கல்லறை தேடுகிறது!

Sep 15, 2025,01:02 PM IST

-  கவிஞர் வந்தை நளினி


கருவில் உன்னை சுமந்தாரோ 

கல்லறையில் உன்னை வைத்தாரோ


மடியில் நீ தவழ்ந்தாயோ 

மடிந்து நீ விழுந்தாயோ


கொஞ்சி பேசி மகிழ்ந்தாரோ 

கண்ணீர் சிந்தி....... 

கல்லறையில் உன்னை வைத்தாரோ   .


இரத்த துளிகளால் துள்ளினாயோ 

நாடி நரம்பு இழந்து துடித்தாயோ




நாவால் பலரை காயங்கள் ஆக்கினாயோ 

நலிந்து நீயும் கிடந்தாயோ   .


உறவை மதிக்க மறந்தாயோ 

உதவி இன்றி ஏங்கினாயோ   


தலைக்கனமாய் வாழ்ந்தாயோ

தளர்ந்து மண்ணில் சாய்ந்தாயோ  .


பச்சை மரமாய்  இருந்தாயோ 

பட்டு நீயும் போனாயோ  


வளர்ந்த செடியாய் உயர்ந்தாயோ 

வாடி நீயும் சாய்ந்தாயோ .


மன்னிக்க மறந்தாயோ

மனிதப் பண்பை மறந்தாயோ 


ஆறடி ஆழத்திலே

ஆறறிவும் அழிந்து போனதோ   


கல்லறை வரை மலர் தூவி 

உன்னை அழைத்துச் செல்வார் 

புதைத்தவுடன் விலகிச் செல்வார்  .


பஞ்சு மெத்தையில் உறங்கினாலும்

குடிசை வீடுகளில் உறங்கினாலும்

கடைசியில் உறங்குவது மண்ணில் தான்  .


கல்லறைக்குள் ஒரு நாள் வந்து விடுவாய் 

நீ வாழ்ந்த வாழ்க்கையை கடவுள் பார்த்து விடுவார்  .

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தீதறு தெளிவு கொள்.. செய்வது துணிந்து செய்.. நிறத்தால் அல்ல நெஞ்சால் வாழ்க!

news

வானவில் என்னும் மாயவில்

news

என் கண்ணில் என்ன பார்த்தாய்.. இதுதான் காதலா?

news

எம்எல்ஏ.,க்களுக்கான பயிற்சி முகாம்... குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

news

காற்று

news

தேவர்களின் மாலைக்காலம்.. சிவ வழிபாட்டுக்கு உகந்தது.. ஆனி மாத சிறப்புகள்!

news

சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

news

ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!

news

பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

அதிகம் பார்க்கும் செய்திகள்