இந்திய வரலாறு இனி தமிழ் மண்ணிலிருந்தே எழுதப்படும்.. கனிமொழி எம்.பி. பெருமிதம்

Jan 23, 2025,05:01 PM IST

சென்னை: இனி இந்திய வரலாறு தமிழ் மண்ணிலிருந்தே எழுதப்படும் என்பதில் ஒவ்வொரு தமிழரும் பெருமைகொள்ளும் உணர்ச்சிமிகு தருணமிது என்று எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.


சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இரும்பின் தொன்மை என்ற நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து காணொளி மூலமாக கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்திற்கும், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்திற்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.


அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 5300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பு தொழில்நுட்பம் தமிழ்நாட்டில் அறிமுகமாகி விட்டது. அககழ்வா்ய்வு மூலம் அண்மையில் கிடைக்கப் பெற்ற  கதிரியக்க காலக் கணக்கீடுகள், இரும்பின் காலத்தை கிமு 4000க்கு முன்பு கொண்டு சென்று விட்டது. தமிழ்நாட்டில் 5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு அறிமுகமாகியிருக்கிறது என்று உறுதியாக சொல்லலாம் என்று தெரிவித்திருந்தார்.




இதனைத்தொடர்ந்து, எம்.பி., கனிமொழி தனது எக்ஸ் தள பதிவில், 


இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை

நீலத்து அன்ன பாசிலை அகந்தோறும்

வெள்ளி அன்ன விளங்கினர் நாப்பண்

பொன்னின் அன்ன நறுந்தாது உதிர

(நற்றினை 249:1-4)


இரும்பின் வலிமையை ஒத்தது புன்னைமரம் என்கிறது எட்டுத்தொகையில் முதல்நூலான நற்றினை. உலக வரலாற்றிலும், நாகரிகங்களில் வளர்ச்சியிலும் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியது இரும்பின் பயன்பாடு, நமது இலக்கியங்கள் எடுத்தியம்புவது போல், தமிழ் நிலத்திலிருந்தே இரும்பின் காலம் தொடங்கியதாகவும் புதிய ஆதாரங்களை அறிவியல் பூர்வமாக உலகிற்கு வழங்கியுள்ள முதல்வர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 


இனி இந்திய வரலாறு தமிழ் மண்ணிலிருந்தே எழுதப்படும் என்பதில் ஒவ்வொரு தமிழரும் பெருமைகொள்ளும் உணர்ச்சிமிகு தருணமிது என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்