திருச்சி: அந்த காலத்தில் குலதெய்வ கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு தான் போருக்கு செல்வார்கள். அதுபோல தான் அடுத்த வருடம் நடக்க உள்ள தேர்தலுக்கு திருச்சியில் குலதெய்வமாக நினைத்து மக்களை சந்திக்க வந்துள்ளேன் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை இன்று திருச்சி மரக்கடை பகுதியில் துவங்கி பேசுகையில், அந்த காலத்தில் குலதெய்வ கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு தான் போருக்கு செல்வார்கள். அதுபோல தான் அடுத்த வருடம் நடக்க உள்ள தேர்தலுக்கு திருச்சியில் குலதெய்வமாக நினைத்து மக்களை சந்திக்க வந்துள்ளேன். நல்ல காரியங்களுக்கு ஒரு சில மண்ணைத்தொட்டால் நல்லதென பெரியவர்கள் சொல்வார்கள். அப்படி தான் திருச்சியில் தொடங்கினால் திருப்புமுனை ஏற்படும் என்று வந்துள்ளேன். ஜனநாயக போருக்கு தயாராவதற்கு முன் உங்களை சந்திக்க வந்துள்ளேன்.

1956 அறிஞர் அண்ணா தேர்தலில் நிற்க நினைத்ததும் திருச்சியில்தான். 1974-ல் எம்ஜிஆர் முதல் மாநாடு நடத்தியது திருச்சியில் தான். திருச்சிக்கு என்றே நிறை வரலாறு இருக்கு. கல்விக்கு பேர் போன இடம். கொள்கையுள்ள மண் இது. இன்னைக்கு உங்கள எல்லாரையும் பார்க்கும் போது மனசுக்குள்ள ஒரு பரவம் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.. ஆளுநர் உரையில் இடம் பெற்ற அதிரடி அறிவிப்பு
ஆளுநர் உரை எப்படி இருந்தது? உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில்
எந்த கொம்பனாலும் அதிமுக.,வை அசைக்க முடியாது : இபிஎஸ் உறுதி
அடுத்த வாரம் மின்வாரிய வெள்ளை அறிக்கை...அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு
உலக யோகா தின விழா: மாணவர்களுக்கு யோகாவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு
ஐக்கிய அரபு அமீரகத்தில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சோஷியல் மீடியா பயன்படுத்த தடை
இன்று ஒரு புதிய உதயம்...ஆளுநர் நெகிழ்ச்சி பதிவு...எதுக்கு தெரியுமா?
நீண்ட இடைவெளிக்குப் பிறகு.. ஆளுநர் உரையை முழுமையாக படித்தார் ஆளுநர் ஆர்லேகர்!
எம்மை குளிர்விக்க வந்தவளே....!
{{comments.comment}}