- கவிஞர் வந்தை நளினி
கருவில் உன்னை சுமந்தாரோ
கல்லறையில் உன்னை வைத்தாரோ
மடிந்து நீ விழுந்தாயோ
கொஞ்சி பேசி மகிழ்ந்தாரோ
கண்ணீர் சிந்தி.......
கல்லறையில் உன்னை வைத்தாரோ .
இரத்த துளிகளால் துள்ளினாயோ
நாடி நரம்பு இழந்து துடித்தாயோ

நாவால் பலரை காயங்கள் ஆக்கினாயோ
நலிந்து நீயும் கிடந்தாயோ .
உறவை மதிக்க மறந்தாயோ
உதவி இன்றி ஏங்கினாயோ
தலைக்கனமாய் வாழ்ந்தாயோ
தளர்ந்து மண்ணில் சாய்ந்தாயோ .
பச்சை மரமாய் இருந்தாயோ
பட்டு நீயும் போனாயோ
வளர்ந்த செடியாய் உயர்ந்தாயோ
வாடி நீயும் சாய்ந்தாயோ .
மன்னிக்க மறந்தாயோ
மனிதப் பண்பை மறந்தாயோ
ஆறடி ஆழத்திலே
ஆறறிவும் அழிந்து போனதோ
கல்லறை வரை மலர் தூவி
உன்னை அழைத்துச் செல்வார்
புதைத்தவுடன் விலகிச் செல்வார் .
பஞ்சு மெத்தையில் உறங்கினாலும்
குடிசை வீடுகளில் உறங்கினாலும்
கடைசியில் உறங்குவது மண்ணில் தான் .
கல்லறைக்குள் ஒரு நாள் வந்து விடுவாய்
நீ வாழ்ந்த வாழ்க்கையை கடவுள் பார்த்து விடுவார் .
 
                                                                            ஒரே நேரத்தில் உருவான இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் – சென்னை வானிலை தகவல்!
 
                                                                            தனது கண்ணியத்தை இழக்கும் வகையில் பேசுகிறார் பிரதமர் மோடி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
 
                                                                            பீகாரில் பிரதமர் மோடி பொய் பிரச்சாரம் செய்து வாக்குகளை பெற முயற்சிக்கிறார்: ஆர்.எஸ்.பாரதி
 
                                                                            பிரதமர் குற்றம் சாட்டியது திமுகவை தான்... தமிழர்களை அல்ல: தமிழிசை சவுந்தர் ராஜன் பேட்டி!
 
                                                                            தமிழர்களை எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை: கனிமொழி
 
                                                                            SIR திட்டத்தை எதிர்த்து.. திமுக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம்.. விஜய் செல்வாரா?
 
                                                                            குப்பைமேடாக மாறும் சின்னக்காளி பாளையம்.. திமுக அரசு திட்டத்தை கைவிட வேண்டும்: அண்ணாமலை
 
                                                                            ரூ.3,250 கோடி ஒப்பந்தம்... தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு!
 
                                                                            இரும்புப் பெண் இந்திரா காந்தி.. இன்னும் சில பத்தாண்டுகள் இருந்திருந்தால்.. இந்தியா எப்போதோ வல்லரசு!
{{comments.comment}}