- மைத்ரேயி நிரஞ்சனா
காதல் என்பது என்ன என்று கேட்டால் எப்படி வரையறுத்தாலும்.. அதனால் நமக்குள் என்ன நடக்கிறது என்று சொல்லலாமே ஒழிய அது ஒரு தனிப்பட்ட அனுபவம் என்றே சொல்லலாம்.. விவரிப்பது கடினம்..
மனிதன் காதல் வயப்படும் போது அதை Falling in Love என்று சொல்வார்கள்.. தான் என்ற பிம்பத்தை அவன் இழப்பதினால் அவ்வாறு சொல்லப்படுகிறது.. அது ஒரு மகிழ்ச்சியான நிலை.. Blissful நிலை..
ஒரு சிறிய கதை..

காஷ்முஷ் காதல் வயப்பட்டார்.. அந்தப் பெண்ணை அவர் பல தருணங்களில் பார்த்திருந்தாலும் தனிமையில் பார்த்து பேசும் வாய்ப்பு அதுவரை அவருக்கு கிடைக்கவில்லை.. அந்தப் பெண்ணை பார்த்தாலும் அவளுக்கும் இவர் மீது காதல் உண்டு என்றே தோன்றியது. ஒருவர் காதல் வயப்பட்டு இருக்கும்போது அவருடைய நடை, பேச்சு, பார்வை எல்லாமே மாறிவிடுகிறது..
பல மாதங்களாக அவளை எவ்வாறாயினும் தனிமையில் சந்திக்க வேண்டும் என்று பெரும் ஆவலாய் இருந்தார்.. ஒரு நாள் மாலை பொழுது அவர் வாக்கிங் சென்று கொண்டிருந்தபோது ஒரு பூங்காவை கடந்த சென்றார்.. பூங்காவின் உள்ளே அந்தப் பெண் தனிமையில் அமர்ந்து தன்னை சுற்றி உள்ள பூந்தோட்டத்தை ரசித்துக்கொண்டிருந்தாள்.. காஷ்முஷிற்கு தனது இதயத்துடிப்பு நின்றதை போல உணர்ந்தார்.. பூங்காவின் உள்ளே சென்று அந்தப் பெண்ணின் பக்கத்தில் அமர்ந்தார்.. இருவரும் பார்த்தனர்.. அவருக்கு பேச்சு வரவில்லை இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சில வார்த்தைகள் பேசினார்.. அவளும் புன்முறுவலுடன் கேட்டு கொண்டிருந்தார்.. அவளின் கையைப் பிடித்து உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறினார்..
பிறகு அவள் வீட்டு குழந்தைகள் அங்கு வர .. இவரும் அங்கிருந்து கிளம்பினார்.. சிறிது தூரம் நடந்தவர் திரும்பி வந்தார்.. அவர் முகமும் கண்களும் அவ்வளவு பிரகாசமாக இருந்தன.. அந்த பெண்ணிடம் கேட்டார்.. எவ்வளவு யோசித்தாலும் எனக்கு தெரியவில்லை.. எனது வீட்டிற்கு எந்தப் பக்கமாக செல்ல வேண்டும் என்று..
நம் காதலிக்கும் நபரை சந்திக்கும் போது அல்லது உடனிருக்கும் போது.. நாம் நம்முடைய இருப்பிற்கு (Center) தள்ளப்படுகிறோம்.. இது ஒரு ஆனந்த நிலை..பேரின்ப நிலை..(Blissful State). காதலிக்கும் நபரை பார்க்கும் போது இந்த உள்நிலை மாற்றம் நடக்கவில்லை என்றால் அது காதலே அல்ல.. இந்த உணர்வு.. இந்த அனுபவம்.. இது ஒரு ஷணம் என்றாலும் அதை நினைவு படுத்தி மகிழ்ச்சி அடைகிறோம்.. இது நமக்கு எப்போதும் கிடைக்க வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொள்கிறோம்.. அந்த நிலை தானாகவே நடந்த விஷயம்.. அதுவும் நமக்குள்ளே நடந்த விஷயம்..
