காலையிலேயே தொர தொரன்னு.. டெல்லியை வெளுத்த கனமழை.. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Aug 20, 2024,12:48 PM IST

டெல்லி:   டெல்லியில் பெய்து வரும் கனமழை காரணமாக வீடுகளை சுற்றி வெள்ளநீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


டெல்லியில் பருவமழை தீவிரமடைந்தினால், டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தமிழகம், கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் தற்போது பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த மாதம் கேரளாவில் உள்ள வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழையில் ஏற்பட்ட நிலச்சரிவால், 400க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். 1000த்திற்கும் அதிகமானவர்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். 




தற்போது டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. கனமழையால் ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உத்திர பிரதேசம், ஹரியானா ஆகிய பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. டெல்லியில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் டெல்லியில் பெய்த கனமழை காரணமாக ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ள நீர் புகுந்ததால் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். டெல்லியில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


டெல்லியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே தண்ணீர் தேங்கியும், மரங்கள் சாய்ந்தும் உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆங்காங்கே பணிபுரிந்து வருபவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், அந்த மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.மீட்பு பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.


டெல்லி, ஹரியானா ,பஞ்சாப்,உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் பாதுகாப்புடன் இருக்கவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு சட்டசபைக்கு ஏப்ரல் 23, புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ம் தேதி தேர்தல்.. மே 4ல் வாக்கு எண்ணிக்கை

news

TN Assembly Elections: தமிழ்நாட்டில் 75,032 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.. தேர்தல் ஆணையம்

news

தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள்.. இதையெல்லாம் பின்பற்றணும்!

news

விஜய் பையில் கத்திரிக்கோல்.. ஆதவ் அர்ஜூனாவிடம் மது பாட்டில்.. பரபரத்த சென்னை ஏர்போர்ட்!

news

எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிப்பு...தமிழகத்தில் வேகமெடுக்கும் அரசு பணிகள்

news

Iran-Israel War: மேற்கு ஆசியப் போர் எதிரொலி - சமையல் எண்ணெய் விலை அதிரடி உயர்வு

news

10 ஏவுகணைகளை ஏவி அதிரடி காட்டிய கிம்மின் வடகொரியா.. கிலியில் அண்டை நாடுகள்!

news

வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு: உணவகங்களுக்கு மின்சார மானியம் அறிவிப்பு

news

மதுரை விமான நிலையம்.. திருத்தம்.. மதுரை சர்வதேச விமான நிலையம்.. மத்திய அரசு ஆணை!

அதிகம் பார்க்கும் செய்திகள்