டெல்லி: பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் இடம் பெற்ற ஒரு காட்சி குறித்து நடிகையும், பாஜக எம்.பியுமான கங்கனா ரனாவத் விமர்சித்துள்ளார். செக்ஸ் என்பது பெட்ரூமுக்குள் இருக்க வேண்டியது. அதை பகிரங்கமாக பொது வெளியில் வெளிப்படுத்துவது அநாகரீகம் என்று அவர் கூறியுள்ளா்.
அதாவது ஒலிம்பிக் தொடக்க விழாவின் போது தி லாஸ்ட் சப்பர் விருந்து நிகழ்ச்சியை முரல் பெயின்டிங் மூலமாக சித்தரித்திருந்தனர். அதைத்தான் செக்ஸியாக இருப்பதாக கூறியுள்ளார் கங்கனா. பிரபல ஓவியர் லியானார்டோ டாவின்சி வரைந்த ஓவியத்தை நிஜமான கலைஞர்களை வைத்துக் கொண்டு வந்திருந்தனர். அதைத்தான் விமர்சித்துள்ளார் கங்கனா.
வெள்ளிக்கிழமையன்று பாரீஸில் தொடக்க விழா கோலாகலமாக நடந்தது. 4 மணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சியை கிட்டத்தட்ட 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நேரில் கண்டு களித்தனர். பிரமாண்டமாக நடந்த இந்த நிகழ்ச்சியில் 18 கலைஞர்கள் கலந்து கொண்டு தி லாஸ்ட் சப்பர் நிகழ்வை தத்ரூபமாக கொண்டு வந்திருந்தனர். பலரையும் இது கவர்ந்தது.
ஆனால் இதை செக்ஸியாக இருந்ததாக கங்கனா விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், தி லாஸ்ட் சப்பர் என்ற பெயரில் அதீதமான செக்ஸ் காட்சியை நடத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ஒரு சிறுமியும் கலந்து கொண்டதைப் பார்க்க முடிந்தது. இது தவறான செயல். ஒரு ஆண் நிர்வாண கோலத்தில் இயேசு நாதர் உருவத்தில் வருகிறார். கிறிஸ்தவ மதத்தையும் அவர்கள் கிண்டலடித்துள்ளனர். அவமானமாக இருக்கிறது. செக்ஸ் பெட்ரூமில்தான் இருக்க வேண்டும்.
மேலும் இது ஓரினச்சேர்க்கையை ஆதரிப்பது போல உள்ளது. அதற்கு எதிரானவள் அல்ல நான். ஆனால் ஒலிம்பிக்ஸில் இதற்கு என்ன தொடர்பு இருக்கிறது? ஏன் விளையாட்டில், அனைத்து நாடுகளும் பங்கேற்கும் ஒரு நிகழ்ச்சியில் இதை கொண்டு வருகிறீர்கள்.. திறமையை வெளிக்காட்ட வேண்டிய இடத்தில் செக்ஸ் எதற்கு.. பெட்ரூமோடு அதை நிறுத்தலாமே.. இதை ஒரு தேசிய அடையாளமாக்குவதா.. ரொம்ப வினோதமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் கங்கனா.
கங்கனா மட்டுமல்ல, எலான் மஸ்க் உள்ளிட்ட பலரும் கூட இந்த நிகழ்ச்சியை விமர்சித்துள்ளனர். இது கிறிஸ்தவ மதத்தை அவமதித்துள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}