- கவிதா உடையப்பன்
வான் நட்சத்திரங்களை மண்ணில் கண்டேன்
வாசல் தோறும் வாய்மையாய் ஒளித்ததடி!
விண்மீன்களை கைகளால் தீண்டினேன்
வீசுமது தென்றல் கார்த்திகை மாதமடி!
கோலத்தோடு அழகாய் கதைத்தேன்
காலமே கலையாய் நின்றதடி!
வண்டுகள் என்னையே சுற்றிவர
வாடாது சுகந்தம் வீசினேனடி !

உள்ளக் கூம்புகளை கொளுத்தினேன்
கள்ளம் கபடங்கள் ஒழிந்ததடி!
அகல் விளக்கினுள் உயிராய் திரிந்தேன்
அண்டமே ஆற்றலுடன் மிளிர்ந்ததடி!
நாடிகளை ஒருமுகப் படுத்தினேன்
தேகமே "ஜோதியாய்" ஜொலித்ததடி !
நெய் உருகி தீபத்திற்கு துணை ஆனது
மெய் உருகி பிரம்மத்திற்கு இணை ஆனது!
(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் உடையப்பன் ரத்தினா செல்வகுமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
கதை சொல்லி தருண்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள் (4)
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.. திருக்குறள் கதைகள்
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா.. என்ன திட்டத்தில் இருக்கிறார் நடிகர் லாரன்ஸ்?
இந்திரஜித்!
{{comments.comment}}