சென்னை: கரூரில் நடந்த தனது கட்சிக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் பலியானது குறித்து பெரும் வேதனை தெரிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய்.
தவெக தலைவர் விஜய் இன்று இரவு கரூரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். கட்டுக்கடங்காத கூட்டம் கூடியிருந்த இடத்திற்கு விஜய் வருவதற்கே பெரும் சிரமப்பட நேரிட்டது. இந்த நிலையில் அவரது கூட்டத்தில் ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 36 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த நாட்டையும் இந்த சம்பவம் உலுக்கி எடுத்துள்ளது.

கூட்டம் முடிந்ததும் விஜய் கிளம்பிப் போன பிறகுதான் அங்கு நடந்த விபரீதமே தெரிய வந்தது. திட்டமிட்டபடி திருச்சி சென்ற விஜய் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார். அவர் மீண்டும் அரசு மருத்துவமனைக்குத் திரும்பி வந்தால் மீண்டும் கூட்டம் கூடும், மேலும் பிரச்சினை பெரிதாகும் என்பதால்தான் அவரை சென்னைக்கு அனுப்பி வைத்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் விஜய் இரங்கல் தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் அறிக்கை விடுத்துள்ளார். அதில், இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.
கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார் விஜய்.
பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து.. தமிழ்நாட்டை படுகுழியில் தள்ளிவிடும்.. மு.க.ஸ்டாலின்
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது.. முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவிப்பு
பாஜகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறார் நடிகர் தேவன்: பரபரப்பு பேட்டி!
Motivational Short Story: சிற்றுயிர்களின் விழிப்புணர்வு மாநாடு
உள்ளபடிக் குடிநீரும் உப்பும் தான் கரிக்குதே!
387 வயசு இளமையான சென்னை.. எத்தனை எத்தனை சிறப்புகள்!
உதவியை உயர்ந்தவர்களுக்கு செய்வதை விட ஒருவரை உயர்த்துவதற்காக செய்!
Short Story: ருத்ர தாண்டவம்!
புரியாப் புதிர்!
{{comments.comment}}