விருதுநகர்: கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வீடியோவில் விஜய்யின் இதயத்தில் காயமோ, வலியோ இல்லை. இருந்திருந்தால் அது வெளிப்பட்டிருக்கும். கரூர் சம்பவம் குறித்து விஜய் கேள்வி கேட்பது தவறு என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாட்டத்தில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்தார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில், விஜய் பேசியது திரைப்பட வசனம் போல் உள்ளது. இது நல்ல அணுகுமுறை அல்ல. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வீடியோவில் விஜய்யின் இதயத்தில் காயமோ, வலியோ இல்லை. இருந்திருந்தால் அது வெளிப்பட்டிருக்கும். மற்ற இடத்தில் இல்லாமல் கரூரில் மட்டும் இப்படி நடந்தது எப்படி? என விஜய் கேட்டது தவறு.

திரைக்கவர்ச்சியில் விஜய் நாட்டை ஆள முயற்சிக்கிறார். திரை மயக்கம், திரை போதையில் உள்ளார். விஜய்க்கு சுய சிந்தனை இருக்கிறது என்றால் எதற்கு அருகில் ஆள் இருக்க வேண்டும்? சிம் சார் என விஜய் கூறியது சிறுபிள்ளைத்தனம். இனிமேல் இதுபோன்று நடக்காது என்று அவர் தெரிவிக்கவில்லை. இந்த சம்பவத்திற்கு தானும் ஒரு காரணம் என்பதை உணராமல் பேசியுள்ளார்.
ஒவ்வொரு குடும்பத்திற்கு கருணைத் தொகையாக ரூ10,000 வழங்கப்படும்:எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு
இயற்கையுடன் போராடி வருகிறார் தோழர் நல்லகண்ணு.. சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன்
வேலூர் விஜய் கூட்டத்துக்கு அனுமதி கொடுப்பதில் தாமதமா?.. போலீஸ் தந்த விளக்கம்
ரயில் சேவை ரத்தால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதும் வேதனையளிக்கிறது: கனிமொழி
இனி எண்ட ஸ்டேட் கேரளா இல்ல .. கேரளம்.. பெயர் மாற்றத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தென் தமிழகத்தில் நாளை இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்... எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை!
கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைத்து ஆட்சி அமைத்தவர் ஜெயலலிதா: ஓ.பன்னீர்செல்வம்
யாரையும் காலி பண்ண வரவில்லை.. நல்ல விஷயங்களைச் செய்யவே வந்திருக்கிறேன்.. சிவகார்த்திகேயன்
{{comments.comment}}