மும்பை: இந்திய பங்குச் சந்தை திங்கட்கிழமை நல்ல ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே முதலீட்டாளர்கள் சுமார் ரூ.5 லட்சம் கோடி லாபம் அடைந்தனர். உலகளாவிய மற்றும் உள்நாட்டு காரணிகள் சந்தைக்கு சாதகமாக இருந்ததால் இந்த ஏற்றம் ஏற்பட்டது.
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ், 81,315.79 புள்ளிகளில் தொடங்கியது. இது முந்தைய நாள் முடிவை விட 1.3% அதிகம். தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 50 புள்ளிகள் கூடி, 1.3% உயர்ந்து 24,938.20 புள்ளிகளில் தொடங்கியது. ரஷ்யா-உக்ரைன் போர் குறைய வாய்ப்புள்ளதால் உலக சந்தைகள் நம்பிக்கை அடைந்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவின் மீதான வரிகளை குறைக்கலாம் என்று கூறியது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்தது.

S&P என்ற உலகளாவிய மதிப்பீட்டு நிறுவனம் இந்தியாவின் கடன் மதிப்பீட்டை உயர்த்தியுள்ளது. இது இந்திய பொருளாதாரத்திற்கு ஒரு நல்ல அறிகுறியாகும். இந்தியாவின் வலுவான பொருளாதாரம், நிறுவனங்களின் நல்ல வருவாய் மற்றும் சில்லறை விற்பனையில் அதிக பங்களிப்பு ஆகியவை சந்தையின் ஏற்றத்திற்கு காரணங்களாக உள்ளன. வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அதிகரித்ததும் சந்தைக்கு ஊக்கத்தை அளித்துள்ளது.
முக்கியமாக ஜிஎஸ்டி வரி விகிதங்கள் மாற்றவுள்ளதும் கூட பாசிட்டிவ் அடையாளமாக பார்க்கப்படுகிறது. இதனால் ஆட்டோமொபைல் மற்றும் நுகர்வோர் பொருட்கள் பங்குகள் உயர்ந்துள்ளன.
எலும்பை உடைப்பதாக பேச்சு: திமுக எம்எல்ஏ., மார்க்கண்டேயன் கைது - 3 பிரிவுகளில் வழக்கு
"சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?" – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
டெல்லி ஜந்தர் மந்தரில் தீவிரமடைந்த போராட்டம்: நாடாளுமன்ற கதவுகள் மூடல்
Monday Motivation: வாழ்த்த வயதில்லை என்போரே.. வசைமாரிப் பொழிய வயது தடையில்லையோ!
சிந்தனைச் சிதறல்.. தொடங்குவதற்கு முன்பு பலமுறை யோசியுங்கள்!
அஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள்.. மாணவர்களுக்கு பரிசு
தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி? முதலமைச்சர் விஜயுடன் முக்கிய ஆலோசனை!
மாங்கனி நகராம் சேலத்தில் களை கட்டும்.. கோட்டை மாரியம்மன் ஆடி திருவிழா 2026
கல்விச் செம்மல்.. தாயுள்ளம் கொண்ட சேவைத் தாய்.. வாழ்த்துகள் மதனகுமாரி அம்மா!
{{comments.comment}}