- மீனா
சென்னை: கணவனை எப்படி ஐஸ் வச்சா நம்ம கிட்ட மடங்கிப் போய்க் கிடப்பார்னு மனைவிகளுக்கு சொல்லித் தரவே தேவையில்லைங்க.. பயங்கரமா யோசிப்பாங்க பாரு.. நமக்குத்தான் திகிலாக இருக்கும்!
அப்படிப்பட்ட அதி பயங்கரமான ஜோக்ஸைத்தான் இப்போ நீங்க படிக்கப் போறீங்க.. தைரியமா வாங்க பாஸ்.. ஜோக்குதானே.. ஜாலியா படிச்சுட்டு சிரிச்சுட்டுப் போய்ரலாம்.. அப்படியே கையோட நாலு பிஸ்கட்டும், சூடா டீயும் எடுத்துட்டு வாங்க.. (டீயை) குடிச்சுட்டே பார்க்கலாம்.
நீங்கதாங்க உலகமே!
கணவன்: என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும்?
மனைவி: என்னங்க இப்படி கேட்டுட்டீங்க. உங்களுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்.
கணவன்: என்ன வேணும்னாலும் செய்வியா?
மனைவி: ஆமாங்க,இந்த உலகத்தோட போராடுவன், சண்டையிடுவேன், உலகத்தையே தலைகீழா புரட்டிப் போடுவேன்.
கணவன்: ஆனால் , இதையெல்லாம் நீ என்கிட்ட தான செய்துகிட்டு இருக்க .
மனைவி: ஆமாங்க ,நீங்க தான என்னோட உலகமே.
கணவன்:😳😳
குறுக்கே வந்த கெளஷிக்!
ஆசிரியர்: நான் தான் உங்களுக்கு தமிழ் பாடம் எடுக்க புதிதாக வந்திருக்கும் ஆசிரியர்
மாணவர்கள்: குட் மார்னிங் சார்
ஆசிரியர்: நான் உங்களுக்கு தமிழ் பாடம் எடுக்கிறதுனால, என்னுடைய வகுப்பில் நீங்கள் எல்லாரும் தமிழ்ல தான் பேசணும்
மாணவர்கள்: சரி ஐயா
ஆசிரியர்: உங்கள் பெயர், உங்களை பற்றி அறிமுகப்படுத்திக்கோங்க
மாணவன்: ஐயா மாட்டுக்கு உடம்பு சரியில்லை.
ஆசிரியர்: உங்க வீட்டு மாட்டுக்கு உடம்பு சரியில்லைன்னா எனக்கு என்ன. நான் கேட்டது உன்னுடைய பெயர்
மாணவன்: கௌஷிக் என்ற பெயரை தான் ஐயா தமிழில் சொன்னேன்.
ஆசிரியர்:😲😲
என்னா அடி ஆத்தாடி!
கணவன்: ஏண்டி பிள்ளைய போட்டு இப்படி அடிக்கிற?
மனைவி: நல்லா படிச்சா தான் நல்ல வாழ்க்கை அமையும், பெரிய ஆளான பின்னாடி நல்ல மனைவி அமைவானு சொன்னேன்.
கணவன்: நல்லது தானே சொல்லி இருக்க. அதுக்கு எதுக்கு அவன் அடிவாங்குறான்
மனைவி: அப்பாவையும் அவங்க அம்மா நல்லா படிக்க சொல்லி அடிச்சிருந்தா அப்பாவுக்கு நல்ல மனைவி அமைஞ்சி இருப்பாங்க இல்லனு கேட்கிறான் .
கணவன்:!!!!!
அதெல்லாம் தெரியும் பாஸ்.. கம்முனு கிடங்க!
நோயாளி: டாக்டர் வயிறு வலினு தான் வந்தேன். என்னை எதுக்கு lcu ல வச்சிருக்கீங்க
டாக்டர்: கொஞ்சம் அமைதியா இருங்க.
நோயாளி: டாக்டர்
எனக்கு ஒன்னும் இல்ல.
டாக்டர்: பொய் சொல்லாதீங்க .எனக்கு எல்லாம் தெரியும்.
நோயாளி: என்ன தெரியும் டாக்டர்?
டாக்டர்: உங்களுக்கு தாம்பரத்தில் சொந்தமாக பெரிய வீடு ,இடம் எல்லாம் இருக்குதுன்னு தெரியும்.
நோயாளி:😲😲
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}