கந்தசஷ்டி .. நாளை 5ம் நாள் விழா.. இதை செய்தால் அப்பன் முருகனிடம் கேட்டது கிடைக்கும்!

Nov 05, 2024,12:30 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


சென்னை : இந்த ஆண்டிற்கான கந்தசஷ்டி விழா நவம்பர் 02ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதிலும் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டியும், காப்பு கட்டாமலும் முருகப் பெருமானை வேண்டி விரதம் இருந்து வருகின்றனர். குறிப்பாக திருச்செந்தூர் திருத்தலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி விரதம் இருந்து வருகின்றனர். இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா நவம்பர் 08ம் தேதி வரை நடைபெற உள்ளது. 


கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 07ம் தேதியும், முருகப் பெருமானின் திருக்கல்யாண வைபவம் நவம்பர் 08ம் தேதியும் நடைபெற உள்ளது. தற்போது கந்தசஷ்டி விழாவின் நான்கு நாட்கள் கடந்து விட்டன. நாளை கந்தசஷ்டியின் ஐந்தாம் நாள். கந்தசஷ்டி விழாவின் மிகவும் அற்புதமான, முக்கியமான திருநாள் இதுவாகும். கந்தசஷ்டியின் ஐந்தாம் நாளில் தான் முருகப் பெருமான் போருக்கு புறப்படுவதற்கு முன் அன்னை பராசக்தியிடம் இருந்து சக்திவேல் வாங்கும் நிகழ்வு நடைபெறும். சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் அன்னையிடம் வேல் வாங்கும் போது முருகப் பெருமானின் திருமேனியில் வியர்க்கும் அதிசயம் இந்த நாளில் தான் நடைபெறும்.




சூரபத்மனை அழிப்பதற்காக போருக்கு புறப்படும் முருகப் பெருமானுக்கு அளிப்பதற்காக, உலகில் உள்ள அனைத்து சக்திகளையும் ஒன்றாக்கி, அதோடு தன்னுடைய சக்தியையும் இணைத்து வேலாக உருமாற்றினார் சிவ பெருமான். அந்த வேலை அப்படியே பராசக்தியிடம் கொடுத்தார். அன்னை பராசக்தி, அந்த வேலில் தன்னுடைய சக்தியையும் சேர்த்து சக்திவேலாக முருகப் பெருமானிடம் வழங்கினார். அன்னை வழங்கிய சக்திவேலை முருகப் பெருமான் தன்னுடைய திருக்கரத்தில் வாங்கியதும் அது வெற்றிவேலாக மாறியது. அந்த வேலைக் கொண்டு மாமரமாக உருமாறிய சூரனின் உடலை இரண்டாக கிழித்து, ஒரு பாதியை மயிலாகவும், மறு பாதியை சேவற் கொடியாகவும் மாற்றி தன்னுடன் வைத்துக் கொண்டார் முருகப் பெருமான்.


கந்தசஷ்டியின் இந்த அற்புதமான ஐந்தாம் நாளில் நாமும் வேலை வழிபட்டு, வேலை போற்றும் மந்திரங்களை சொல்லி வழிபடுவதால் முருகனின் அருள் கிடைப்பதுடன், நம்முடைய வேண்டுதல்களும் உடனடியாக நிறைவேறும். 


சொல்ல வேண்டிய மந்திரம் :


கந்தசஷ்டியின் 5ம் நாளில் முருகப் பெருமானின் அருளை பெருவதற்கு இந்த ஒரு வார்த்தை மந்திரத்தை சொன்னாலே போதும். 


ச ர வ ண ப வ

ர வ ண ப வ ச

வ ண ப வ ச ர

ண ப வ ச ர வ

ப வ ச ர வ ண

வ ச ர வ ண ப


இந்த நாளில் வேல் மாறல் படித்து, வேல் பூஜை செய்வது சிறப்பு. வேல்மாறல் பதிகத்தை முழுவதுமாக படிக்க முடியாதவர்கள், " ஓம் முருகா சரணம். வேலும் மயிலும் சேவலும் துணை" என 6 முறை சொல்லி விட்டு, 

"திருத்தணியில் உதித்தருளும்

ஒருத்தன்மலை விருத்தன் என

துளத்தில் உறை கருத்தன் மயில்

நடத்து குஹன் வேலே" என்ற வேல்மாறலின் துவக்க அடியை 6 முறை சொன்னாலே போதும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?

news

வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!

news

தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி

news

அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

news

அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்

news

ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?

news

10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்

news

அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்