மும்பை: இந்திய பங்குச் சந்தை திங்கட்கிழமை நல்ல ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே முதலீட்டாளர்கள் சுமார் ரூ.5 லட்சம் கோடி லாபம் அடைந்தனர். உலகளாவிய மற்றும் உள்நாட்டு காரணிகள் சந்தைக்கு சாதகமாக இருந்ததால் இந்த ஏற்றம் ஏற்பட்டது.
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ், 81,315.79 புள்ளிகளில் தொடங்கியது. இது முந்தைய நாள் முடிவை விட 1.3% அதிகம். தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 50 புள்ளிகள் கூடி, 1.3% உயர்ந்து 24,938.20 புள்ளிகளில் தொடங்கியது. ரஷ்யா-உக்ரைன் போர் குறைய வாய்ப்புள்ளதால் உலக சந்தைகள் நம்பிக்கை அடைந்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவின் மீதான வரிகளை குறைக்கலாம் என்று கூறியது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்தது.

S&P என்ற உலகளாவிய மதிப்பீட்டு நிறுவனம் இந்தியாவின் கடன் மதிப்பீட்டை உயர்த்தியுள்ளது. இது இந்திய பொருளாதாரத்திற்கு ஒரு நல்ல அறிகுறியாகும். இந்தியாவின் வலுவான பொருளாதாரம், நிறுவனங்களின் நல்ல வருவாய் மற்றும் சில்லறை விற்பனையில் அதிக பங்களிப்பு ஆகியவை சந்தையின் ஏற்றத்திற்கு காரணங்களாக உள்ளன. வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அதிகரித்ததும் சந்தைக்கு ஊக்கத்தை அளித்துள்ளது.
முக்கியமாக ஜிஎஸ்டி வரி விகிதங்கள் மாற்றவுள்ளதும் கூட பாசிட்டிவ் அடையாளமாக பார்க்கப்படுகிறது. இதனால் ஆட்டோமொபைல் மற்றும் நுகர்வோர் பொருட்கள் பங்குகள் உயர்ந்துள்ளன.
Tn elections 2026 தமிழக தேர்தலுக்கு இன்னும் 2 நாள் மட்டுமே... பிரச்சாரம் நாளையுடன் ஓய்கிறது
திடீரென வரும் உறவும்… திடீரென விலகும் மனமும்!
Poems.. மனதில் என்றும் அழியாமல் தைக்கும் கலையே.. கவிதை!
சிந்தனைச் சிதறல்.. உலகின் உன்னதமான மொழி எது தெரியுமா?
When Care Turns Blind.. அன்போடு சுட்டிக் காட்டப்படும் தவறுகள்.. நல்லதே!
Deepa Ravi Poem: நீலவானும் நீயும் நானும்
Amarnath Yathra.. எனது கண்ணோட்டத்தில் அமர்நாத் யாத்திரை.. ஒரு பயணக் கட்டுரை (1)
Monday Motivational Poem: தொலைந்து போக ஆசை!
Siva Puranam: அரும் பெரும் ஞானபொக்கிஷம் ... சிவபுராணம் (1)
{{comments.comment}}