கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கி.. பின் விடுவித்த வருமான வரித்துறை.. அதிர்ச்சியில் காங்கிரஸ்!

Feb 16, 2024,05:46 PM IST

டெல்லி:  காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் அஜய் மேக்கான் கூறியுள்ளார். இந்த நிலையில் தற்போது வங்கிக் கணக்குகள் செயல்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தேர்தல் பத்திரங்கள் குறித்த வழக்கில் மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நேற்று தீர்ப்பு வந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது அக்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


முன்னதாக கட்சியின் பொருளாளர் அஜய் மேக்கான் கூறுகையில், இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.  வருமான வரித்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வருமான வரிக் கணக்கு கட்டத் தாமதானதாக கூறி ரூ.210 கோடி அபராதம் விதித்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்




இது ஜனநாயகத்தின் மீது விழுந்த பேரிடி. இது அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை. கட்சியின் தேர்தல் தயார் நிலையை சீர்குலைக்கும் நடவடிக்கை. இந்தியாவில் ஜனநாயகம் செத்துப் போய் விட்டது. ஒரு கட்சி ஆட்சி முறை நடப்பது போன்ற சூழல் உருவாகியுள்ளது. நீதித்துறையிடமும், மக்களிடமும், ஊடகங்களிடமும் நாங்கள் நீதி கேட்கிறோம் என்று கூறியிருந்தார் மேக்கான்.


கணக்கை முடக்கி வைத்ததற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் காங்கிரஸ் கட்சி கூறியிருந்தது.  மேலும் வருமான வரித்துறை குறை தீர்ப்பு ஆயத்திடமும் இந்த விவகாரத்தை காங்கிரஸ் கொண்டு சென்றது.  அதைத் தொடர்ந்து தற்போது காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் விடுவிக்கப்பட்டுள்ளன.


மொத்தம் நான்கு வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியிருப்பதாக கூறப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் காசோலைகளை ஏற்க வேண்டாம் என்றும் வங்கிககளுக்கு உத்தரவு அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த வங்கிக் கணக்குகள் வழக்கம் போல செயல்படத் தொடங்கியுள்ளன.


கடந்த 2018-2019ம் ஆண்டில் வருமான வரிக் கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அதேசமயம், 45 நாள் தாமதத்திற்காக  நாட்டின் பிரதான எதிர்க்கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்குவது ஜனநாயக விரோதமானது, மிகத் தீவிரமானது என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதுபோன்ற கடுமையான நடவடிக்கை இதற்கு முன்பு எடுக்கப்பட்டதில்லை என்றும் அஜய் மேக்கான் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

அதிகம் பார்க்கும் செய்திகள்