பெய்ரூட்: லெபனானில் மீண்டும் இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் மேலும் 300 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அப்பகுதிகளில் வாழும் மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே நடந்து வரும் போரில், லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பானது ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது. இதனால் கடந்த வாரம் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த பேஜர் மற்றும் வாக்கிடாக்கி போன்ற கையடக்க தொலைதொடர்பு சாதனங்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறின. இதில் குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர்.3000 பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கு காரணம் இஸ்ரோ என ஈரான் கடுமையாக குற்றம் சாட்டி வந்தது.

இந்த நிலையில் லெபனான் தலைநகர் தெற்கு பெய்ரூட்டில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் போர் விமானங்கள் மூலம் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 300 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்கள், தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கு உள்ள மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். கடந்த ஐந்து நாட்களில் மட்டும் லெபனானில் இருந்து சுமார் ஒரு லட்சத்திற்கு அதிகமான மக்கள் வெளியேறி சிரியாவில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல் தாக்குதலில் ஏற்கனவே 700 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு நடந்த தாக்குதலால் மேலும் 300 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 1000ஐ தாண்டி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோவிற்கு அனுமதி கிடையாது: புதுச்சேரி சபாநாயகர் செல்வம்
உக்ரைன் - ரஷ்யா போர்.. இதுக்கு என்ட் கார்டே கிடையாதாய்யா.. லேட்டாகுமாம்.. அமெரிக்கா அறிவிப்பு!
டிட்வா புயல் பாதிப்பு...ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம்: அமைச்சர் k.k.s.s.r.ராமச்சந்திரன் அறிவிப்பு!
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நாளை லீவு?.. என்ன காரணம் தெரியுமா.. வாங்க இதைப் படியுங்க!
மதகு சரி செய்யாததால் குழந்தை உயிரிழப்பு... திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது தெரியுமா?
திருநெல்வேலி மாவட்டத்தில்.. 2.33 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்பு!
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா.. பரணி தீபத்தின் விசேஷம் என்ன தெரியுமா?
{{comments.comment}}