திருவனந்தபுரம்: வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கேரள மாநிலத்திற்கு நல்லுள்ளம் படைத்தவர்கள் உதவிட வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட மிகப் பெரிய மோசமான நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பல கிராமங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. வீடுகள் புதைந்து போய் விட்டன. பெரும் சேதத்தை இந்தப் பகுதிகள் சந்தித்துள்ளன.
முதல் ஆளாக உதவிய தமிழ்நாடு

கேரள மாநிலத்தை நிலை குலைய வைத்த இந்த சம்பவத்தைத் தொடர்ந்து முதல் ஆளாக தமிழ்நாடு, கேரள மாநிலத்திற்கு ரூ. 5 கோடி நிதியுதவியை அளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்தத் தொகையை அமைச்சர் எ வ வேலு இன்று திருவனந்தபுரத்திற்குப் போய் முதல்வர் பினரயி விஜயனை நேரில் சந்தித்து வழங்கினார். இதேபோல நடிகர் விக்ரமும் நிதியுதவி அளித்துள்ளார். மேலும் பலரும் உதவி செய்ய ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் முதல்வர் பினராயி விஜயன், நிதியுதவி கோரி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், இந்த சோகமான சமயத்தில், அனைவரும் இணைந்து கை கோர்த்து இந்தத் துயரிலிருந்து விடுபட்டு வர உதவ வேண்டும். யாரும் தனியாக இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். உங்களது உதவி எவ்வளவு சிறிதாக இருந்தாலும் பரவாயில்லை, அது ஒரு மாற்றத்திற்கு, நிவாரணத்திற்கு வித்திடும் என்று கூறியுள்ளார்.
நிதியுதவி செய்ய விரும்புவோர் அதை செலுத்த வேண்டிய கணக்கு விவரம்:
A/c Number : 39251566695
A/c Name: CHIEF MINISTER’S DISTRESS RELIEF FUND
Branch: City Branch, Thiruvananthapuram
IFSC : SBIN0070028 | SWIFT CODE : SBININBBT08
Account Type: Savings | PAN: AAAGD0584M
திமுக - அதிமுக.. பிரிந்து வந்து பிறந்த புதுக் கட்சிகள்.. லேட்டஸ்ட்டாக இணைந்த சசிகலா!
ஒவ்வொரு குடும்பத்திற்கு கருணைத் தொகையாக ரூ10,000 வழங்கப்படும்:எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு
இயற்கையுடன் போராடி வருகிறார் தோழர் நல்லகண்ணு.. சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன்
வேலூர் விஜய் கூட்டத்துக்கு அனுமதி கொடுப்பதில் தாமதமா?.. போலீஸ் தந்த விளக்கம்
ரயில் சேவை ரத்தால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதும் வேதனையளிக்கிறது: கனிமொழி
இனி எண்ட ஸ்டேட் கேரளா இல்ல .. கேரளம்.. பெயர் மாற்றத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தென் தமிழகத்தில் நாளை இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்... எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை!
கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைத்து ஆட்சி அமைத்தவர் ஜெயலலிதா: ஓ.பன்னீர்செல்வம்
{{comments.comment}}