மும்பை: இந்திய பங்குச் சந்தை திங்கட்கிழமை நல்ல ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே முதலீட்டாளர்கள் சுமார் ரூ.5 லட்சம் கோடி லாபம் அடைந்தனர். உலகளாவிய மற்றும் உள்நாட்டு காரணிகள் சந்தைக்கு சாதகமாக இருந்ததால் இந்த ஏற்றம் ஏற்பட்டது.
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ், 81,315.79 புள்ளிகளில் தொடங்கியது. இது முந்தைய நாள் முடிவை விட 1.3% அதிகம். தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 50 புள்ளிகள் கூடி, 1.3% உயர்ந்து 24,938.20 புள்ளிகளில் தொடங்கியது. ரஷ்யா-உக்ரைன் போர் குறைய வாய்ப்புள்ளதால் உலக சந்தைகள் நம்பிக்கை அடைந்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவின் மீதான வரிகளை குறைக்கலாம் என்று கூறியது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்தது.

S&P என்ற உலகளாவிய மதிப்பீட்டு நிறுவனம் இந்தியாவின் கடன் மதிப்பீட்டை உயர்த்தியுள்ளது. இது இந்திய பொருளாதாரத்திற்கு ஒரு நல்ல அறிகுறியாகும். இந்தியாவின் வலுவான பொருளாதாரம், நிறுவனங்களின் நல்ல வருவாய் மற்றும் சில்லறை விற்பனையில் அதிக பங்களிப்பு ஆகியவை சந்தையின் ஏற்றத்திற்கு காரணங்களாக உள்ளன. வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அதிகரித்ததும் சந்தைக்கு ஊக்கத்தை அளித்துள்ளது.
முக்கியமாக ஜிஎஸ்டி வரி விகிதங்கள் மாற்றவுள்ளதும் கூட பாசிட்டிவ் அடையாளமாக பார்க்கப்படுகிறது. இதனால் ஆட்டோமொபைல் மற்றும் நுகர்வோர் பொருட்கள் பங்குகள் உயர்ந்துள்ளன.
கரூர் வழக்கு.. 2வது சிபிஐ விசாரணை முடிவுக்கு வந்தது.. புன்னகையுடன் வெளியேறிச் சென்ற விஜய்!
2026ம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டம்.. நாளை கூடுகிறது.. ஆளுநர் உரையாற்றுவாரா?
அடுத்த திட்டம் என்ன?...ஆதரவாளர்களுடன் சசிகலா தீவிர ஆலோசனை
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.. இதுவரை 12.80 லட்சம் பேர் மனு
மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் தெறி ரீ ரிலீஸ்...காரணம் இது தானா?
71 மாவட்டங்களுக்கும் தலைவர்கள்.. ஒரு வழியாக அறிவித்தது காங்கிரஸ்!
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1,360 உயர்வு
அமைதி .. சத்தம் இல்லாமல் வந்தபோது...!
சிவபெருமானின் முழு அருளை பெற இந்நன்நாளை தவற விடாதீர்கள்
{{comments.comment}}