டில்லி : லோக்சபா தேர்தல் முடிவுகள் 2024 அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை நடைபெற்ற ஓட்டு எண்ணிக்கை நிலவரத்தின் படி பாஜக., 293 இடங்களிலும், இந்தியா கூட்டணி 233 இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருகின்றன.
மொத்தமுள்ள 543 லோக்சபா உறுப்பினர் பதவியில் மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் 272 இடங்கள் பெரும்பான்மை பெற்றிருக்க வேண்டும். அப்படி பார்த்தால் பாஜக கூட்டணி ஏற்கனவே பெரும்பான்மை அளவை கடந்து விட்டது. இதனால் மூன்றாவது முறையாக மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. ஆனால் இந்த 293 என்ற எண்ணில், பாஜகவின் பங்கு என்று பார்த்தால் 239 இடங்கள் மட்டுமே. மற்ற அனைத்தும் கூட்டணி கட்சிகளுக்கு கிடைத்த வெற்றி தான். அதாவது பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. அது தனிப் பெரும் கட்சியாக மட்டுமே உருவெடுத்துள்ளது.

மற்றொரு புறம் இந்தியா கூட்டணி 233 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. மத்தியில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பெறுவதற்கு அந்தக் கூட்டணிக்கு, இன்னும் 40 இடங்கள் மட்டுமே தேவை. தற்போது இருந்து வரும் முன்னிலை நிலவரங்களின் நிலைமை பெரிய அளவில் மாறினாலோ அல்லது கூட்டணி கட்சிகள் சிலவற்றை இந்தியா கூட்டணி தங்கள் வசம் இழுத்தாலோ மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பது சிக்கலாகி விடும். ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு சென்று விடும்.
இதனால் பாஜக தலைமை என்ன நடக்குமோ என்ன கலக்கத்தில் உள்ளது. குறிப்பாக சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமார் ஆகியோர் வெளியேறினால் சிக்கலாகி விடும். ஏற்கனவே பாஜக.,விற்கு பல மாநிலங்களில் கிடைத்துள்ள பின்னடைவின் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் யாரும் தெளியாத நிலையில் தலைக்கு மேல் இப்படி ஒரு கத்தி வந்து கொண்டிருக்கிறதே என்ற கலக்கமும் தற்போது தொற்றிக் கொண்டுள்ளது.
இதனால் இது பற்றி அவசரமாக கூடி ஆலோசிக்க காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஒரு பக்கமும், பாஜக கூட்டணி கட்சிகள் ஒரு பக்கமும் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன.
மேகதாது அணை விவகாரம்: கர்நாடகா செல்ல முடிவு செய்தது ஏன்? முதல்வர் விஜய் சட்டசபையில் விளக்கம்
சபாஷ் சரியான போட்டி.. தமிழ்நாடு சட்டசபையில் அனல் பறந்த காரசார விவாதங்கள்
முதல்வர் விஜய் மீதான விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் மனைவி சங்கீதா
மேகதாதுவுக்காக முதலில் கூட்டம் போடுங்க.. எம்.பிக்கள் கூட்டத்துக்கு வர்றோம்.. திமுக நிபந்தனை
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து
Whatsapp Groups: வாட்ஸ்அப் ஃபேமிலி குரூப் அட்டகாசங்கள்.. ஒரு 'நோ எக்சிட்' காமெடி த்ரில்லர்!
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் உடனே FIR: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
வெள்ளிக்கிழமை இரவு.. "நான் தான் கெத்து!".. Weekend புத்துணர்ச்சி கலாட்டாக்கள்!
தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி சட்ட திருத்த முன்வடிவு சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது
{{comments.comment}}