திருச்சி: அந்த காலத்தில் குலதெய்வ கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு தான் போருக்கு செல்வார்கள். அதுபோல தான் அடுத்த வருடம் நடக்க உள்ள தேர்தலுக்கு திருச்சியில் குலதெய்வமாக நினைத்து மக்களை சந்திக்க வந்துள்ளேன் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை இன்று திருச்சி மரக்கடை பகுதியில் துவங்கி பேசுகையில், அந்த காலத்தில் குலதெய்வ கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு தான் போருக்கு செல்வார்கள். அதுபோல தான் அடுத்த வருடம் நடக்க உள்ள தேர்தலுக்கு திருச்சியில் குலதெய்வமாக நினைத்து மக்களை சந்திக்க வந்துள்ளேன். நல்ல காரியங்களுக்கு ஒரு சில மண்ணைத்தொட்டால் நல்லதென பெரியவர்கள் சொல்வார்கள். அப்படி தான் திருச்சியில் தொடங்கினால் திருப்புமுனை ஏற்படும் என்று வந்துள்ளேன். ஜனநாயக போருக்கு தயாராவதற்கு முன் உங்களை சந்திக்க வந்துள்ளேன்.

1956 அறிஞர் அண்ணா தேர்தலில் நிற்க நினைத்ததும் திருச்சியில்தான். 1974-ல் எம்ஜிஆர் முதல் மாநாடு நடத்தியது திருச்சியில் தான். திருச்சிக்கு என்றே நிறை வரலாறு இருக்கு. கல்விக்கு பேர் போன இடம். கொள்கையுள்ள மண் இது. இன்னைக்கு உங்கள எல்லாரையும் பார்க்கும் போது மனசுக்குள்ள ஒரு பரவம் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
C.M.சிங்காரவேலன் எனும் நான்... புதிய படத்தை எழுதி இயக்கும் பார்த்திபன்.. செம ஸ்டில் வெளியீடு!
பழைய, புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் திமுக கோட்டையைத் தொட முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Vijay maiden Campaign: விஜய்யின் முதல் சட்டசபைத் தேர்தல் பிரச்சார பேச்சு எப்படி இருந்தது?
சொன்னீர்களே? செய்தீர்களா?... என திமுகவிற்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பிய தவெக தலைவர் விஜய்!
போருக்கு தயாராவதற்கு முன் குலதெய்வமாக நினைத்து மக்களை சந்திக்க வந்துள்ளேன்: தவெக தலைவர் விஜய்!
பல மணி நேர தாதமத்திற்குப் பின்னர் மரக்கடைக்கு வந்து சேர்ந்தார் விஜய்.. பேசப் போவது என்ன?
விஜய் வருகையால்.. திணறிப் போனது திருச்சி.. விமான நிலையத்தை அதிர வைத்த தொண்டர்கள்
தொடர் உயர்விற்கு பின்னர் குறைந்த தங்கம் விலை... எவ்வளவு தெரியுமா?
விஜய்யை மட்டும் தொடர்ந்து குறி வைத்து விமர்சிக்கும் சீமான்... லேட்டஸ்ட் விளாசல் இதோ!
{{comments.comment}}