கார்த்திகையில்!

Dec 04, 2025,04:00 PM IST

- கவிதா உடையப்பன்


வான் நட்சத்திரங்களை மண்ணில் கண்டேன் 

வாசல் தோறும் வாய்மையாய் ஒளித்ததடி!


விண்மீன்களை கைகளால் தீண்டினேன் 

வீசுமது தென்றல் கார்த்திகை மாதமடி!


கோலத்தோடு அழகாய் கதைத்தேன்

காலமே கலையாய் நின்றதடி!


வண்டுகள் என்னையே சுற்றிவர

வாடாது சுகந்தம் வீசினேனடி !




மயிலாக உரு மாறினேன் 

மார்க்கம் ஒன்று கிடைத்ததடி!


உள்ளக் கூம்புகளை  கொளுத்தினேன் 

கள்ளம் கபடங்கள் ஒழிந்ததடி!


அகல் விளக்கினுள் உயிராய் திரிந்தேன் 

அண்டமே ஆற்றலுடன் மிளிர்ந்ததடி!


நாடிகளை ஒருமுகப் படுத்தினேன் 

தேகமே "ஜோதியாய்" ஜொலித்ததடி !


நெய் உருகி தீபத்திற்கு துணை ஆனது 

மெய் உருகி பிரம்மத்திற்கு இணை ஆனது!


(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் உடையப்பன் ரத்தினா செல்வகுமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

உலகின் நம்பிக்கை நட்சத்திரம் நீ .. மா தவம் செய்து பெண்ணாய் பிறந்த நீ!

news

மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா!

news

பிறந்த நாள் ஒவ்வொரு உயிரின் வெற்றி நாள்!

news

பாதிப்புக்குள்ளாகும் பிற பெண்கள் மீதும் கவனம் செலுத்த வேண்டாமா.. நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்

news

குவைத் விமான நிலையத்தைக் குறி வைத்த ஈரான்.. எரிபொருள் டேங்கர்கள் பெரும் சேதம்

news

இன்னும் அபிஷேக் சர்மா திருந்தவே இல்லையே.. சுனில் கவாஸ்கருக்கு வருத்தம்ப்பா!

news

ஆளப்பிறந்தவள்!

news

பெண்கள் ஒரு நாள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் அல்ல.. தினமும் பாராட்டப்பட வேண்டியவர்கள்!

news

மண்ணின் மகத்துவம்.. பெண்ணே நீ தனித்துவம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்