கள்ளக்குறிச்சி விஷச்சாராயம்.. பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு.. 155 பேருக்கு தொடர் சிகிச்சை

Jun 25, 2024,06:22 PM IST

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் நடந்த விஷச்சாராயம் சம்பவத்தில் பலி எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. 155 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 18ம் தேதி பாக்கெட்டில் அடைத்து விற்கப்பட்ட மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்த 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.அந்த மருத்துவமனைகளில் அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இதுவரைக்கும் 59 பேர் உயிர் இழந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கள்ளக்குறிச்சி கோட்டை மேடு பகுதியைச் சேர்ந்த ஜான்பாட்ஷா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. 




தற்போது வரை பல்வேறு மருத்துவமனைகளில் 155 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 116 பேரும், விழுப்புரத்தில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 11 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் 29 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 30க்கும் மேற்பட்டோர்களுக்கு கண் பார்வை பறிபோய் உள்ளது. விஷ சாராயம் குடித்த 95 பேர் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 


இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டது. கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.சிபிசிஐடி போலீஸ் சார் விசாரணையில் கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் மற்றும் அவரது மனைவி, சகோதரர், சகோதரரின் மனைவி உள்ளிட்ட 14 பேர் வரை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 


மேலும் பென்சிலால், சடையன், ரவி, செந்தில், ஏழுமலை, கௌதமன், சிவகுமார் ஆகிய ஏழு பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஏழு பேரும் மெத்தனாலை பெரிய நிறுவனங்களிடமிருந்து வாங்கி தனிநபர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து கைது செய்யப்பட்ட ஏழு பேரையும் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஏழு பேரும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை அடுத்து சிறையில் அடைத்தனர்.


இதுவரை கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், தமிழக அரசு இந்த வழக்கில் முழுமையான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தனிநபர் ஆணையம் அமைத்தும் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்