சென்னை: ஹாய் நண்பர்களே உங்க ஊர்ல மழை பெய்யுதா.. இங்கெல்லாம் ஜிலுசிலுன்னு பெய்யுதுங்க.. சரி சரி வாங்க.. உங்களுக்கு.. நம்ம எல்லோருக்கும் பிடித்த.. கடி ஜோக்ஸ் படிச்சுட்டே மழையை என்ஜாய் பண்ணலாம்.
விடுகதைகள் என்றாலே அனைவருக்கும் விருப்பமானது. அதிலும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை சுவாரசியமான விடுகதைகளை ஆவலுடன் கேட்டு ரசிப்பார். விடுகதை என்பது தற்காலத்தில் மட்டுமா உள்ளது. கற்காலத்தில் இருந்து தானே விடுகதைகள் புழக்கத்தில் உள்ளது.
எப்படி தெரியுமா.. சங்ககாலத்தில் ஒருவருக்கு பரிசளிக்க வேண்டும் என்றால் ஒரு புதிர் போட்டு, அவர்களின் அறிவை சோதித்து, அதற்கு விடை அளித்த பின்னர் தான் அரசர் அந்த பரிசுகளை வழங்குவார்கள். அப்படி ஒவ்வொரு செயல்களிலும் விடுகதைகள் முக்கியமான ஒன்றாக திகழ்ந்து வந்தது.

இந்த அறிவியல் உலகத்தில் உலகமே மாற்றம் ஆகி உள்ளது. அதில் விடுகதைகளுக்கு மட்டும் விதிவிலக்கா என்ன..அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப விடுகதைகளும் மாறிக்கொண்டு தான் வருகிறது. அந்த வரிசையில் தற்போது கடி ஜோக் என்ற பெயரில் விடுகதைகள் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. விடைகள் மொக்கையாக இருந்தாலும் கூட அந்த சஸ்பென்ஸும், அதில் உள்ள சுவாரஸ்யமும்தான் இங்கு ரசிக்கப்படுகிறது
சரி சரி கொஞ்சம் கடிச்சுக்கலாமா.. வாங்க!
கொசு நம்ம வீட்டுக்கு வராம இருக்க என்ன பண்ணனும்?
(அதுக்கு அட்ரஸ் கொடுக்காம இருக்கணும்)
இரண்டு வீரர்கள் கத்தி சண்டை போட்டால் என்ன ஆகும்?
(தொண்டை கட்டி வலிக்கும்)
ஒரு Aunty சர்க்கரை பாக்ஸ்-ல உப்புன்னு எழுதி வெச்சாங்க. ஏன்?
(எறும்பை ஏமாத்தறதுக்குத்தான்!)
Circle மற்றும் square இதுல எது பெயில் ஆகும்?
ஒரு பையன் மாடில இருந்து குக்கரை கீழ போட்டான். ஆனா அந்த குக்கருக்கு எதுவுமே ஆகல ஏன்?
கடைசி ரெண்டுக்கும் நீங்களே விடையைக் கண்டுபிடிச்சுச் சொல்லுங்க பார்ப்போம்.
பாமகவின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு: 341 யோசனைகளை முன்வைத்த அன்புமணி
ஜூலை 31 முதல் தமிழ்நாடு முழுவதும் கறிக் கோழி விற்பனை நிறுத்தம்
டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது உண்மையா? புரளியா? நயினார் நாகேந்திரன் கேள்வி
நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது தாக்குதல்: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
தஞ்சையில் திருமுறை இசை வெளியீட்டு விழா: ஆகஸ்ட் 7-ல் கோலாகலமாக நடைபெறுகிறது!
உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
தேர்வு முறைகேடு தடுப்பு சட்டத்திருத்த மசோதா: எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே தாக்கல்
டெல்லி போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்... நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தர்ணா
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க அனுமதி
{{comments.comment}}