- கவிஞர் வந்தை நளினி
கருவில் உன்னை சுமந்தாரோ
கல்லறையில் உன்னை வைத்தாரோ
மடிந்து நீ விழுந்தாயோ
கொஞ்சி பேசி மகிழ்ந்தாரோ
கண்ணீர் சிந்தி.......
கல்லறையில் உன்னை வைத்தாரோ .
இரத்த துளிகளால் துள்ளினாயோ
நாடி நரம்பு இழந்து துடித்தாயோ

நாவால் பலரை காயங்கள் ஆக்கினாயோ
நலிந்து நீயும் கிடந்தாயோ .
உறவை மதிக்க மறந்தாயோ
உதவி இன்றி ஏங்கினாயோ
தலைக்கனமாய் வாழ்ந்தாயோ
தளர்ந்து மண்ணில் சாய்ந்தாயோ .
பச்சை மரமாய் இருந்தாயோ
பட்டு நீயும் போனாயோ
வளர்ந்த செடியாய் உயர்ந்தாயோ
வாடி நீயும் சாய்ந்தாயோ .
மன்னிக்க மறந்தாயோ
மனிதப் பண்பை மறந்தாயோ
ஆறடி ஆழத்திலே
ஆறறிவும் அழிந்து போனதோ
கல்லறை வரை மலர் தூவி
உன்னை அழைத்துச் செல்வார்
புதைத்தவுடன் விலகிச் செல்வார் .
பஞ்சு மெத்தையில் உறங்கினாலும்
குடிசை வீடுகளில் உறங்கினாலும்
கடைசியில் உறங்குவது மண்ணில் தான் .
கல்லறைக்குள் ஒரு நாள் வந்து விடுவாய்
நீ வாழ்ந்த வாழ்க்கையை கடவுள் பார்த்து விடுவார் .
துரோகி என்றால் நான் விலகிக் கொள்கிறேன்.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்: ஜி.கே.மணி!
அமித்ஷாவின் வியூகள் திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: வானதி சீனிவாசன்
சாட் ஜிபிடியிடம் பயனுள்ள கேள்விகளைக் கேளுங்கள்: முகேஷ் அம்பானி மாணவர்களுக்கு அறிவுரை!
சரமாரியாக சுட்ட நபரை.. துணிச்சலுடன் பிடித்து மடக்கிய முஸ்லீம் வியாபாரி.. குவியும் பாராட்டுகள்
ரூ.1 லட்சத்தை தாண்டியது தங்கம் விலை... அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்கள்!
100 நாள் வேலைத் திட்டத்தில் வருகிறது அதிரடி மாற்றங்கள்.. மாநில அரசுகளுக்கு சுமை அதிகரிக்கும்!
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் நியமனம்
ஆஸ்திரேலியா தாக்குதல் எதிரொலி.. இந்தியாவில் யூதர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!
தங்கம் விலையில் புதிய உச்சம்... சவரன் ஒரு லட்சத்தை நெருங்கியது தங்கம்!
{{comments.comment}}