டெல்லி: டெல்லியில் பெய்து வரும் கனமழை காரணமாக வீடுகளை சுற்றி வெள்ளநீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் பருவமழை தீவிரமடைந்தினால், டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தமிழகம், கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் தற்போது பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த மாதம் கேரளாவில் உள்ள வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழையில் ஏற்பட்ட நிலச்சரிவால், 400க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். 1000த்திற்கும் அதிகமானவர்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

தற்போது டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. கனமழையால் ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உத்திர பிரதேசம், ஹரியானா ஆகிய பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. டெல்லியில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் டெல்லியில் பெய்த கனமழை காரணமாக ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ள நீர் புகுந்ததால் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். டெல்லியில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே தண்ணீர் தேங்கியும், மரங்கள் சாய்ந்தும் உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆங்காங்கே பணிபுரிந்து வருபவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், அந்த மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.மீட்பு பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
டெல்லி, ஹரியானா ,பஞ்சாப்,உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் பாதுகாப்புடன் இருக்கவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு!
வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்: தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேற்றம்
முட்டாள்கள்...ராகுல் காந்தியின் பேச்சால் கொந்தளித்த பாஜக எம்.பி.,க்கள்
பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி
2031ல் தமிழகத்தில் பாமக ஆட்சி : பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு பிடிவாரண்ட்: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!
டாஸ்மாக் குடோன்கள் மற்றும் மதுபான ஆலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
பாமக தலைவராக மீண்டும் டாக்டர் அன்புமணி தேர்வு.. வடிவேல் ராவணன், திலகபாமாவுக்கும் மீண்டும் பதவி
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உட்பட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு!
{{comments.comment}}