அதற்கான முயற்சிகள் எடுக்கும் போது நமது மனது செயல்பட ஆரம்பிக்கிறது.. மற்றும் கட்டுப்பாடுகள் கொண்டு வரும்போது அது நடக்க வாய்ப்பே இல்லை..
இதில் உணர வேண்டிய விஷயம் என்னவென்றால் நாம் பல நாட்களாக மாதங்களாக எதிர்பார்த்து ஏங்கிய ஒரு விஷயம் நடக்கும் போது நம் மனது செயலிழக்கிறது. (Mind stops working briefly) அப்போது நாம் நம் உள்நிலை இருப்பிற்கு செல்வதால் இந்த ஆனந்தம்.. திரும்பவும் மனது செயல்பட ஆரம்பிப்பதால் இந்த நிலையில் இருந்து விலகுகிறோம்..
மனது செயலிழக்கும் நிலை மிகச்சில தருணங்களில் நமக்கு நிகழ வாய்ப்பு இருக்கிறது.. நான் எனது குருவை முதலில் பார்த்தபோது அந்த பரவச நிலையை உணர்ந்திருக்கிறேன்.. கண்களில் இருந்து கண்ணீர் மழை.. என்னை சுற்றி இருப்பவர்கள் அவரிடம் பேசினாலும் எனக்கு வாயடத்துப் போனது..
நாம் நிறைய வேலை செய்து நம் மிகவும் களைத்துப் போகும் போது.. (Fatigue) மனதிற்கு என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து நின்று போகும்.. எப்பொழுதும் நாம் நம்முடைய உள்நிலை ஆதார இருப்பிற்கு செல்கிறோம்.. காதலில் தியானத்தில் உணரும் அதே நிலையை சில கணங்களுக்கு நாம் உணருகிறோம்..
காதலில் இருப்பது.. தியானம் செய்வது இரண்டுமே நம்மை நம் இருப்பில் வைக்கும் விஷயமாக இருக்கிறது.. பெரிய குறிக்கோள்களும்.. தான் எவ்வாறு ஆக வேண்டும் என்ற நாளை பற்றியே சிந்தனையிலேயே இருப்பவர்களும் (Becoming somebody) காதல் வயப்படுவதும் தியானம் செய்வதும் இயலாத காரியம்..
நாம் தொடர்வோம்……
தங்கம் நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் நகை விலை கம்மி தான்... எவ்வளவு தெரியுமா?
பொய் வழக்கில் என்னைக் கைது செய்தது பாஜக.. செய்தியாளர்களிடம் உடைந்து அழுத கெஜ்ரிவால்
திமுக.,வில் ஓபிஎஸ்.,க்கு என்ன பதவி ? சட்டை பையில் ஸ்டாலின் படம் மாறுமா?
உங்களை முதல்வராக்கி அழகு பார்த்த இயக்கிற்குத் துரோகம்.. கூச்சமே இல்லையா ஓபிஎஸ்? - அதிமுக கேள்வி
பச்சைத் தமிழர் என்று கலைஞரால் பாராட்டப்பட்டவன் நான்.. மகிழ்ச்சியோடு இணைந்துள்ளேன்.. ஓ.பி.எஸ்.
"வள்ளி பத்திரமா வீட்டுக்கு போ... பயப்படாத".. (கோடாங்கி.. திகில் தொடர்-4)
Friday motivation.. வெற்றியின் ரகசியம் 'சுய விழிப்புணர்வு'!
முழுக்க முழுக்க அதிமுகவில் ஊறிப் போன ஓ.பன்னீர்செல்வம்.. திமுகவுக்கு மாறியது ஏன்?
காதல் ஏன் மகத்தானது? (What's so special about Love)
{{comments.comment}}