காணும் பொங்கல்.. மக்கள் தலைகளால் நிரம்பியது சென்னை மெரீனா.. தமிழ்நாடு முழுவதும் உற்சாகம்!

Jan 16, 2025,04:46 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று காணும் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.


பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாளான இன்று காணும் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மக்கள் குடும்பம் குடும்பமாக கடற்கரைகள் பூங்காக்கள் சுற்றுலாத்தலங்கள் உறவினர்கள் வீடுகள் என சென்று தங்கள் பொழுதுகளை கழித்து வருகின்றனர். 




மாநிலம் முழுவதும் உள்ள சுற்றுலா தளங்களில் மக்களின் வருகை அதிகரித்து வருகிறது. அங்கு கட்டுச்சோறு கட்டிக்கொண்டு சென்று, உண்டு, விளையாடி, கலந்து பேசி கலகலப்பாக  காணும் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.


குறிப்பாக சென்னையில் உள்ள மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடல் சுற்றுலா பொருட்காட்சி, செம்மொழிப் பூங்கா, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்கள் அதிகம் சென்று காணும் பொங்கலை சிறப்பித்து வருகின்றனர். இதனால் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாட அரசு சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் சென்னையில் உள்ள சுற்றுலா தலங்களில் சுமார் 16,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் இணைந்து 1500 ஊர்க்காவல் படையினரும் பணிபுரிந்து வருகின்றனர்.




உலகின் 2வது நீளமான கடற்கரையான, மெரினா கடற்கரையில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரள்வதால் அப்பகுதிகளில் தற்காலிக காவல் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் மெரினா பீச்சில் குறிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி கடலில் இறங்கி மூழ்கினால் அவர்களை காப்பாற்றுவதற்காகவும் நீச்சல் தெரிந்த வீரர்களும் தயார் படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.


சென்னை அருகே உள்ள மகாபலிபுரத்திலும் ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்துள்ளனர். மக்கள் கூட்டம் அலை மோதுவதால் பாதுகாப்புக்காக போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். கடலில் குளிப்போர் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். அதேபோல கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள முதலைப் பூங்கா, முட்டுக்காடு படகு குழாம், விஜிபி, எம்ஜிஎம் பொழுது போக்குப் பூங்காக்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.




புதுச்சேரியிலும் மக்கள் அதிக அளவில் கூடி காணும் பொங்கலை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அங்கும் கடற்கரையில் கூட்டம் அலை மோதுகிறது. அதேபோல அங்குள்ள படகு குழாமிலும் மக்கள் அதிகளவில் காணும் பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.


இதேபோல திருச்சியில் முக்கொம்பு, குமரி முனை, ராமேஸ்வரம் என அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் கூட்டம் அலை மோதுகிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் அலர்ட்!

news

ரஜினியை சந்தித்த சிம்ரனின் நெகிழ்ச்சி பதிவு... இணையத்தில் வைரல்!

news

2026ல் தேர்தலில் திமுகவை விஜய்யால் வீழ்த்த முடியாது: விசிக தலைவர் திருமாவளவன்

news

வாட்ஸ்ஆப்பில் வந்த இன்விடேஷன்.. பட்டுன்னு திறந்த அரசு ஊழியர்.. பொட்டுன்னு போன ரூ. 2 லட்சம்!

news

வரலட்சுமியின் மறைவுக்கு கொலைகார திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

இந்தி மொழியை திணிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

Coffee lovers pl listen.. அதிகாலையில் காபி குடிக்கக் கூடாது.. ஏன் தெரியுமா?

news

அதிரடி காட்டி வரும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.800 உயர்வு... கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

news

2027 உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித், விராட் கோலி விளையாட வாய்ப்பு.. குட் நியூஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்