காலையிலேயே தொர தொரன்னு.. டெல்லியை வெளுத்த கனமழை.. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Aug 20, 2024,12:48 PM IST

டெல்லி:   டெல்லியில் பெய்து வரும் கனமழை காரணமாக வீடுகளை சுற்றி வெள்ளநீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


டெல்லியில் பருவமழை தீவிரமடைந்தினால், டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தமிழகம், கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் தற்போது பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த மாதம் கேரளாவில் உள்ள வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழையில் ஏற்பட்ட நிலச்சரிவால், 400க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். 1000த்திற்கும் அதிகமானவர்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். 




தற்போது டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. கனமழையால் ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உத்திர பிரதேசம், ஹரியானா ஆகிய பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. டெல்லியில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் டெல்லியில் பெய்த கனமழை காரணமாக ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ள நீர் புகுந்ததால் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். டெல்லியில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


டெல்லியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே தண்ணீர் தேங்கியும், மரங்கள் சாய்ந்தும் உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆங்காங்கே பணிபுரிந்து வருபவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், அந்த மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.மீட்பு பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.


டெல்லி, ஹரியானா ,பஞ்சாப்,உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் பாதுகாப்புடன் இருக்கவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்