ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து.. இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல்.. மேலும் 300 பேர் பலி!

Sep 28, 2024,10:23 AM IST

பெய்ரூட்:   லெபனானில் மீண்டும் இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் மேலும் 300 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அப்பகுதிகளில் வாழும் மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.


இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே நடந்து வரும் போரில், லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பானது ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது. இதனால் கடந்த வாரம் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த பேஜர் மற்றும் வாக்கிடாக்கி போன்ற கையடக்க தொலைதொடர்பு சாதனங்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறின. இதில் குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர்.3000 பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கு காரணம் இஸ்ரோ என ஈரான் கடுமையாக குற்றம் சாட்டி வந்தது.




இந்த நிலையில் லெபனான் தலைநகர் தெற்கு பெய்ரூட்டில்  இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் போர் விமானங்கள் மூலம் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 300 பேர் உயிரிழந்துள்ளனர்.


 ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்கள், தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கு உள்ள மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். கடந்த ஐந்து நாட்களில் மட்டும் லெபனானில் இருந்து சுமார் ஒரு லட்சத்திற்கு அதிகமான மக்கள் வெளியேறி சிரியாவில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


 இஸ்ரேல் தாக்குதலில் ஏற்கனவே 700 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு நடந்த தாக்குதலால் மேலும் 300 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை  1000ஐ தாண்டி உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 02, 2025... இன்று பணவரவை பெற போகும் ராசிக்காரர்கள்

news

திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

திருப்புவனம் அஜித்குமார் மரணம்: நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்

news

திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: நீதிபதிகள்

news

Thiruppuvanam Custodial Death: அஜித்குமார் மரணம்.. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!

news

ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!

news

தவெகவின் யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு... ஜூலை 3ல் தீர்ப்பு

news

வயசு 22தான்.. ஸ்டூண்ட்டாக நடித்த டுபாக்கூர் இளைஞர்.. 22 மெயில்களை கிரியேட் செய்து அதிரடி!

news

வலப்புறத்தில் அம்பாள்.. நுரையால் உருவான விநாயகர்.. திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில் அற்புதம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்