பெய்ரூட்: லெபனானில் மீண்டும் இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் மேலும் 300 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அப்பகுதிகளில் வாழும் மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே நடந்து வரும் போரில், லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பானது ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது. இதனால் கடந்த வாரம் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த பேஜர் மற்றும் வாக்கிடாக்கி போன்ற கையடக்க தொலைதொடர்பு சாதனங்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறின. இதில் குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர்.3000 பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கு காரணம் இஸ்ரோ என ஈரான் கடுமையாக குற்றம் சாட்டி வந்தது.

இந்த நிலையில் லெபனான் தலைநகர் தெற்கு பெய்ரூட்டில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் போர் விமானங்கள் மூலம் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 300 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்கள், தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கு உள்ள மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். கடந்த ஐந்து நாட்களில் மட்டும் லெபனானில் இருந்து சுமார் ஒரு லட்சத்திற்கு அதிகமான மக்கள் வெளியேறி சிரியாவில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல் தாக்குதலில் ஏற்கனவே 700 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு நடந்த தாக்குதலால் மேலும் 300 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 1000ஐ தாண்டி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
India win Women's world cup: அபார பீல்டிங்.. அட்டகாச பவுலிங்.. இந்திய மகளிருக்கு முதல் உலகக் கோப்பை!
SIR பணிகளை நிறுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் வழக்குத் தொடர்வோம்.. அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானம்
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியே SIR.. விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு
அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக
SIR-க்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு
அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி
மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்
{{comments.comment}}