மகளிர் உரிமைத் தொகை.. ஜூலை 20ம் தேதி முதல் டோக்கன் விநியோகம்

Jul 15, 2023,05:21 PM IST
சென்னை: தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு டோக்கன் வழங்கும் பணி ஜூலை 20ம் தேதி தொடங்கும் என்று அரசு அறிவித்துள்ளது.

கடந்த சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின்போது திமுக அளித்த முக்கியமான வாக்குறுதி - இல்லத்தரசிகளுக்கு  மாதம்தோறும் ரூ. 1000 உரிமைத் தொகை தரும் அறிவிப்பாகும். இது பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதேபோல அளிக்கப்பட்ட இன்னொரு வாக்குறுதி மகளிருக்கு இலவச பஸ் பயண அனுமதி. இந்த வாக்குறுதியை ஏற்கனவே திமுக அரசு நிறைவேற்றி விட்டது. இப்போது உரிமைத் தொகை தரும் திட்டம் செப்டம்பர் 15ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.



கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் யாரெல்லாம் பயன் பெற முடியும் என்ற விவரத்தை ஏற்கனவே அரசு அறிவித்து விட்டது. அதில் மாற்றம் தேவை என்று பல்வேறு கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. இதுதொடர்பாக அரசுத் ��ரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெறும் பயனாளிகளுக்கு டோக்கன் வழங்கும் பணி ஜூலை 20ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று முதலே விண்ணப்ப பாரமும் விநியோகிக்கப்டபும்.

பயனாளியின் பெயர், திருமணத் தகுதி, தொலைபேசி எண், ஆதார் எண், ரேஷன் கார்டு நம்பர், மின் இணைப்பு எண், சொந்த வீடா, வாடகை வீடா உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அதில் கோரப்பட்டிருக்கும்.

சென்னையைப் பொறுத்தவரை இந்தத் திட்டம் தொடர்பாக பயனாளிகளுக்கு உதவுவதற்காக மாநகராட்சி சார்பில் கிட்டத்தட்ட 3200 முகாம்கள் அமைக்கப்படவுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

விண்வெளியில் புது வரலாறு எழுதும் இந்தியா.. ISS நிலையத்திற்குப் பயணமாகிறார் சுபான்ஷு சுக்லா

news

Ceasefire Violation: இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த உடன்பாட்டை மீறி விட்டன.. அதிபர் டிரம்ப்

news

திருச்செந்தூர் குடமுழுக்கு தமிழில் நடக்கும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

news

மக்கள் அதிகம் கூடும் இடங்கள் சாலையோரங்களில் பேனர்கள் வைக்க வேண்டாம்: தவெக!

news

Chennai metro: சென்னையில் விரைவில்... பஸ், ரயில், மெட்ரோவில் பயணிக்க ஒரே டிக்கெட்!

news

வைட்டமின் சி ரொம்ப ரொம்ப முக்கியம்.. எதற்காக தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்?

news

மும்பையில் வீடு வாங்கணுமா?.. அப்டின்னா நீங்க இன்னும் 100 வருடங்கள் சேமிக்கணும்!

news

எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.. சாகாவரம் படைத்த கண்ணதாசன்!

news

சென்னை மாநகராட்சிக்கு தெரியாமல் வாகன நிறுத்துமிடம் கட்டிக் கொடுத்தது யார்? டாக்டர் அன்புமணி கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்