- சுமதி சிவக்குமார்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் சங்கராபுரம் அடுத்த எஸ். குளத்தூரில் எழுந்தருளி உள்ள உலகிலேயே மிக உயரமான 81 அடி மகா விஸ்வரூப ஆறுமுகப் பெருமான் சிலை மகா கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது.
தமிழ்நாட்டில் கோவில்களுக்குப் பஞ்சம் இல்லை. ஆதி காலத்துக் கோவில்கள் தவிர தற்போது புதிது புதிதாக வித்தியாசமான முறையிலும் கோவில்கள் உருவாகி வருகின்றன. மலேசியாவில் உள்ள பத்து மலை முருகன் கோவில் பாணியில் சேலம் மாவட்டத்தில் முத்துமலை கோவில் ஏற்கனவே பிரபலமாகியுள்ளது.
இந்த வரிசையில் தற்போது சங்கராபுரம் அருகே எஸ் குளத்தூரில் விஸ்வரூப ஆறுமுகப் பெருமான் கோவில் உருவாகியுள்ளது. இந்தக் கோவிலில் முருகப் பெருமான் ஆறு முகத்துடன், சூரசம்ஹாரத்தின்போது காட்சி தரும் விஸ்வரூப கோலத்துடன் பிரமாண்டமாக காட்சி தருகிறார். இந்த சிலை 81 அடி உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்குத்தான் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு மேல் பீடம் அமைத்து சிலையை நிறுவியுள்ளனர். முருகன் சிலைக்கு ஆறு தலைகள், 12 கைகள் உள்ளன. அருகில் மயிலும் உள்ளது. முருகனின் ஒவ்வொரு கையிலும் வேல், சூலம், கத்தி, சங்கு, சக்கரம், உடுக்கை, நாகம் என ஆயுதங்கள் உள்ளன. உள்ளங்கைகளில் ஓம் என்ற எழுத்து பொறிக்கப்பட்டு அதில் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
கோவில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து வருவதாகவும், மக்கள் திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டும் என்றும் கோவில் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்தக் கோவிலுக்கு வந்தால் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்ற பலன் கிடைக்குமாம்.
(சுமதி சிவக்குமார், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இடம் பெற்று எழுதி வருகிறார்)
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}