பெங்களூரு: பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கிய நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை வெறும் 46 ரன்களுக்கு இழந்து அதிர்ச்சி அளித்துள்ளது.
இந்தியா நியூசிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி இன்று பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை எடுத்தது. ஆனால் இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய கேப்டன் ரோஹித் சர்மாவும், யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் ரன் எடுக்கவே திணறும் நிலை ஏற்பட்டது. இதில் ரோஹித் சர்மா 2 ரன்களை எடுத்த நிலையில் டிம் செளத்தி பந்தில் போல்ட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து வந்த விராத் கோலி ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி மேலும் அதிர்ச்சியைக் கூட்டினார். தொடர்ந்து சர்பிராஸ் கானும் டக் அவுட் ஆக இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஜெய்ஸ்வால் 13 ரன்கள் எடுத்த நிலையில் மறுபக்கம் ரிஷாப் பந்த் 20 ரன்களை சேர்த்தார். இதுதான் இந்திய வீரர்களில் தனிப்பட்ட முறையில் எடுத்த அதிகபட்ச ரன்கள். மற்ற அனைவரும் சிங்கிள் டிஜிட்டைத் தாண்டவில்லை.

கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் டக் அவுட் ஆனார்கள். ரவிச்சந்திரன் அஸ்வின் இதுபோன்ற நேரங்களில் கை கொடுப்பார். அவரும் இன்று டக் ஆனதால் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. மொத்தம் 5 பேர் இன்று முட்டை வாங்கியதால் இந்திய அணிக்கு மிகப் பெரிய அவமானமாக போய் விட்டது. இறுதியில் 31.2 ஓவர்களிலேயே இந்தியா 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
நியூசிலாந்து தரப்பில் மாட் ஹென்றி அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்களைச் சாய்த்தார். மறுபக்கம் வில்லியம் ஓ ரூர்க்கி 4 விக்கெட்களை வீழ்த்தினார். டிம் செளத்திக்கு ஒரு விக்கெட் கிடைத்தது. மாட் ஹென்றி வெறும் 15 ரன்களை விட்டுமே விட்டுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல 6 ஓவர்களை வீசிய டிம் செளத்தி 8 ரன்களை மட்டுமே விட்டுத் தந்தார்.
இந்திய டெஸ்ட்கிரிக்கெட் வரலாற்றில், சொந்த ஊரில் நடந்த டெஸ்ட் போட்டியில் இவ்வளவு குறைந்த ரன்களைப் பெறுவது இதுவே முதல் முறையாகும். 91 வருட கால டெஸ்ட் வரலாற்றிலும் இதுவே முதல் முறையாகும். இந்திய பேட்டிங் ஆர்டர் இப்படி சீட்டுக்கட்டு போல சரிந்துத ரசிகர்களை அதிர வைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Cauvery River water Issue: காவிரி நீர் பிரச்சனை எப்போது துவங்கியது? .. இதற்கு என்ன தான் தீர்வு?
முதல்வர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் : கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்
டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்...கைது செய்யவும் தடை
மின்சார கட்டணம் உயர்வு உண்மையா? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!
வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்...தவறவிட்டால் அபராதம்
காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்கள் விலக்கு கோரி செந்தில் பாலாஜி மனு
2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்: 3 நாடுகளின் 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்
ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: பலியானோர் எண்ணிக்கை 10,000 ஆக உயர்வு!
மேகதாது அணை விவகாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!
{{comments.comment}}