காணும் பொங்கல்.. மக்கள் தலைகளால் நிரம்பியது சென்னை மெரீனா.. தமிழ்நாடு முழுவதும் உற்சாகம்!

Jan 16, 2025,04:46 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று காணும் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.


பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாளான இன்று காணும் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மக்கள் குடும்பம் குடும்பமாக கடற்கரைகள் பூங்காக்கள் சுற்றுலாத்தலங்கள் உறவினர்கள் வீடுகள் என சென்று தங்கள் பொழுதுகளை கழித்து வருகின்றனர். 




மாநிலம் முழுவதும் உள்ள சுற்றுலா தளங்களில் மக்களின் வருகை அதிகரித்து வருகிறது. அங்கு கட்டுச்சோறு கட்டிக்கொண்டு சென்று, உண்டு, விளையாடி, கலந்து பேசி கலகலப்பாக  காணும் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.


குறிப்பாக சென்னையில் உள்ள மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடல் சுற்றுலா பொருட்காட்சி, செம்மொழிப் பூங்கா, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்கள் அதிகம் சென்று காணும் பொங்கலை சிறப்பித்து வருகின்றனர். இதனால் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாட அரசு சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் சென்னையில் உள்ள சுற்றுலா தலங்களில் சுமார் 16,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் இணைந்து 1500 ஊர்க்காவல் படையினரும் பணிபுரிந்து வருகின்றனர்.




உலகின் 2வது நீளமான கடற்கரையான, மெரினா கடற்கரையில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரள்வதால் அப்பகுதிகளில் தற்காலிக காவல் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் மெரினா பீச்சில் குறிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி கடலில் இறங்கி மூழ்கினால் அவர்களை காப்பாற்றுவதற்காகவும் நீச்சல் தெரிந்த வீரர்களும் தயார் படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.


சென்னை அருகே உள்ள மகாபலிபுரத்திலும் ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்துள்ளனர். மக்கள் கூட்டம் அலை மோதுவதால் பாதுகாப்புக்காக போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். கடலில் குளிப்போர் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். அதேபோல கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள முதலைப் பூங்கா, முட்டுக்காடு படகு குழாம், விஜிபி, எம்ஜிஎம் பொழுது போக்குப் பூங்காக்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.




புதுச்சேரியிலும் மக்கள் அதிக அளவில் கூடி காணும் பொங்கலை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அங்கும் கடற்கரையில் கூட்டம் அலை மோதுகிறது. அதேபோல அங்குள்ள படகு குழாமிலும் மக்கள் அதிகளவில் காணும் பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.


இதேபோல திருச்சியில் முக்கொம்பு, குமரி முனை, ராமேஸ்வரம் என அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் கூட்டம் அலை மோதுகிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தீஞ்ச சக்தியிலிருந்து ஆட்களை இழுக்கும் நீங்க என்ன.. காஞ்சு போன சக்தியா? .. மு.க. ஸ்டாலின் தாக்கு

news

KG முதல் PG வரை இலவச கல்வி.. ஒடிசா அதிரடியை எல்லோரும் கடைப்பிடிக்கலாமே?

news

தவெக.,வை நோக்கி படையெடுக்கும் மாற்று கட்சியினர்... பலமா? பலவீனமா?

news

டீசல் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு: மத்திய அரசு அதிரடி உத்தரவு!

news

Vijay Birthday: முதல்வராக முதல் முறையாக.. 52வது பிறந்த நாளைக் கொண்டாடத் தயாராகும் விஜய்

news

அதிமுக தேர்தல் தோல்வி எதிரொலி: மாவட்ட வாரியாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

news

பாஜவிலிருந்து விலகி தவெகவில் இணைகிறார் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி

news

லியோனல் மெஸ்ஸியின் உலகக் கோப்பை வேட்டை எப்போது தொடங்குகிறது?

news

Seven Days, Twenty Kilometres.. மற்றும் மறக்க முடியாத சில நினைவுகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்