சென்னை: கரூரில் நடந்த தனது கட்சிக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் பலியானது குறித்து பெரும் வேதனை தெரிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய்.
தவெக தலைவர் விஜய் இன்று இரவு கரூரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். கட்டுக்கடங்காத கூட்டம் கூடியிருந்த இடத்திற்கு விஜய் வருவதற்கே பெரும் சிரமப்பட நேரிட்டது. இந்த நிலையில் அவரது கூட்டத்தில் ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 36 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த நாட்டையும் இந்த சம்பவம் உலுக்கி எடுத்துள்ளது.

கூட்டம் முடிந்ததும் விஜய் கிளம்பிப் போன பிறகுதான் அங்கு நடந்த விபரீதமே தெரிய வந்தது. திட்டமிட்டபடி திருச்சி சென்ற விஜய் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார். அவர் மீண்டும் அரசு மருத்துவமனைக்குத் திரும்பி வந்தால் மீண்டும் கூட்டம் கூடும், மேலும் பிரச்சினை பெரிதாகும் என்பதால்தான் அவரை சென்னைக்கு அனுப்பி வைத்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் விஜய் இரங்கல் தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் அறிக்கை விடுத்துள்ளார். அதில், இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.
கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார் விஜய்.
9 மாவட்டங்களுக்கு இன்று கனமழையும்.. நெல்லைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் : வானிலை மையம் தகவல்!
திமுக ஆட்சியில் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!
சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?: நயினார் நாகேந்திரன்
நெல் கொள்முதல் ஈரப்பத விகிதத்தை உயர்த்துக.. பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டம்.. குழந்தைகளை கெடுக்க நினைத்த திமுக அரசு: அன்புமணி ராமதாஸ்!
கோவை வரும் பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி!
சார் படிவத்தை நிரப்புவதில் குழப்பமா.. கவலைப்படாதீங்க.. சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு
வாட்ஸ் ஆப்புக்கு வந்துருச்சு ஆப்பு.. எலான் மஸ்கின் X-சாட் தான் டாப்பாமே.. மக்கா!
SIR பணிகளைப் புறக்கணித்து.. போராட்டத்தில் குதித்த வருவாய்த்துறை ஊழியர்கள்
{{comments.comment}}