பயனாளியாக!

Apr 20, 2026,02:36 PM IST

- கவி கலை


ஆயிரம் கனாக்கள் தோன்றலாம்.  

உயிரில் கலப்பவை சில!  

 

படைப்பெல்லாம் எனக்காக இருக்கலாம் 

படபடக்க வைப்பவை சில!  

 

நடப்பதெல்லாம் நமக்காக நடக்கலாம்  

நலம் சேர்ப்பவை சில ! 

 

நிலைமைகள் நம்மை நிலைப்படுத்தலாம்.  

நிலையை உணர்த்துபவை சில !  


 


நிகழ்வுகள் நம்மை பதற்றமாக்கலாம்  

நினைவுகளை பக்குவப்படுத்துபவை சில !  

 

எனவே என் நெஞ்சே! 

பட்டறிவுமிகு பயனாளியாய் இரு!


(சொ.கலையரசி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர். தாய் CBSE பள்ளி வேதியியல் ஆசிரியையாக 3 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக "எழுதுக" என்னும் புத்தகம் எழுதும் இயக்கத்தோடு இணைந்து எழுத்துப்பணியாற்றி வருகிறார். 1. புழுதிமண் கவிதைத்தொகுப்பு, 2. உடைந்தும் உருவெடு குறுநாவல் என இரு நூல்களைப் படைத்துள்ளார். இறையன்பு IAS முன்னிலையில் அவை வெளியிடப்பட்டன.)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்