கல்லறை தேடுகிறது!

Sep 15, 2025,01:02 PM IST

-  கவிஞர் வந்தை நளினி


கருவில் உன்னை சுமந்தாரோ 

கல்லறையில் உன்னை வைத்தாரோ


மடியில் நீ தவழ்ந்தாயோ 

மடிந்து நீ விழுந்தாயோ


கொஞ்சி பேசி மகிழ்ந்தாரோ 

கண்ணீர் சிந்தி....... 

கல்லறையில் உன்னை வைத்தாரோ   .


இரத்த துளிகளால் துள்ளினாயோ 

நாடி நரம்பு இழந்து துடித்தாயோ




நாவால் பலரை காயங்கள் ஆக்கினாயோ 

நலிந்து நீயும் கிடந்தாயோ   .


உறவை மதிக்க மறந்தாயோ 

உதவி இன்றி ஏங்கினாயோ   


தலைக்கனமாய் வாழ்ந்தாயோ

தளர்ந்து மண்ணில் சாய்ந்தாயோ  .


பச்சை மரமாய்  இருந்தாயோ 

பட்டு நீயும் போனாயோ  


வளர்ந்த செடியாய் உயர்ந்தாயோ 

வாடி நீயும் சாய்ந்தாயோ .


மன்னிக்க மறந்தாயோ

மனிதப் பண்பை மறந்தாயோ 


ஆறடி ஆழத்திலே

ஆறறிவும் அழிந்து போனதோ   


கல்லறை வரை மலர் தூவி 

உன்னை அழைத்துச் செல்வார் 

புதைத்தவுடன் விலகிச் செல்வார்  .


பஞ்சு மெத்தையில் உறங்கினாலும்

குடிசை வீடுகளில் உறங்கினாலும்

கடைசியில் உறங்குவது மண்ணில் தான்  .


கல்லறைக்குள் ஒரு நாள் வந்து விடுவாய் 

நீ வாழ்ந்த வாழ்க்கையை கடவுள் பார்த்து விடுவார்  .

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

என்னது பிரியாணி இல்லையா?...தேர்தல் விலைப்பட்டியலில் பிரியாணி 'மிஸ்சிங்': அரசியல் கட்சிகள் அதிர்ச்சி

news

பாமக ராமதாஸின் அன்புமணிக்கு எதிரான வழக்கு: தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

news

த்ரிஷா பிரச்சனையே தீரல...அதுக்குள்ள நயன்தாராவா? தொடரும் நடிகர்,நடிகைகள் மீதான விமர்சனம்

news

காலம் காத்திருந்து பதில் சொல்லும்...ஆதவ் அர்ஜூன் கருத்திற்கு ரஜினிகாந்த் பதில்

news

புதுச்சேரி திமுக கூட்டணியிலும் சலசலப்பு...தொகுதி பங்கீடு உறுதி செய்ய முடியாத நிலை

news

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்: 1,111 தேர்தல் பார்வையாளர்களை நியமினம்

news

சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

news

கேஸ் சிலிண்டர் பெற இனி biometric கட்டாயம்...மத்திய அரசு அதிரடி

news

திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கண்டன ஆர்ப்பாட்டம்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி ஆவேச உரை

அதிகம் பார்க்கும் செய்திகள்