இன்றைய உலகில் தகவல் தொழில்நுட்பம் மனித வாழ்க்கையின் அத்தியாவசிய பகுதியாக மாறியுள்ளது. கணினி, இணையம், கைபேசி, செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் வாழ்க்கையை எளிதாக்கி உள்ளன. ஆனால் அவற்றின் பயன்பாடு சரியாக இல்லாவிட்டால் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. எனவே தகவல் தொழில்நுட்பம் வரமா? சாபமா? என்ற கேள்வி எழுகிறது.
தகவல் தொழில்நுட்பத்தின் வரங்கள்
தகவல் தொழில்நுட்பம் மனிதனுக்கு பல நன்மைகளை வழங்கியுள்ளது. உலகின் எந்த இடத்திலிருந்தும் தகவல்களை உடனுக்குடன் பெற முடிகிறது. கல்வித் துறையில் ஆன்லைன் வகுப்புகள், மின் நூலகங்கள் மாணவர்களின் அறிவை விரிவாக்குகின்றன. மருத்துவத் துறையில் நவீன பரிசோதனைகள் உயிர்களை காப்பாற்றுகின்றன. வங்கி, வணிகம், போக்குவரத்து, அரசுத் துறைகள் ஆகியவற்றில் நேரமும் உழைப்பும் மிச்சமாகிறது.
தகவல் தொழில்நுட்பத்தின் சாபங்கள்

அதேசமயம், தகவல் தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. சமூக வலைத்தள அடிமைத்தனம் மனிதர்களிடையே நேரடி தொடர்பை குறைக்கிறது. மாணவர்களின் கவனம் சிதறி கல்வி பாதிக்கப்படுகிறது. இணைய மோசடிகள், போலி செய்திகள், தனியுரிமை மீறல்கள் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளன. மேலும் தொழில்நுட்ப வளர்ச்சியால் சில பாரம்பரிய வேலைகள் குறைந்து வேலை இழப்பும் அதிகரிக்கிறது.
மனித வாழ்க்கையில் அதன் தாக்கம்
தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு உடல் உழைப்பை குறைத்து உடல் நலக் கோளாறுகள் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. குடும்ப உறவுகளிலும் சமூக உறவுகளிலும் இடைவெளி உருவாகிறது. தொழில்நுட்பம் மனிதனை கட்டுப்படுத்தும் நிலை வந்தால் அது சாபமாக மாறுகிறது.
சரியான பயன்பாட்டின் அவசியம்
தகவல் தொழில்நுட்பத்தை அறிவுடனும் கட்டுப்பாட்டுடனும் பயன்படுத்த வேண்டும். தேவையற்ற பயன்பாட்டை தவிர்த்து, கல்வி, முன்னேற்றம் மற்றும் மனித நலனுக்காக பயன்படுத்தினால் அது ஒரு பெரிய வரமாகும்.
தகவல் தொழில்நுட்பம் தன்னிச்சையாக வரமோ சாபமோ அல்ல. மனிதன் அதை பயன்படுத்தும் விதமே அதன் மதிப்பை நிர்ணயிக்கிறது. வாழ்க்கையின் சேவகராக வைத்தால் அது வரம்; எஜமானனாக மாற்றினால் அது சாபம்.
(ச. சுமதி, MA.,BEd., ஆங்கில பட்டதாரி ஆசிரியர், ஸ்ரீ KGS மேல்நிலைப் பள்ளி , ஆடுதுறை, திருவிடைமருதூர் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்)
அரசு மரியாதையுடன் நாளை இயக்குநர் பாக்யராஜின் உடல் தகனம்
முதல்வர் விஜய், உதயநிதி உட்பட 55 எம்எல்ஏ.,க்களின் வெற்றியை எதிர்த்து வழக்கு
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்: பொது வேட்பாளராக சீமான் களம் காண்கிறாரா?
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகல்: பொதுக்குழு கூட்டத்தில் அதிரடி முடிவு!
தமிழ் சினிமாவின் ‘திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ்: முடிவுக்கு வந்த சகாப்தம்
இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார்
தமிழக பட்ஜெட் 2026 எப்போது?: முதலமைச்சர் விஜய் தலைமையில் துறை வாரியான ஆலோசனை
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? என்ன மு.க.ஸ்டாலின் இப்படி சொல்லிட்டார்?
தூய்மைப் பணிகள் தனியார் மயம்: பலத்த எதிர்ப்பால் டெண்டரை ரத்து செய்தது அரசு!
{{comments.comment}}