கார்த்திகையில்!

Dec 04, 2025,04:00 PM IST

- கவிதா உடையப்பன்


வான் நட்சத்திரங்களை மண்ணில் கண்டேன் 

வாசல் தோறும் வாய்மையாய் ஒளித்ததடி!


விண்மீன்களை கைகளால் தீண்டினேன் 

வீசுமது தென்றல் கார்த்திகை மாதமடி!


கோலத்தோடு அழகாய் கதைத்தேன்

காலமே கலையாய் நின்றதடி!


வண்டுகள் என்னையே சுற்றிவர

வாடாது சுகந்தம் வீசினேனடி !




மயிலாக உரு மாறினேன் 

மார்க்கம் ஒன்று கிடைத்ததடி!


உள்ளக் கூம்புகளை  கொளுத்தினேன் 

கள்ளம் கபடங்கள் ஒழிந்ததடி!


அகல் விளக்கினுள் உயிராய் திரிந்தேன் 

அண்டமே ஆற்றலுடன் மிளிர்ந்ததடி!


நாடிகளை ஒருமுகப் படுத்தினேன் 

தேகமே "ஜோதியாய்" ஜொலித்ததடி !


நெய் உருகி தீபத்திற்கு துணை ஆனது 

மெய் உருகி பிரம்மத்திற்கு இணை ஆனது!


(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் உடையப்பன் ரத்தினா செல்வகுமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்