Motivational Monday: 1000 புள்ளிகள் அதிரடி உயர்வுடன் துவங்கிய இந்திய பங்குச் சந்தைகள்!

Aug 18, 2025,10:45 AM IST

மும்பை: இந்திய பங்குச் சந்தை திங்கட்கிழமை நல்ல ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே முதலீட்டாளர்கள் சுமார் ரூ.5 லட்சம் கோடி லாபம் அடைந்தனர். உலகளாவிய மற்றும் உள்நாட்டு காரணிகள் சந்தைக்கு சாதகமாக இருந்ததால் இந்த ஏற்றம் ஏற்பட்டது. 


மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ், 81,315.79 புள்ளிகளில் தொடங்கியது. இது முந்தைய நாள் முடிவை விட 1.3% அதிகம். தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 50 புள்ளிகள் கூடி, 1.3% உயர்ந்து 24,938.20 புள்ளிகளில் தொடங்கியது. ரஷ்யா-உக்ரைன் போர் குறைய வாய்ப்புள்ளதால் உலக சந்தைகள் நம்பிக்கை அடைந்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவின் மீதான வரிகளை குறைக்கலாம் என்று கூறியது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்தது.




S&P என்ற உலகளாவிய மதிப்பீட்டு நிறுவனம் இந்தியாவின் கடன் மதிப்பீட்டை உயர்த்தியுள்ளது. இது இந்திய பொருளாதாரத்திற்கு ஒரு நல்ல அறிகுறியாகும். இந்தியாவின் வலுவான பொருளாதாரம், நிறுவனங்களின் நல்ல வருவாய் மற்றும் சில்லறை விற்பனையில் அதிக பங்களிப்பு ஆகியவை சந்தையின் ஏற்றத்திற்கு காரணங்களாக உள்ளன. வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அதிகரித்ததும் சந்தைக்கு ஊக்கத்தை அளித்துள்ளது. 


முக்கியமாக ஜிஎஸ்டி வரி விகிதங்கள் மாற்றவுள்ளதும் கூட பாசிட்டிவ் அடையாளமாக பார்க்கப்படுகிறது. இதனால் ஆட்டோமொபைல் மற்றும் நுகர்வோர் பொருட்கள் பங்குகள் உயர்ந்துள்ளன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாஜகவிலிருந்து விலகினார்.. அண்ணாமலையின் புதிய சகாப்தம் இன்று தொடங்குகிறது!

news

உலக சுற்றுச்சூழல் தினம்.. கொண்டாடுவோம் இயற்கையை.. பாதுகாப்போம் பூமியை!

news

ஆசையே அலை போலே!

news

அப்பத்தா அப்பத்தா!.. ஒரு நிமிடக் கதை (14)

news

இலங்கையில் பரிதாபம்.. முதியோர் இல்லத்தில் கோர தீ விபத்து.. 12 பேர் உயிரிழப்பு

news

காங்கிரஸால் காயப்பட்டுள்ளோம்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்.. திமுக

news

ரோஜா பூ கொடுத்து புதிய மாணவர்களை அன்புடன் வரவேற்ற தேவகோட்டை ஆசிரியர்கள்!

news

புதிய கல்வியாண்டு.. அனைவரும் இணைந்து அறிவுச் சுடரை உயர்த்திப் பிடிப்போம்!

news

Tamil Life Qoutes: தெரிந்து கொள்வதை விட புரிந்து கொண்டால் .. அன்பு ஆயுள் வரை நீடிக்கும்.!

அதிகம் பார்க்கும் செய்திகள்