திருவனந்தபுரம்: வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கேரள மாநிலத்திற்கு நல்லுள்ளம் படைத்தவர்கள் உதவிட வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட மிகப் பெரிய மோசமான நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பல கிராமங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. வீடுகள் புதைந்து போய் விட்டன. பெரும் சேதத்தை இந்தப் பகுதிகள் சந்தித்துள்ளன.
முதல் ஆளாக உதவிய தமிழ்நாடு

கேரள மாநிலத்தை நிலை குலைய வைத்த இந்த சம்பவத்தைத் தொடர்ந்து முதல் ஆளாக தமிழ்நாடு, கேரள மாநிலத்திற்கு ரூ. 5 கோடி நிதியுதவியை அளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்தத் தொகையை அமைச்சர் எ வ வேலு இன்று திருவனந்தபுரத்திற்குப் போய் முதல்வர் பினரயி விஜயனை நேரில் சந்தித்து வழங்கினார். இதேபோல நடிகர் விக்ரமும் நிதியுதவி அளித்துள்ளார். மேலும் பலரும் உதவி செய்ய ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் முதல்வர் பினராயி விஜயன், நிதியுதவி கோரி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், இந்த சோகமான சமயத்தில், அனைவரும் இணைந்து கை கோர்த்து இந்தத் துயரிலிருந்து விடுபட்டு வர உதவ வேண்டும். யாரும் தனியாக இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். உங்களது உதவி எவ்வளவு சிறிதாக இருந்தாலும் பரவாயில்லை, அது ஒரு மாற்றத்திற்கு, நிவாரணத்திற்கு வித்திடும் என்று கூறியுள்ளார்.
நிதியுதவி செய்ய விரும்புவோர் அதை செலுத்த வேண்டிய கணக்கு விவரம்:
A/c Number : 39251566695
A/c Name: CHIEF MINISTER’S DISTRESS RELIEF FUND
Branch: City Branch, Thiruvananthapuram
IFSC : SBIN0070028 | SWIFT CODE : SBININBBT08
Account Type: Savings | PAN: AAAGD0584M
தினசரி 2 முறை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும்.. செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்
"வீட்டிலிருந்தபடியே ஓபி சீட்": அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு
TET ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளுக்கு இடைக்காலத் தடை: ஐகோர்ட் அதிரடி!
ஆரோக்கியா பால் மற்றும் தயிர் விலை திடீர் உயர்வு - நாளை முதல் அமல்!
அனைத்து தகுதியான பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் : முதல்வர் விஜய் உத்தரவு
கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை...அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!
Wayanad: வயநாடு நிலச்சரிவிற்கு இது தான் காரணம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
கிரீடம் அணிந்த மொட்டுகள்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
இமயமலையில் அவதரித்த.. தனித்துவ மலர்.. பிரம்ம கமலம்!
{{comments.comment}}