டெல்லி: ஒரு தனி நபர், தனது வருமானம் அல்லது சொத்துக்கள் பற்றிய முழு தகவலை வெளியிடவில்லை என அதிகாரிகள் சந்தேகித்தால், அந்த நபரின் ஈமெயில், சமூகவலைதள கணக்குகளை, சம்பந்தப்பட்டவரின் அனுமதியின்றி அணுகி ஆராயலாம் என வருமானவரித்துறைக்கு புதிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்திருந்தார். அப்போது புதிய வருமான வரி சட்ட மசோதா அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி புதிய சட்ட மசோதா தற்போது அறிமுகமாகியுள்ளது. அதில் பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
தற்போது உள்ள வருமான வரி சட்டம், 60 வருடங்களுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளது. இதில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் இது சிக்கலாகியுள்ளது. இதையடுத்தே புதிய வருமான வரி சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய சட்டத்தில் ஒரு விதி சேர்க்கப்பட்டுள்ளது.
அதாவது, ஒருவரின் வருமானம் மற்றும் சொத்துக்கள் பற்றிய முழு தகவலை பெற அவர்களின் அனுமதி உடன் மட்டுமே அவர்களின் இமெயில், லேப்டாப், கம்ப்யூட்டர், சமூக வலைதளக் கணக்குகளை அணுக முடியும் என்று பழைய சட்டத்தில் உள்ளது. அதற்கு மாறாக சம்பந்தப்பட்டவரின் அனுமதியின்றி அவர்களின் அவர்களின் சமூக கணக்குகளை அணுக புதிய சட்டம் வகை செய்கிறது.
புதிய வருமான வரி சட்ட திருத்த மசோதாவின்படி, வருமான வரி அதிகாரிகள் தனிநபரின் ஈமெயில் சமூக வலைதள கணக்குகள் அவர்களின் அனுமதி இன்றி அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}