இன்னும் 40 சீட் தான் வேணும்.. ஆட்சி யாருக்கு?.. பாஜக.,வை கலங்கடிக்கும் இந்தியா கூட்டணி

Jun 04, 2024,04:21 PM IST

டில்லி :  லோக்சபா தேர்தல் முடிவுகள் 2024 அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை நடைபெற்ற ஓட்டு எண்ணிக்கை நிலவரத்தின் படி பாஜக., 293 இடங்களிலும், இந்தியா கூட்டணி 233 இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருகின்றன. 


மொத்தமுள்ள 543 லோக்சபா உறுப்பினர் பதவியில் மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் 272 இடங்கள் பெரும்பான்மை பெற்றிருக்க வேண்டும். அப்படி பார்த்தால் பாஜக கூட்டணி ஏற்கனவே பெரும்பான்மை அளவை கடந்து விட்டது. இதனால் மூன்றாவது முறையாக மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. ஆனால் இந்த 293 என்ற எண்ணில், பாஜகவின் பங்கு என்று பார்த்தால் 239 இடங்கள் மட்டுமே. மற்ற அனைத்தும் கூட்டணி கட்சிகளுக்கு கிடைத்த வெற்றி தான். அதாவது பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. அது தனிப் பெரும் கட்சியாக மட்டுமே உருவெடுத்துள்ளது.




மற்றொரு புறம் இந்தியா கூட்டணி 233 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது.  மத்தியில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பெறுவதற்கு அந்தக் கூட்டணிக்கு,  இன்னும் 40 இடங்கள் மட்டுமே தேவை. தற்போது இருந்து வரும் முன்னிலை நிலவரங்களின் நிலைமை பெரிய அளவில் மாறினாலோ அல்லது கூட்டணி கட்சிகள் சிலவற்றை இந்தியா கூட்டணி தங்கள் வசம் இழுத்தாலோ மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பது சிக்கலாகி விடும். ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு சென்று விடும்.


இதனால் பாஜக தலைமை என்ன நடக்குமோ என்ன கலக்கத்தில் உள்ளது. குறிப்பாக சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமார் ஆகியோர் வெளியேறினால் சிக்கலாகி விடும். ஏற்கனவே பாஜக.,விற்கு பல மாநிலங்களில் கிடைத்துள்ள பின்னடைவின் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் யாரும் தெளியாத நிலையில் தலைக்கு மேல் இப்படி ஒரு கத்தி வந்து கொண்டிருக்கிறதே என்ற  கலக்கமும் தற்போது தொற்றிக் கொண்டுள்ளது. 


இதனால் இது பற்றி அவசரமாக கூடி ஆலோசிக்க காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஒரு பக்கமும், பாஜக கூட்டணி கட்சிகள் ஒரு பக்கமும் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன.

சமீபத்திய செய்திகள்

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்