Kalaiyarasi Muthuvel Poem: இரவல்!

May 27, 2026,01:20 PM IST

- கவி.கலை 


அழுக்கு உடையில்  

ஆனந்தமாய் பள்ளி சென்றாலும்  

அன்பு அறியப்படவில்லை. 

 

அமுதாய்க் கல்வி கற்று  

அளப்பெரிய சாதனை கண்டாலும்  

அறிவு அங்கீகரிக்கப்படவில்லை. 

 

திறன்கள் பல கொட்டித் 

திணறச் செய்தாலும் 

திறமைகள் திடப்படுத்தப்படவில்லை.  


 


இரவல் நகை வாங்கி  

இன்முறுவல் பொய்யாக  

இதழ் விரிந்தாலும்  

இருகரம் விரித்து  

இணைந்திடுவார் சிலர். 

 

வாழும் வாழ்க்கையே  

இரவல் என்றாலும்  

இறுமாப்புக் கொண்டு 

வாழ்ந்திடுவோர் பலர்.


(சொ.கலையரசி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர். தாய் CBSE பள்ளி வேதியியல் ஆசிரியையாக 3 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக "எழுதுக" என்னும் புத்தகம் எழுதும் இயக்கத்தோடு இணைந்து எழுத்துப்பணியாற்றி வருகிறார். 1. புழுதிமண் கவிதைத்தொகுப்பு, 2. உடைந்தும் உருவெடு குறுநாவல் என இரு நூல்களைப் படைத்துள்ளார். இறையன்பு IAS முன்னிலையில் அவை வெளியிடப்பட்டன)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மகிழ்வோம் தினம் தினம்.. வெற்றி என்றும் நிரந்தரம்!

news

Kalaiyarasi Muthuvel Poem: இரவல்!

news

அழகன்.. முருகனின் அருளைத் தரும் வைகாசி விசாகம்!

news

இனி நமக்குள் பிரிவில்லை.. இது எஃகு கோட்டை.. யாராலும் தகர்க்க முடியாது: அதிமுக ஐடி விங்

news

டெல்லியில் முதல்வர் சி. ஜோசப் விஜய்.. குடியரசுத் தலைவர், பிரதமர் மோடியை சந்திக்கிறார்

news

தாவுடா செவலை தாவு.. கட்சி விட்டு கட்சி தாவுவது.. நம்ம ஊரு அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!

news

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார் தமிழக முதல்வர் விஜய்.. நாளை டெல்லி பயணம்

news

கொளுத்துது வெயிலு.. தமிழ்நாட்டில் பள்ளித் திறப்பை ஒத்திவைக்க வலுக்கிறது கோரிக்கை

news

ADMK MLAs resignation: தொடரும் அதிமுக எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்