கார்த்திகையில்!

Dec 04, 2025,04:00 PM IST

- கவிதா உடையப்பன்


வான் நட்சத்திரங்களை மண்ணில் கண்டேன் 

வாசல் தோறும் வாய்மையாய் ஒளித்ததடி!


விண்மீன்களை கைகளால் தீண்டினேன் 

வீசுமது தென்றல் கார்த்திகை மாதமடி!


கோலத்தோடு அழகாய் கதைத்தேன்

காலமே கலையாய் நின்றதடி!


வண்டுகள் என்னையே சுற்றிவர

வாடாது சுகந்தம் வீசினேனடி !




மயிலாக உரு மாறினேன் 

மார்க்கம் ஒன்று கிடைத்ததடி!


உள்ளக் கூம்புகளை  கொளுத்தினேன் 

கள்ளம் கபடங்கள் ஒழிந்ததடி!


அகல் விளக்கினுள் உயிராய் திரிந்தேன் 

அண்டமே ஆற்றலுடன் மிளிர்ந்ததடி!


நாடிகளை ஒருமுகப் படுத்தினேன் 

தேகமே "ஜோதியாய்" ஜொலித்ததடி !


நெய் உருகி தீபத்திற்கு துணை ஆனது 

மெய் உருகி பிரம்மத்திற்கு இணை ஆனது!


(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் உடையப்பன் ரத்தினா செல்வகுமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தூக்கி எறியப்பட்ட என்னை அரவணைத்து, அன்பு செலுத்தியவர் விஜய்: செங்கோட்டையன் ஓபன் டாக்!

news

முழு மனதோடு என்டிஏ கூட்டணியில் இணைந்திருக்கிறேன்...தினகரன் அதிரடி

news

கூட்டணி குறித்து தற்போது வரை பாஜகவிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை: பிரேமலதா விஜயகாந்த்!

news

தேஜகூவைத் தேடி அடித்துப் பிடித்து ஓடி வரும் கட்சிகள்.. அடுத்து யாரு தேமுதிகவா?

news

அதிமுக-பாஜக கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல்.. அதில் ஏறுவோரும் மூழ்கடிக்கப்படுவார்கள்: செல்வப்பெருந்தகை

news

கடலோர தமிழகத்தில் நாளை மறுநாள் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

news

முதல் பேச்சிலேயே தமிழ்நாட்டைத் தொட்ட பாஜக தலைவர் நிதின் நபின்.. திட்டம் என்ன?

news

தமிழகப் பதிவுத்துறை முக்கிய அறிவிப்பு: 2 நாட்களுக்கு Citizen Portal இணையதளம் செயல்படாது!

news

தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன்... அன்புடன் வரவேற்ற எடப்பாடி பழனிச்சாமி

அதிகம் பார்க்கும் செய்திகள்