பிற்பகலில் விசாரணை!

news

Wayanad: வயநாடு நிலச்சரிவிற்கு இது தான் காரணம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

news

Tamil Poem: எஞ்சுவதே உன்னதம்!

news

உள்ளாட்சி தேர்தலில் வென்றால் ஆட்சியை பிடிக்கலாம்: இபிஎஸ் ஆருடம்

news

ஓபிஎஸ் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு

news

முதல்வர் விஜய் கரூர் செல்லவும் தடை இல்லை.. பேசவும் தடையில்லை.. திமுகவின் கோரிக்கைகள் நிராகரிப்பு!

news

'காக்ரோச் ஜனதா கட்சி'யின் எக்ஸ்தள பக்க முடக்கத்தை நீக்க கோர்ட் அதிரடி உத்தரவு!

news

ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைனில் பத்திரப்பதிவு: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிப்பு!

news

எங்கள் கேப்டன் கூல்...தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன முதல்வர் விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்