வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கு சவால் விட்டுள்ளார், துணை அதிபரும், ஜனநாயகக் கட்சி வேட்பாளரா களம் இறங்கும் கமலா ஹாரிஸ்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். முன்னாள் அதிபரான டிரம்ப், 2வது முறையாக அதிபர் ஆகும் கனவுடன் களம் குதித்துள்ளார். மறுபக்கம் தற்போதைய அதிபர் ஜோ பிடன் போட்டியில் இருந்து வந்தார். ஆனால் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக அவர் போட்டியிலிருந்து விலகி விட்டார்.
ஜோ பிடனுக்குப் பதில் துணை அதிபர் கமலா ஹாரிஸை ஜனநாயகக் கட்சி வேட்பாளராக அறிவிக்கவுள்ளது. கமலா ஹாரிஸ் அறிவிப்பால் தொய்வடைந்திருந்த ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கள் தற்போது உற்சாகமடைந்துள்ளனர். கருத்துக் கணிப்புகளிலும் டிரம்ப்பை முந்த ஆரம்பித்துள்ளார் கமலா ஹாரிஸ்.
இந்த நிலையில் விரைவில் கமலா ஹாரிஸுக்கும், ஜோ பிடனுக்கும் இடையே விவாதம் நடைபெறும் என்று தெரிகிறது இதைத்தான் ஜனநாயகக் கட்சியினர் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். காரணம், ஜோ பிடனுக்கும் - டிரம்ப்புக்கும் இடையே நடந்த விவாதத்தில் பிடன் பெருமளவில் சொதப்பியிருந்தார். இதை டிரம்ப் கேலி செய்து தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு விட்டார். விவாதத்தின் காரணமாகத்தான் ஜோ பிடன் செல்வாக்கு சரிய ஆரம்பித்தது. எனவே எந்த இடத்தில் ஜனநாயகக் கட்சிக்கு சரிவு ஏற்பட்டதோ அங்கிருந்தே அதிரடி காட்ட கமலா ஹாரிஸ் ஆர்வமாக உள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ஆதரவாளர்களிடையே பேசும்போது, நல்லது டொனால்ட், விவாத மேடையில் என்னை சந்திப்பதை நீங்கள் மறுபரிசீலனை செய்வீர்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால், ஒரு பழமொழி உண்டு. உங்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் அதை என் முகத்துக்கு நேராக சொல்லுங்கள் என்று கூறியுள்ளார் கமலா ஹாரிஸ். அவரது இந்த ஓபன் சேலஞ்ச் ஜனநாயகக் கட்சியினரிடையே பயங்கர ஆதரவை ஏற்படுத்தியுள்ளது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}