கரூர் விபரீதத்தில் 36 பேர் பலி.. தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

Sep 27, 2025,10:43 PM IST
சென்னை: கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கரூரில் இன்று நடந்த பெரும் துயரச் சம்பவம் மக்களை உலுக்கி எடுத்துள்ளது. யாருமே எதிர்பாராத வகையில் நடந்த இந்த விபரீதத்தில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 8 பேர் குழந்தைகள், 16 பேர் பெண்கள் ஆவர். 

இந்த சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகம் விரைந்து சென்று அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார். காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா ரூ. 1 லட்சம் வழங்கவும் முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார்.



விசாரணைக் கமிஷன் அமைப்பு

கூட்ட நெரிசல் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிஷன் அமைக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த கமிஷன் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்தும், அதற்கான காரணத்தை ஆராய்ந்தும், எதிர்காலத்தில் இதுபோல நடக்காமல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் அரசுக்குப் பரிந்துரைக்கும்.

முதல்வர் கரூர் விரைகிறார்

இந்த அறிவிப்புகளைத் தொடர்ந்து இன்று இரவே முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் விரைகிறார். அங்கு சிகிச்சை பெற்று வருவோரைச் சந்தித்து நலம் விசாரிக்கவுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்.. தாங்க முடியாத வேதனையில் உழல்கிறேன்.. விஜய்

news

கரூர் விபரீதத்தில் 36 பேர் பலி.. தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

news

கரூர் கூட்ட நெரிசல் பலி.. குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா வேதனை - இரங்கல்

news

கரூரில் அப்பாவி மக்கள் உயிரிழந்த செய்தி நெஞ்சை உலுக்குகிறது.. ரஜினிகாந்த், கமல்ஹாசன் வேதனை

news

கரூர் சம்பவம்.. போதிய பாதுகாப்பு இல்லாததால் நடந்ததா?.. விசாரணை கோருகிறார் அண்ணாமலை

news

கரூரில் விபரீதம்.. விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் மரணம்.. அமைச்சர்கள் விரைந்தனர்

news

பாட்டிலுக்கு பத்து ரூபா.. கரூரில் பாட்டுப் பாடிய விஜய்.. களைப்பை மறந்து கூட்டத்தினர் ஆரவாரம்!.

news

4 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்காம்... எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

news

கதையளக்கும் மனநோயாளியாக மாறி வருகிறார் சீமான்.. திமுக கண்டனம்

அதிகம் பார்க்கும் செய்திகள்