இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்.. தாங்க முடியாத வேதனையில் உழல்கிறேன்.. விஜய்

Sep 27, 2025,11:25 PM IST

சென்னை: கரூரில் நடந்த தனது கட்சிக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் பலியானது குறித்து பெரும் வேதனை தெரிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய்.


தவெக தலைவர் விஜய் இன்று இரவு கரூரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். கட்டுக்கடங்காத கூட்டம் கூடியிருந்த இடத்திற்கு விஜய் வருவதற்கே பெரும் சிரமப்பட நேரிட்டது. இந்த நிலையில் அவரது கூட்டத்தில் ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 36 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த நாட்டையும் இந்த சம்பவம் உலுக்கி எடுத்துள்ளது.




கூட்டம் முடிந்ததும் விஜய் கிளம்பிப் போன பிறகுதான் அங்கு நடந்த விபரீதமே தெரிய வந்தது. திட்டமிட்டபடி திருச்சி சென்ற விஜய் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார். அவர் மீண்டும் அரசு மருத்துவமனைக்குத் திரும்பி வந்தால் மீண்டும் கூட்டம் கூடும், மேலும் பிரச்சினை பெரிதாகும் என்பதால்தான் அவரை சென்னைக்கு அனுப்பி வைத்து விட்டதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில் விஜய் இரங்கல் தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் அறிக்கை விடுத்துள்ளார். அதில், இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். 


கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார் விஜய்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்.. தாங்க முடியாத வேதனையில் உழல்கிறேன்.. விஜய்

news

கரூர் விபரீதத்தில் 36 பேர் பலி.. தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

news

கரூர் கூட்ட நெரிசல் பலி.. குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா வேதனை - இரங்கல்

news

கரூரில் அப்பாவி மக்கள் உயிரிழந்த செய்தி நெஞ்சை உலுக்குகிறது.. ரஜினிகாந்த், கமல்ஹாசன் வேதனை

news

கரூர் சம்பவம்.. போதிய பாதுகாப்பு இல்லாததால் நடந்ததா?.. விசாரணை கோருகிறார் அண்ணாமலை

news

கரூரில் விபரீதம்.. விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் மரணம்.. அமைச்சர்கள் விரைந்தனர்

news

பாட்டிலுக்கு பத்து ரூபா.. கரூரில் பாட்டுப் பாடிய விஜய்.. களைப்பை மறந்து கூட்டத்தினர் ஆரவாரம்!.

news

4 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்காம்... எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

news

கதையளக்கும் மனநோயாளியாக மாறி வருகிறார் சீமான்.. திமுக கண்டனம்

அதிகம் பார்க்கும் செய்திகள்