- கவிஞர் வந்தை நளினி
கருவில் உன்னை சுமந்தாரோ
கல்லறையில் உன்னை வைத்தாரோ
மடிந்து நீ விழுந்தாயோ
கொஞ்சி பேசி மகிழ்ந்தாரோ
கண்ணீர் சிந்தி.......
கல்லறையில் உன்னை வைத்தாரோ .
இரத்த துளிகளால் துள்ளினாயோ
நாடி நரம்பு இழந்து துடித்தாயோ
நாவால் பலரை காயங்கள் ஆக்கினாயோ
நலிந்து நீயும் கிடந்தாயோ .
உறவை மதிக்க மறந்தாயோ
உதவி இன்றி ஏங்கினாயோ
தலைக்கனமாய் வாழ்ந்தாயோ
தளர்ந்து மண்ணில் சாய்ந்தாயோ .
பச்சை மரமாய் இருந்தாயோ
பட்டு நீயும் போனாயோ
வளர்ந்த செடியாய் உயர்ந்தாயோ
வாடி நீயும் சாய்ந்தாயோ .
மன்னிக்க மறந்தாயோ
மனிதப் பண்பை மறந்தாயோ
ஆறடி ஆழத்திலே
ஆறறிவும் அழிந்து போனதோ
கல்லறை வரை மலர் தூவி
உன்னை அழைத்துச் செல்வார்
புதைத்தவுடன் விலகிச் செல்வார் .
பஞ்சு மெத்தையில் உறங்கினாலும்
குடிசை வீடுகளில் உறங்கினாலும்
கடைசியில் உறங்குவது மண்ணில் தான் .
கல்லறைக்குள் ஒரு நாள் வந்து விடுவாய்
நீ வாழ்ந்த வாழ்க்கையை கடவுள் பார்த்து விடுவார் .
அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?
உயிரின் சிரிப்பு
அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்
வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?
கல்லறை தேடுகிறது!
வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்றும் தங்கம் விலை குறைவு.. சவரனுக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
Red Alert: மும்பை, தானேயில்.. வெளுத்து வாங்கும் கன மழை.. மக்களே உஷாரா இருங்க!
{{comments.comment}}