டெல்லி: நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு என்பது மிகப் பெரிய கனவாகவே இருந்து வருகிறது. தற்போது அது நனவாகும் சூழல் எழுந்துள்ளது.
பெண்களுக்கு முக்கிய அதிகார மையங்களில் உரிய பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்து வருகிறது. இப்போதுதான் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைத்து பெண்கள் அசத்திக் கொண்டுள்ளனர். பஞ்சாயத்து ராஜ் சட்டத்தைக் கொண்டு வந்து பெண்களுக்கு உயர்வு அளித்ததற்காக மறைந்த பிரதமர் ராஜீவ் காந்திக்குத்தான் பெண்கள் நன்றியைச் சொல்ல வேண்டும்.
அதேபோல நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தைக் கொண்டு வர காங்கிரஸ் முயற்சித்தது. முதலில் ராஜ்யசபாவில் இந்த சட்ட மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. ஆனால் பல்வேறு வட மாநிலக் கட்சிகளின் கடும் எதிர்ப்பால் இந்த சட்டம் லோக்சபாவில் தாக்கல் செய்யப்படவே இல்லை.
திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு தென்னிந்திய கட்சிகள் இந்த சட்டத்தை ஆதரித்தன. ஆனால் ராஷ்டிரிய ஜனதாதளம் உள்ளிட்ட பல்வேறு வட மாநில கட்சிகள் இதை எதிர்த்தன. இதனால்தான் இந்த சட்டம் கனவாகவே நீடித்து வருகிறது. இந்த நிலையில்தான் தற்போது இந்த சட்டத்தை நிறைவேற்றும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. இம்முறை இச்சட்டம் கண்டிப்பாக நிறைவேறும் என்று தெரிகிறது.
இதற்கிடையே, இந்திய நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ள பெண் உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம் நமது அண்டை நாடுகளை விட மிகவும் குறைவாக இருக்கிறது. சர்வதேச அளவில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கும் நாடுகள் வரிசையில் 185 நாடுகளில் 141வது இடத்தில் இருக்கிறது இந்தியா.
அதாவது இந்திய நாடாளுமன்றத்தில் பெண்ளின் விகிதாச்சாரம் 15 சதவீதமாக உள்ளது. சர்வதேச சராசரி இதில் 26 சதவீதமாகும். பாகிஸ்தானில் பெண் எம்.பிக்களின் விகிதாச்சாரம் 20 சதவீதமாக உள்ளது. இங்கு நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 17 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. வங்கதேசத்தில் 21 சதவீத அளவுக்கு பெண் எம்.பிக்கள் உள்ளனர். நேபாளம் இதை விட சிறப்பான நிலையில் இருக்கிறது. அங்கு 30 சதவீத அளவுக்கு பெண் எம்.பிக்கள் உள்ளனர்.
அமெரிக்காவில் 29, இங்கிலாந்தில் 35 சதவீத அளவுக்கு பெண் உறுப்பினர்கள் உள்ளனர். பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளிக்காத நாடுகள் வரிசையில் இலங்கை (5%), கத்தார் (4%), ஓமன் (2%), குவைத் (3%) ஆகியவை உள்ளன.
நியூசிலாந்து , ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றில் பெண்களுக்கு 50 சதவீத அளவுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில்தான் உலகிலேயே அதிகபட்சமாக 61 சதவீத பெண்கள் இடம் பெற்றுள்ளனர். அதாவது அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் பெண்கள்தான் அதிகம்.
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு!
காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்
தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.67,452 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்: லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு!
மினு மினுங்கும் நட்சத்திரம் கரு கருவெனும் வானம் பள பளக்கிறது இரவு!
லார் கிப்பான் குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்!
அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் போயிருக்கீங்களா.. மறக்காம போய்ட்டு வாங்க ஒரு வாட்டி!
Short Story by Sudha Thirunarayanan: காதல் 50!
"ஏம்மா.. சரி சரி".. கவிதை நடையில் கதை படிக்க வாங்க!
{{comments.comment}}