விருதுநகர்: கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வீடியோவில் விஜய்யின் இதயத்தில் காயமோ, வலியோ இல்லை. இருந்திருந்தால் அது வெளிப்பட்டிருக்கும். கரூர் சம்பவம் குறித்து விஜய் கேள்வி கேட்பது தவறு என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாட்டத்தில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்தார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில், விஜய் பேசியது திரைப்பட வசனம் போல் உள்ளது. இது நல்ல அணுகுமுறை அல்ல. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வீடியோவில் விஜய்யின் இதயத்தில் காயமோ, வலியோ இல்லை. இருந்திருந்தால் அது வெளிப்பட்டிருக்கும். மற்ற இடத்தில் இல்லாமல் கரூரில் மட்டும் இப்படி நடந்தது எப்படி? என விஜய் கேட்டது தவறு.

திரைக்கவர்ச்சியில் விஜய் நாட்டை ஆள முயற்சிக்கிறார். திரை மயக்கம், திரை போதையில் உள்ளார். விஜய்க்கு சுய சிந்தனை இருக்கிறது என்றால் எதற்கு அருகில் ஆள் இருக்க வேண்டும்? சிம் சார் என விஜய் கூறியது சிறுபிள்ளைத்தனம். இனிமேல் இதுபோன்று நடக்காது என்று அவர் தெரிவிக்கவில்லை. இந்த சம்பவத்திற்கு தானும் ஒரு காரணம் என்பதை உணராமல் பேசியுள்ளார்.
கரூர் சம்பவத்தின் போது நடந்தது என்ன? விளக்கிய முதல்வர் விஜய்
CM Vijay to visit Karur: கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்.. பாதுகாப்புக்கு 6500 போலீசார் குவிப்பு
தந்தையின் பெருமை
நேரம்!
வேணு கானமோ! இராம பாணமோ!"
அம்மா!
கதிரொளி!
CM VIjay to visit Karur: முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்: செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன?
ஜூலை 15ல் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவு
{{comments.comment}}